குறிப்பு: *குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
1. தாராபாரதி குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில்
எது தவறானது?
அ) இவருடைய இயற்பெயர் ராதாகிருஷ்ணன்.
ஆ) 'கவிஞாயிறு' என்னும் அடைமொழி பெற்றவர்.
இ) புதிய விடியல்கள், இது
எங்கள் கிழக்கு ஆகிய நூல்களை இயற்றியவர்.
*ஈ) தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பு
நூலினை இவர் பாரதிதாசனுக்குச் சமர்ப்பித்தார்.
2. பராபரக்கண்ணி பாடலின் ஆசிரியர் தாயுமானவர்
பற்றிய கூற்றுகளை ஆராய்க:
i. திருச்சியை ஆண்ட விஜயரகுநாத சொக்கலிங்கரிடம்
தலைமைக்கணக்காயராகப் பணிபுரிந்தார்.
ii. இவரது பாடல்கள் 'தமிழ்
மொழியின் உபநிடதம்' எனப் போற்றப்படுகின்றன.
iii. இவர் கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.
அ) i மட்டும் சரி
*ஆ) i மற்றும் ii சரி
இ) ii மற்றும் iii சரி
ஈ) அனைத்தும் சரி
3. "நீங்கள் நல்லவர்" என்னும்
கவிதையைத் தமிழில் மொழிபெயர்த்த கவிஞர் யார்?
அ) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
ஆ) தாராபாரதி
*இ) புவியரசு
ஈ) எஸ். ராமகிருஷ்ணன்
4. 'ஆசிய ஜோதி' என்னும்
நூலின் ஆசிரியர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குறித்தத் தகவல்களில் சரியானதைத்
தேர்க:
அ) இவர் 20-ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
ஆ) முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப்
பணியாற்றியவர்.
இ) எட்வின் அர்னால்டு எழுதிய 'Light of
Asia' என்னும் நூலைத் தழுவி ஆசிய ஜோதியை எழுதினார்.
*ஈ) மேற்கண்ட அனைத்தும் சரி.
5. 'பாதம்' என்னும் கதை
இடம்பெற்றுள்ள 'தாவரங்களின் உரையாடல்' என்ற
சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?
*அ) எஸ். ராமகிருஷ்ணன்
ஆ) தாராபாரதி
இ) தாயுமானவர்
ஈ) கவிமணி
6. பொருத்துக (நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்):
i. உபபாண்டவம் - 1. தாராபாரதி
ii. விரல்நுனி வெளிச்சங்கள் - 2. எஸ். ராமகிருஷ்ணன்
iii. மருமக்கள்வழி மான்மியம் - 3. தாயுமானவர்
iv. பராபரக்கண்ணி - 4. கவிமணி
*2 1 4 3
1 3 4 2
2 4 1 3
4 1 2 3
7. “அகனமர்ந்து செய்யாள்
உறையும்…” என்ற குறளில் ‘செய்யாள்’ என்பது யாரைக் குறிக்கிறது?
A) கல்வி தெய்வம்
B) பூமாதேவி
*C) திருமகள்
D) காவல் தெய்வம்
8. “உடைமையுள் இன்மை
விருந்தோம்பல் ஓம்பா…” என்ற குறளில் கூறப்படும் ‘இன்மை’ எது?
A) பணமின்மை
B) அறிவின்மை
*C) விருந்தோம்பாமை
D) நண்பரின்மை
9. கீழ்க்கண்ட கூற்றுகளை
கவனிக்க:
1. விருந்தினரைப்
போற்றுவதற்காகவே இல்வாழ்க்கை நடத்தப்படுகிறது.
2. விருந்தினர் வெளியே
இருக்கும்போது தனியாக உண்பது சிறந்தது.
மேலுள்ளவற்றில் சரியானது எது?
*A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) 1 மற்றும் 2 சரி
D) 1 மற்றும் 2 தவறு
10. கீழ்க்கண்டவற்றில் தவறான
கூற்று எது?
1. விருந்தினரை முன்னே போற்றி
உணவளிப்பவன் உயர்ந்தவன்.
2. விருந்தோம்புதல் வேள்வியின்
பயன் அளவிடத்தக்கது.
A) 1 மட்டும்
*B) 2 மட்டும்
C) 1 மற்றும் 2
D) எதுவும் இல்லை
11. மிசை ஓங்கு இருமுந்நீர்'
என்ற தொடரில் அமைந்துள்ள 'ஒருபொருள் பன்மொழிச்
சொற்கள் எவை?
*மிசை, ஓங்கு
மிசை, இரு
ஓங்கு, முந்நீர்
இரு, முந்நீர்
12.
பின்வருவனவற்றுள் 'ஒருபொருள் பன்மொழி'க்குச் சரியான எடுத்துக்காட்டு எது?
கண், காது
ஆ, மா
*ஓங்கி உயர்ந்த
நெட்டெழுத்து,
13.
நன்னூலின்படி தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் மொத்த எண்ணிக்கை
எவ்வளவு?
24
32
*42
50
14.
ஓரெழுத்து ஒருமொழிகளில் அமைந்துள்ள குற்றெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?
5
4
3
*2
15.
'கோ' என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் யாது?
பசு
அம்பு
*அரசன்
பூமி
16. Strategies' என்ற ஆங்கிலச்
சொல்லுக்குரிய தமிழ்ச் சொல் எது?
தொழிற்சங்கம்
பன்முக ஆளுமை
*உத்திகள்
சமத்துவம்
17. Pseudonym' என்பதன்
தமிழ்ப் பொருள் யாது?
*புனைபெயர்
சமத்துவம்
உத்திகள்
தொழிற்சங்கம்
18.ஆன்மா' என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் எது?
Wisdom
Honour
*Soul
Illusion
19.பொருள்முதல்வாதம்' என்ற சொல்லுக்குரிய ஆங்கிலச் சொல் எது?
Passport
*Materialism
Awareness
Fine Arts
20. கற்பித்தார்' - இத்தொடரின் வேர்ச்சொல்லைக் கண்டறிக.
*கற்பி
கல்
கற்றார்
கல்வி
21. சந்திப்பிழையற்ற
வாக்கியத்தைக் கண்டறிக:
கடலை பார்க்க சென்றான்
கடலை பார்க்கச் சென்றான்
கடலைப் பார்க்க சென்றான்
*கடலைப் பார்க்கச் சென்றான்
22.ல', 'ள',
'ழ' நகர வேறுபாட்டறிந்து சரியான பொருளைத்
தேர்க: கலை - களை - கழை
அ) ஆடை - நீக்குதல் - மூங்கில்
*ஆ) அழகு - தேவையற்ற செடி - மூங்கில்
இ) மூங்கில் - கல்வி - நீக்குதல்
ஈ) தேவையற்ற செடி - ஆடை – அழகு
23. பின்வருவனவற்றுள் 'பெயர்ச்சொல்லின் வகையறிதலில்' பொருந்தாத இணை எது?
அ) காடு - இடப்பெயர்
ஆ) சித்திரை - காலப்பெயர்
இ) தித்திப்பு - பண்புப்பெயர்
*ஈ) பறவை – சினைப்பெயர்
24. 'மரபுத்
தொடர்களில் பிழை திருத்துக': "சிங்கம் அலறும், யானை பிளிறும், குதிரை கனைக்கும்." -
இத்தொடரிலுள்ள பிழை யாது?
அ) யானை பிளிறும் என்பது தவறு
ஆ) குதிரை கனைக்கும் என்பது தவறு
*இ) சிங்கம் அலறும் என்பது தவறு
ஈ) இத்தொடரில் பிழையே இல்லை
25 'பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக':
அ) பூங்கொடி தமிழ் கற்றாள்
*ஆ) பூங்கொடி தமிழ் கற்பித்தாள்
இ) பூங்கொடியால் தமிழ் கற்கப்பட்டது
ஈ) பூங்கொடி தமிழ் கல்லாள்
26. திருக்கோலம் என்பதனை பிரித்து எழுதுக.
*திரு+ கோலம்
திர்+கோலம்
திருக்+கோலம்
திர்+உ+கோலம்
27. கீழ்காண்பனவற்றுள் பொருந்தாதது எது?
பாரதி
பள்ளி
*விளையாடு
கண்
28. கீழ்க்காண்பனவற்றுள்
தவறான தொடரைக்காண்க.
ஓர் அரசியல் கட்சி
உருவெடுத்தது.
அஃது அறிவு இயக்கமாக மாறியது.
ஒரு நாட்டிற்கு இதுதான் தேவை.
*ஓர் மனிதன்
அனைத்தையும் சரி செய்ய இயலாது அனைவரும் ஒத்துழைக்க
வேண்டும். *
29. பொருந்தாத இணையைத் தேர்க.
கும்பி-வயிறு.
நீள் நிலம் - பரந்த உலகம்
*முற்றும்-நிறைவு பெறும்
பூதலம்-பூமி
30. கோமுகி என்பதன் பொருள்.
அரசனின் முகம்.
பெண்ணின் முகம்
கொடியவனின் முகம்.
*பசுவின் முகம்
31. கூற்று 1: பொருளின் உறுப்பை குறிக்கும் பெயர் சினைப் பெயர்.
கூற்று 2 : காவியா இனிமையாகப் பேசுவாள் - இது தொழிற்பெயர்
கூற்று 3: பூங்கா என்பது பொருட்பெயர் ஆகும்
கூற்று 1,2,3 சரி.
கூற்று 1,2 சரி 3தவறு
*கூற்று 1சரி 2,3தவறு
கூற்று 1,2,3தவறு.
32. காரணப் பொதுப் பெயர்
அல்லாததை தேர்ந்தெடுக்க.
பறவை.
அணி
*காடு
வானூர்தி
33. மலை+எலாம் சேர்த்து எழுதுக.
மலைஎலாம்.
மலைஎல்லாம்
*மலையெலாம்
மலையெல்லாம்.
34. கூற்று
1: இயல்பு நவிற்சி அணிக்கு தன்மை நவிற்சி அணி என்ற பெயரும் உண்டு.
கூற்று 2: உயர்வு நவிற்சி அணிக்கு பன்மை நவிற்சி அணி என்ற பெயரும் உண்டு.
கூற்று 1,2 சரி
கூற்று 1,2தவறு
*கூற்று 1சரி 2 தவறு
கூற்று 1தவறு 2 சரி
35. திருக்கழுக்குன்றம்
பிரித்து எழுதுக.
*திரு+கழு+குன்றம்*.
திரு+கழுக்கு+குன்றம்
திரு+கழுகு+குன்றம்.
திரு+கழு+குன்று+அம்
36. பத்தியைப் படித்து வினாக்களுக்குவிடை எழுதுக.
காந்தியடிகள் இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்
என்பதை நாடு நன்கு அறியும், பெண்கள் முன்னேற்றம், சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும்
அவர் பாடுபட்டார். எளிமையை ஓர் அறமாகப் போற்றினார். இந்தியாவில் அவர் காலடி படாத
இடமே இல்லை, தமிழ்நாட்டின் மீதும் தமிழ்மொழியின் மீதும்
காந்தியடிகள் அளவுகடந்த பற்று கொண்டார்.
மனிதர்களிடம் உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது
என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார்.
காந்தியடிகளுக்குத்
தொடர்பில்லாத ஒன்று எது?
பெண்கள்முன்னேற்றம்
*இட
ஒதுக்கீடு
தீண்டாமை
ஒழிப்பு
இந்திய
விடுதலை
37. காந்தியடிகள் இந்திய விடுதலைக்குப்
பாடுபட்டவர் என்பதை நாடு நன்கு அறியும், பெண்கள் முன்னேற்றம்,
சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு
முதலியவற்றுக்காகவும் அவர் பாடுபட்டார். எளிமையை ஓர் அறமாகப் போற்றினார்.
இந்தியாவில் அவர் காலடி படாத இடமே இல்லை, தமிழ்நாட்டின்
மீதும் தமிழ்மொழியின் மீதும் காந்தியடிகள் அளவுகடந்த பற்று கொண்டார்.
மனிதர்களிடம் உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது
என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார்.
காந்தியடிகள்
போற்றிய அறம்?
தூய்மை
வாய்மை
*எளிமை
நேர்மை
38. காந்தியடிகள் இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர் என்பதை நாடு நன்கு அறியும்,
பெண்கள் முன்னேற்றம், சமுதாய மறுமலர்ச்சி,
தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் அவர் பாடுபட்டார். எளிமையை
ஓர் அறமாகப் போற்றினார். இந்தியாவில் அவர் காலடி படாத இடமே இல்லை, தமிழ்நாட்டின் மீதும் தமிழ்மொழியின் மீதும் காந்தியடிகள் அளவுகடந்த பற்று
கொண்டார்.
மனிதர்களிடம் உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது
என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார்.
உயர்வுதாழ்வு
என்பது
நேரிணைத்
தொடர்
*எதிரிணைத்
தொடர்
ஓரிணைத்
தொடர்
ஈரிணைத்
தொடர்
39.
‘பசுமரத்து ஆணிபோல’ உவமைத் தொடருக்கான குறிப்புப் பொருள் தெரிக.
உடலைத்
துளைத்தல்
சொல்லால்
சுடுதல்
*மனதில்
பதியவைத்தல்
பேச்சில் கூர்மையடைதல்
40. பொருத்தமான சொல்லைத் தெரிக.
துயரம் தாழாமல் கண்ணீர்
*சொரிந்தான்
வடித்தான்
பெருக்கினான்
உகுத்தான்
1. ஒரு எண்ணின் 35% + 45% = 240 எனில், அந்த எண்ணின் 10% என்ன?
A) 25
*B) 30
C) 35
D) 40
2. ஒரு எண்ணின் 40% + மற்றொரு எண்ணின் 60% =
380.
முதல் எண்ணின் 60% + இரண்டாவது எண்ணின் 40% =
320.
இரண்டு எண்களின் கூட்டுத்தொகை என்ன?
A) 600
B) 650
*C) 700
D) 750
3. ஒரு பொருளின் விலை முதலில் 25% உயர்ந்து
பின்னர் 20% குறைகிறது. மீண்டும் 10% உயர்ந்தால், ஆரம்ப
விலையுடன் ஒப்பிடும்போது நிகர மாற்றம் என்ன?
A) மாற்றமில்லை
B) 8% உயர்வு
*C) 10% உயர்வு
D) 12% உயர்வு
4. ஒரு எண்ணை 20% அதிகரித்து, பின்னர் 25% குறைத்தால் 360 கிடைக்கிறது. ஆரம்ப எண் என்ன?
A) 350
B) 375
*C) 400
D) 420
5. ஒரு பள்ளியில் 560 மாணவர்கள் உள்ளனர். அதில்
320 பேர் சிறுவர்கள் எனில், சிறுமிகளின் சதவீதம் என்ன?
A) 40%
*B) 42.86%
C) 45%
D) 57.14%
6. ஒரு உலோகக் கலவையில் 26% தாமிரம் உள்ளது. 260
கிராம் தாமிரம் பெற வேண்டுமெனில், மொத்த கலவையின் எடை என்ன?
A) 900 கிராம்
B) 950 கிராம்
*C) 1000 கிராம்
D) 1100 கிராம்
7. ₹110க்கு வாங்கிய சட்டையை ₹90க்கு விற்றால்,
நட்டச் சதவீதம் என்ன?
A) 15%
*B) 18 2/11%
C) 20%
D) 22%
8. ஒரு பொருள் ₹200க்கு வாங்கி 4% நட்டத்தில்
விற்கப்பட்டது எனில், நட்டத் தொகை என்ன?
A) ₹4
B) ₹6
*C) ₹8
D) ₹10
9. ஒரு எண்ணின் 45% மற்றும் 35% இன்
கூட்டுத்தொகை 320 எனில், அந்த எண்ணின் 15% என்ன?
A) 50
*B) 60
C) 75
D) 90
10. ஒரு பொருளின் விலை 25% உயர்த்தப்பட்டு
பின்னர் 20% குறைக்கப்படுகிறது. ஆரம்ப விலை ₹2400 எனில் இறுதி விலை என்ன?
A) ₹2300
*B) ₹2400
C) ₹2500
D) ₹2600
11. ஒரு தேர்வில் தேர்ச்சி பெற 40% மதிப்பெண்
தேவை. ஒரு மாணவர் 180 மதிப்பெண் பெற்று 20 மதிப்பெண் குறைவால் தோல்வியடைந்தார்
எனில், மொத்த மதிப்பெண் என்ன?
A) 400
B) 450
*C) 500
D) 550
12. ஒரு எண்ணை 30% அதிகரித்து பின்னர் 20%
குறைத்தால், நிகர மாற்றம் என்ன?
*A) 4% அதிகரிப்பு
B) 4% குறைவு
C) 6% அதிகரிப்பு
D) மாற்றமில்லை
13. ஒரு நகரின் மக்கள் தொகை முதல் ஆண்டில் 20%
உயர்ந்து அடுத்த ஆண்டில் 10% குறைந்தது. ஆரம்ப மக்கள் தொகை 25000 எனில் இறுதி
மக்கள் தொகை என்ன?
A) 26000
B) 26500
*C) 27000
D) 27500
14. ஒரு எண்ணின் 60% என்பது மற்றொரு எண்ணின் 75%
ஆகும். முதல் எண் 250 எனில் இரண்டாவது எண் என்ன?
A) 180
B) 190
*C) 200
D) 210
15. ஒரு கடைக்காரர் ஒரு பொருளை 20% இலாபத்தில்
விற்றார். விற்ற விலை ₹9600 எனில், அடக்க விலை என்ன?
A) ₹760
B) ₹78000
*C) ₹8000
D) ₹8200
16. ஒரு பள்ளியில் 75% மாணவர்கள் தமிழையும்,
65% மாணவர்கள் ஆங்கிலத்தையும் படிக்கின்றனர். 15% மாணவர்கள்
இரண்டையும் படிக்கவில்லை எனில், இரண்டையும் படிக்கும்
மாணவர்களின் சதவீதம் என்ன?
A) 45%
B) 50%
*C) 55%
D) 60%
17. ஒரு எண்ணின் 25% + 35% = 180 எனில், அந்த எண்ணின் 40% என்ன?
A) 100
B) 110
*C) 120
D) 140
18. ஒரு பொருளை ₹2400க்கு வாங்கி 25% இலாபத்தில்
விற்றால், விற்பனை விலை என்ன?
A) ₹2800
B) ₹2900
*C) ₹3000
D) ₹3200
19. ஒரு எண்ணின் 20% மற்றும் 30% இன்
வித்தியாசம் 45 எனில், அந்த எண்ணின் 50% என்ன?
A) 200
*B) 225
C) 250
D) 275
20. ஒரு பள்ளியில் 80% மாணவர்கள் தேர்ச்சி
பெற்றனர். 120 மாணவர்கள் தோல்வியடைந்திருந்தால், மொத்த
மாணவர்கள் எத்தனை?
A) 500
B) 550
*C) 600
D) 650
21ஒரு ரயில் 120 மீ நீளம். அது 180 மீ பாலத்தை
15 விநாடிகளில் கடக்கிறது. ரயிலின் வேகம் என்ன?
A) 60 km/hr
*B) 72 km/hr
C) 80 km/hr
D) 90 km/hr
22. ஒரு மனிதர் கிழக்கே 10 மீ நடந்து, வலப்புறம் திரும்பி 10 மீ நடந்தார். மீண்டும் வலப்புறம் திரும்பி 10 மீ
நடந்தால், அவர் தொடங்கிய இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில்
இருப்பார்?
A) 0 மீ
*B) 10 மீ
C) 20 மீ
D) 30 மீ
23.ஒரு மனிதரின் வயது 5 ஆண்டுகளுக்கு முன் 20.
10 ஆண்டுகளுக்கு பிறகு வயது என்ன?
A) 30
*B) 35
C) 40
D) 45
24. 5 பூனைகள் 5 எலிகளை 5 நிமிடங்களில்
பிடித்தால், 1 பூனை 1 எலியை பிடிக்க எத்தனை நிமிடம் ஆகும்?
A) 1
B) 3
*C) 5
D) 25
25. ஒரு மாதத்தில் 28 நாட்கள் கொண்ட மாதங்கள்
எத்தனை?
A) 1
B) 2
C) 6
*D) 12
1 திட்டக்குழு
தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
1 இது ஒரு அரசாங்க
தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
2 இதன் தலைவராகப்
பிரதமர் பதவி வழி (Ex-officio) செயல்படுவார்.
3 மாநில
முதலமைச்சர்கள் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
*A) 1 மற்றும்
2 மட்டும்
B) 2 மற்றும்
3 மட்டும்
C) 1 மற்றும்
3 மட்டும்
D) அனைத்தும் சரி
2 கூற்று (A): அலாவுதீன் கில்ஜி பிரபுக்களின்
சொத்துக்களைப் பறிமுதல் செய்து, திருமண உறவுகளுக்குக் கடும்
கட்டுப்பாடுகளை விதித்தார்.
காரணம் (R): பிரபுக்கள் ஒன்று கூடுவதும் செல்வம் சேர்ப்பதும் அரசிற்கு எதிரான
சதித்திட்டங்களுக்கு வழிவகுக்கும் என்று அவர் கருதினார்.
*A] கூற்று மற்றும் காரணம் சரி கூற்றை காரணம் விளக்குகிறது
B] கூற்று மற்றும் காரணம் சரி கூற்றை காரணம் விளக்கவில்லை
C] கூற்று சரி காரணம் தவறு
D] கூற்று தவறு காரணம் சரி
3 சூரியக் குடும்பம்
அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்
A. ஆண்டிரோமெடா
B. மெகாலனிக்
*C.. பால்வெளி
D. ஸ்டார்பர்ஸ்ட்
4 நான்காவது
ஐந்தாண்டுத் திட்டம் (1969–1974) குறித்த பின்வரும்
கூற்றுகளை ஆராய்க:
1 இத்திட்டம்
'அசோக் மித்ரா மற்றும் எஸ். தட்டே' ஆகியோரின் திறந்த நிலை சீரான மாதிரி (Open Consistency Model)-யை அடிப்படையாகக் கொண்டது.
2 இத்திட்டத்தின்
போதுதான் 'வளர்ச்சியுடன் கூடிய ஸ்திரத்தன்மை' (Growth
with Stability) மற்றும் 'தற்சார்பு நிலை'
ஆகிய இலக்குகள் முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக முன்வைக்கப்பட்டன.
3 1971 இந்திய-பாகிஸ்தான் போரினால் ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக, இத்திட்டத்தின்
உண்மையான வளர்ச்சி விகிதம் (3.3%), அதன் இலக்கை விட
(5.7%) மிகக் குறைவாக இருந்தது.
A) 1 மற்றும்
2 மட்டும் சரி
B) 2 மற்றும்
3 மட்டும் சரி
C) 1 மற்றும்
3 மட்டும் சரி
*D) 1, 2 மற்றும்
3 அனைத்தும் சரி
5. சூரியனுக்கு
அருகாமையில் உள்ள கோள்
*A. புதன்
B. வெள்ளி
C. வியாழன்
D. சந்திரன்
6. முகமது-பின்-துக்ளக்
விவசாயத்தை மேம்படுத்த உருவாக்கிய தனித்துறையின் பெயர் என்ன?
A) திவான்-இ-அர்ச்
B) திவான்-இ-இன்ஷா
*C) திவான்-இ-அமிர் கோஹி
D) திவான்-இ-ரியாசத்
7) மீசோஸ்பியர் குறித்த சரியான கூற்றை தேர்வு செய்க?
1. மீசோஸ்பியர் என்பது வளிமண்டலத்தில் 50 கி.மீ முதல் 80 கி.மீ உயரம்வரை காணப்படுகிறது
2. இந்த அடுக்கு ஜெட்விமானங்கள் பறப்பதற்கு ஏதுவாக உள்ளது
3. மீசோஸ்பியரில் உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை குறைகின்றது
4. புவியை நோக்கி வரும் விண்கற்கள் இவ்வடுக்கில் நுழைந்ததும்
எரிவிக்கப்படுகின்றன
8 பின்வரும்
நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அடுக்குக:
1 மக்கள் திட்டம்
2 பம்பாய் திட்டம்
3 விஸ்வேஸ்வரய்யா
திட்டம்
4 சர்வோதயா திட்டம்
*A) 3 -
2 - 1 - 4
B) 2 -
3 - 4 - 1
C) 3 -
1 - 2 - 4
D) 4 -
2 - 1 - 3
9) ____மேகங்கள் செம்மறியாட்டுமேகங்கள் அல்லது 'கம்பளிக்கற்றை மேகங்கள்' என்றுஅழைக்கப்படுகிறது
10 எந்த ஐந்தாண்டுத்
திட்டம் 'காட்கில் யோஜனா' (Gadgil Yojana) என்று அழைக்கப்படுகிறது?
A) முதலாவது
ஐந்தாண்டுத் திட்டம்
B) இரண்டாவது
ஐந்தாண்டுத் திட்டம்
*C) மூன்றாவது
ஐந்தாண்டுத் திட்டம்
D) நான்காவது
ஐந்தாண்டுத் திட்டம்
11. இரண்டாவது சிறிய
கோள்
A. புதன்
*B. செவ்வாய்
C. வியாழன்
D. நெப்டியூன்
13 கூற்று
(A): திட்டக்குழு ஒரு அரசியலமைப்புச் சட்டம் சாராத அமைப்பாகும்
காரணம்
(R): இது நாடாளுமன்றத்தின் சட்டத்தினால் உருவாக்கப்படாமல், மத்திய அமைச்சரவையின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
*A) (A) மற்றும்
(R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்.
B) (A) மற்றும்
(R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமல்ல.
C) (A) சரி,
ஆனால் (R) தவறு.
D) (A) தவறு,
ஆனால் (R) சரி.
14 கூற்று
(A): ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் (1974–1979) அதன் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு ஒரு ஆண்டிற்கு முன்பே, அதாவது 1978 மார்ச் மாதத்திலேயே நிறுத்தப்பட்டது.
காரணம் (R):
1977-ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா
அரசு, முந்தைய காங்கிரஸ் அரசின் ஐந்தாண்டு திட்ட முறையை
நிராகரித்து 'சுழல் திட்டம்' (Rolling Plan) என்ற புதிய முறையைக் கொண்டுவந்தது.
*A) (A) மற்றும்
(R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமாகும்.
B) (A) மற்றும்
(R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமல்ல.
C) (A) சரி, ஆனால் (R) தவறு.
D) (A) தவறு, ஆனால் (R) சரி.
15) கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க?
கூற்று; வடகிழக்கு பருவமழையின் போது தமிழகம் குறைவான மழை பொழிகிறது
காரணம்; தமிழ்நாடு மலைமறையவுப் பகுதியில் அமைந்துள்ளதால் குறைவான மழையைப் பெறுகிறது.
D) கூற்று காரணம் இரண்டும் தவறு
16. இவற்றில் எது
குறுங்கோள்?
A. சந்திரன்
B. புதன்
C. நெப்டியூன்
,*D. புளூட்டோ
17
திட்டக்குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றியவர்களில் 'இந்தியக் குடியரசுத் தலைவராக' உயர்ந்தவர் யார்?
A) வி.வி. கிரி
*B) பிரணாப் முகர்ஜி
C) ஆர். வெங்கட்ராமன்
D) சங்கர் தயாள்
சர்மா
18 சரியான
கூற்றுகளைத் தேர்ந்தெடு?
எட்டாவது
ஐந்தாண்டுத் திட்டம் (1992–1997) பற்றிய
பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1 இத்திட்டம் ஜான்
டபிள்யூ. மில்லர் (John W. Miller) மாதிரியை
அடிப்படையாகக் கொண்டது.
2 மனிதவள
மேம்பாட்டிற்கு (Human Resource Development) அதாவது கல்வி,
சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பிற்கு இத்திட்டத்தில் தான்
முதன்முறையாக மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட்டது.
3 இத்திட்ட காலத்தில்
தான் புதிய பொருளாதாரக் கொள்கையான தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல்
மற்றும் உலகமயமாக்கல் (LPG) இந்தியாவில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
A) 1 மற்றும்
2 மட்டும் சரி
B) 1 மற்றும்
3 மட்டும் சரி
C) 2 மற்றும்
3 மட்டும் சரி
*D) 1, 2 மற்றும்
3 அனைத்தும் சரி
19) பாரத் முன்னறிவிப்பு அமைப்பு எப்பொழுது தொடங்கப்பட்டது?
20. இவற்றில் எது
வாயு கோள்?
A. புதன்
B.வெள்ளி
C. பூமி
*D.வியாழன்
21. எந்த நூற்றாண்டை ஒட்டி
தமிழகத்தில் பக்தி இயக்கம் அல்லது வழிபாட்டு முறைகளில் புத்தெழுச்சி ஏற்ப்பட்டது?
*அ. கி.பி 7
ஆ. கி.பி 8
இ. கி.பி. 11
ஈ. கி.பி. 12
22 1938-ல் நேதாஜி
சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய திட்டக்குழுவின் தலைவர் யார்?
A) வல்லபாய் படேல்
*B) ஜவஹர்லால் நேரு
C) லால் பகதூர்
சாஸ்திரி
D) எஸ்.என். அகர்வால்
23. தவறான கூற்றுகளைத்
தேர்ந்தெடுக்க.
1. திருவாய் மொழி என்னும் நூலை
இயற்றியவர் பெரியாழ்வார்.
2. இந்நூல் திராவிட வேதம் என
அழைக்கப்படுகிறது.
3. இந்நூலில் 102 பாசுரங்கள் இடம் பெற்றுள்ளன.
அ. 1 மட்டும்
ஆ. 3 மட்டும்
*இ. அ மற்றும்
ஆ
ஈ. அனைத்தும் சரி
24 பல்வேறு
திட்டங்களின் "முக்கிய நோக்கங்களை" அதன் மதிப்பீட்டோடு பொருத்துக:
பட்டியல்
1 - பட்டியல் 2.
a) 6-வது திட்டம்
(1980–85) - 1. வறுமை ஒழிப்பு மற்றும் தற்சார்பு (Garibi
Hatao)
b) 9-வது திட்டம்
(1997–02) - 2. சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி மற்றும் சமத்துவம்
c) 11-வது திட்டம்
(2007–12) - 3. வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம்
(Modernization)
d) 5-வது திட்டம்
(1974–79) - 4. விரைவான மற்றும் அதிக உள்ளடக்கிய வளர்ச்சி
(Inclusive Growth).
*A)
a-3, b-2, c-4, d-1
B) a-1,
b-2, c-4, d-3
C) a-3,
b-4, c-2, d-1
D) a-2,
b-3, c-1, d-4
25. போருத்துக.
1. 1, 2, 3 திருமுறைகள் - திருநாவுக்கரசர்
2. 4, 5, 6 திருமுறைகள் - திருஞானசம்பந்தர்
3. 7ஆம் திருமுறை - திருமூலர்
4. 8ஆம் திருமுறை - சுந்தரர்
5. 10ஆம் திருமுறை - மாணிக்கவாசகர்
அ. 1 2 4 5 3
*ஆ. 2 1 4 5 3
இ 2 1 3 4 5
ஈ. 1 2 4 3 5
26 பொருத்துக;
பட்டியல்
I (திட்டம்) - பட்டியல் II (முக்கிய நோக்கம்/தொடர்பு)
(a) விஸ்வேஸ்வரய்யா
திட்டம் - 1. வேளாண்மை மற்றும் கிராமப்புறப் பொருளாதாரம்
(b) பம்பாய் திட்டம்
- 2 நுகர்வு பொருட்களை விட கனரக தொழில்களுக்கு முக்கியத்துவம்.
(c) காந்திய திட்டம்
- 3. தொழில்மயமாக்கல் மூலம் தேசிய வருமானத்தை இரட்டிப்பாக்குதல்
(d) மக்கள் திட்டம்
- 4. மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசு பூர்த்தி செய்தல்
*A)
(a)-3, (b)-2, (c)-1, (d)-4
B)
(a)-3, (b)-1, (c)-2, (d)-4
C)
(a)-1, (b)-2, (c)-3, (d)-4
D)
(a)-2, (b)-4, (c)-1, (d)-3
27. சரியான இணை/இணைகளைத் தேர்வு செய்க.
1. திருநாவுக்கரசர் - மருள்நீக்கியார்
2. சுந்தரர் - ஆளுடைய பிள்ளை
3. திருஞானசம்பந்தர் - தம்பிரான் தோழன்
அ. 1, 2, 3
ஆ. 1, 2
இ. 1,3
*ஈ. மேற்கண்ட
எதுவுமில்லை
28 கூற்று
(A): இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1956-61) கனரகத் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
காரணம்
(R): பி.சி. மஹாலனோபிஸ்
மாதிரி, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைத்
தொழில்களின் வளர்ச்சி அவசியம் என்று வலியுறுத்தியது.
*A) (A) மற்றும்
(R) இரண்டும் சரி, (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமாகும்.
B) (A) மற்றும்
(R) இரண்டும் சரி, ஆனால் (R) சரியான விளக்கமல்ல.
C) (A) சரி, ஆனால் (R) தவறு.
D) (A) தவறு, ஆனால் (R) சரி.
29. எங்கு நடன முத்திரைகளுடன்
சிற்ப்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன?
அ. கழுகு மலை
ஆ. மாமல்ல புரம்
*இ. நார்த்தாமலை
ஈ. தஞ்சை பெரிய கோயில்
30 திட்டக்குழுவின்
கட்டமைப்பு குறித்த பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?
I. திட்டக்குழுவின்
தலைவர் எப்போதும் இந்தியப் பிரதமராக இருப்பார்.
II. திட்டக்குழுவில்
நிதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் எப்போதும் பகுதிநேர உறுப்பினர்களாக
இருப்பார்கள்.
III. திட்டக்குழுவின்
உறுப்பினர்களின் எண்ணிக்கை அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது.
A) I மட்டும் சரி
*B) I மற்றும்
II மட்டும் சரி
C) I மற்றும்
III மட்டும் சரி
D) அனைத்தும் சரி
31. மஹாபலிபுரத்திலுள்ள சிறப்பு
மிக்க கடற்கரைக் கோயிலைக் கட்டிய பல்லவ அரசர் யார்?
அ. மஹேந்திரவர்மன்
ஆ. முதலாம் நரசிம்மவர்மன்
*இ. இரண்டாம்
நரசிம்ம வர்மன்
ஈ. நந்திவர்மன்
32 பன்னிரண்டாவது
ஐந்தாண்டுத் திட்டம் (2012-17) பற்றிய கூற்றுகளை ஆராய்க:
i. இதன் முழக்கம்
"விரைவான, நிலையான மற்றும் கூடுதல்
உள்ளடக்கிய வளர்ச்சி" என்பதாகும்.
ii. இதுவே
இந்தியாவின் கடைசி ஐந்தாண்டு திட்டமாகும்.
iii. இத்திட்டத்தின்
இலக்கு வளர்ச்சி விகிதம் 9% ஆக நிர்ணயிக்கப்பட்டு பின்னர்
8% ஆகக் குறைக்கப்பட்டது.
A) i மட்டும்
B) i மற்றும்
ii மட்டும்
*C) i, ii மற்றும்
iii அனைத்தும்
D) எதுவும் இல்லை
33. மாமல்ல புரத்திலுள்ள நினைவுச்
சின்னங்களும், கோயில்களும் யுநஸ்கோவால் உலகப் பாரம்பரியச்
சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு எது?
அ. 1983
*ஆ. 1984
இ. 1985
ஈ. 1986
34 திட்டக்குழு
கலைக்கப்பட்டது தொடர்பான சரியான கூற்றைத் தேர்வு செய்க:
I. திட்டக்குழு
2014, ஆகஸ்ட் 13 அன்று கலைக்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டது.
II. இதற்குப் பதிலாக
'நிதி ஆயோக்' (NITI Aayog) என்ற புதிய அமைப்பு
2015, ஜனவரி 1 அன்று உருவாக்கப்பட்டது.
III. திட்டக்குழுவின்
கடைசி துணைத் தலைவர் மன்மோகன் சிங் ஆவார்.
*A) I மற்றும்
II மட்டும்
B) II மற்றும்
III மட்டும்
C) I மற்றும்
III மட்டும்
D) அனைத்தும்
சரி
35. முதன் முதலில் சிதம்பரம்
நடராஜர் கோயில் ஊரைக்கு பொன் தகடு வேய்ந்ததால் "பொன் வேய்ந்த பெருமாள்"
எனப் புகழப்பட்ட அரசர் யார்?
அ. தஞ்சை கொண்டான்
*ஆ. மதுரை
கொண்டான்
இ. ஜயங்கொண்டான்
ஈ. கடாரங்கொண்டான்
36 ஆறாவது (1980–85) மற்றும் ஏழாவது
(1985–90) ஐந்தாண்டுத் திட்டங்களின் மதிப்பீடு குறித்த சரியான
கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்:
1 ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் வறுமை ஒழிப்பை (Garibi
Hatao) நோக்கமாகக் கொண்டு, 'முதலீட்டு மாதிரி'
(Investment Model)-யைப் பின்பற்றி வெற்றியைப் பெற்றது.
2 ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம் வறுமை ஒழிப்பில் 'வளர்ச்சி அணுகுமுறைக்கு' (Growth Approach) மாறாக
'நேரடி தாக்குதல் அணுகுமுறை' (Direct Attack Approach)-யைக் கையாண்டது.
3 ஏழாவது திட்டத்தின் போதுதான் முதன்முறையாகப் பொதுத்துறை
முதலீட்டை விடத் தனியார் துறை முதலீட்டுக்கு அதிக முன்னுரிமை மற்றும் நிதி
ஒதுக்கப்பட்டது.
A) 1 மற்றும் 2 மட்டும் சரி
*B) 1 மற்றும் 3 மட்டும் சரி
C) 2 மற்றும் 3 மட்டும் சரி
D) 1, 2 மற்றும் 3 அனைத்தும் சரி
37. செப்புத் திரு மேனிகளின்
பொற்காலம் யாருடையது?
அ. சேரர்
*ஆ. சோழர்
இ. பாண்டியர்
ஈ. பல்லவர்
38
அமைப்புகள் மற்றும் அவற்றின் பணிகளைப் பொருத்துக:
பட்டியல் 1 - பட்டியல்
2
(a) திட்டக்குழு
- 1. திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளித்தல்
(b) தேசிய வளர்ச்சிக்
குழு (NDC) - 2. திட்டங்களை உருவாக்குதல் மற்றும் ஆலோசனைகள்
வழங்குதல்
(c) நிதி ஆயோக்
- 3 மாநிலங்களுக்கு இடையேயான மோதல்களை தீர்த்தல்
(d) மாநிலத் திட்டக்
குழு - 4. கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்துதல்
A)
(a)-1, (b)-2, (c)-4, (d)-3
*B)
(a)-2, (b)-1, (c)-4, (d)-3
C)
(a)-2, (b)-3, (c)-1, (d)-4
D)
(a)-4, (b)-1, (c)-2, (d)-3
39. தமிழகத்திலுள்ள உலோக படிமங்கள் செய்யும் பயிற்சி
நிலயங்களுள் பொருந்தாதது எது?
அ. சுவாமி மலை
*ஆ. மாமல்ல
புரம்
இ. கும்பகோனம்
ஈ. மதுரை
40 இந்தியாவின்
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் (2002–2007) குறித்த பின்வரும்
கூற்றுகளில் எவை சரியானவை?
1 இத்திட்டம்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) ஆண்டுக்கு
8% வளர்ச்சியடையச் செய்வதை இலக்காகக் கொண்டது.
2 2007-ஆம்
ஆண்டிற்குள் வறுமை விகிதத்தை 20%-ஆகக் குறைப்பதையும்,
கல்வியறிவை 75%-ஆகக் கூட்டுவதையும் சமூக-பொருளாதார இலக்காகக் கொண்டிருந்தது.
3 பிராந்திய
சமநிலையின்மையைக் (Regional Inequalities) குறைக்க, முதன்முறையாக மாநில வாரியான வளர்ச்சி இலக்குகளை (State-wise
targets) இத்திட்டம் நிர்ணயித்தது.
A) 1 மற்றும்
3 மட்டும் சரி
B) 2 மற்றும்
3 மட்டும் சரி
C) 1 மற்றும்
2 மட்டும் சரி
*D) 1, 2 மற்றும்
3 அனைத்தும் சரி
41. பொருத்துக.
1. அஹிம்சை – உயிரினங்களை
துன்புருத்தாமை
2. சத்யஆ – உண்மை
பேசுதல்
3. அபரிக்ரஹஆ - திருடாமை
4. பிரம்மச்சரியஆ – திருமனம் செய்து கொள்ளாமை
5. அஸ்தேயா – செல்வங்கள் மீது பேராசை
இல்லாமை
அ. 1 2 3 4
5
*ஆ. 1 2 5 4 3
இ. 1 2 4 3
5
ஈ. 1 2
4 5 3
42 1934-ல் 'இந்தியாவிற்கான திட்டமிட்ட பொருளாதாரம்' (Planned Economy for
India) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A) ஜவஹர்லால் நேரு
*B) எம். விஸ்வேஸ்வரய்யா
C) மகாத்மா காந்தி
D) எம்.என். ராய்
43. சரியானக் கூற்றுகளைத்
தேர்ந்தெடுக்க.
1. தமிழர்கள் சமணத்தின் திகம்பரப்
பிரிவை சார்ந்திருந்தனர்.
2. கலப்பிரர்கள் சமண சமயத்தின்
ஆதரவாளர்களாய் இருந்தனர்.
*அ. இரண்டும் சரி
ஆ. இரண்டும் தவறு
இ. 1 சரி 2 தவறு
ஈ. 1 தவறு 2 சரி
44 கூற்று
(A): 1990 முதல் 1992 வரையிலான காலகட்டத்தில்
எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, இரண்டு
ஓராண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
காரணம்
(R): இக்காலகட்டத்தில் இந்தியா கடுமையான அந்நியச் செலாவணி
நெருக்கடியைச் (Balance of Payments Crisis) சந்தித்ததுடன்,
மத்தியில் கடுமையான அரசியல் ஸ்திரத்தன்மையின்மையும் நிலவியது.
*A) (A) மற்றும்
(R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமாகும்.
B) (A) மற்றும்
(R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமல்ல.
C) (A) சரி, ஆனால் (R) தவறு.
D) (A) தவறு, ஆனால் (R) சரி.
45. சரியானக் கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க.
1. புகழ்ப் பெற்ற அஜந்தா
சுவரோவியங்களுடன் ஒப்புமைக் கொண்ட சுவரோவியங்கள் சித்தன்னவாசலில் இடம்பெற்றுள்ளது.
2. இக்கோயில் 1968-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் தொல்லியல் துறைப் பாதுகாப்பின் கீழ்
கொண்டுவரப்பட்டது.
அ. இரண்டும் சரி
ஆ. இரண்டும் தவறு
*இ. 1 சரி
2 தவறு
ஈ. 1 தவறு 2 சரி
46 திட்டமிடல்
முன்மொழிவுகள் மற்றும் அவற்றின்ணண பின்னணி - பொருத்துக
பட்டியல்
1 - பட்டியல் 2
(a) திட்டமிடல்
மற்றும் மேம்பாட்டுத் துறை (1944) - 1. ஸ்ரீமன் நாராயண்
அகர்வால்
(b) இந்தியப்
பொருளாதாரத் திட்டமிடல் ஆணையம் (1938) - 2. சர் அர்தேஷிர்
தலால்
(c) கிராமப்புற
முன்னேற்றத்திற்கான வார்டு திட்டம் - 3. சுபாஷ் சந்திர போஸ்
(d) இந்திய தொழிலாளர்
கூட்டமைப்பு - 4. எம் என் ராய்
*A)
(a)-2, (b)-3, (c)-1, (d)-4
B)
(a)-3, (b)-2, (c)-4, (d)-1
C)
(a)-2, (b)-1, (c)-3, (d)-4
D)
(a)-4, (b)-3, (c)-1, (d)-2
47. சரியானக் கூற்றுகளைத்
தேர்ந்தெடுக்க.
1. புத்தர் தமது பரப்புரைகளை பாலி
மொழியில் போதனை செய்தார்.
2. புத்தரின் போதனைகள் ப்ராகிருத
மொழியில் எழுதப்பட்டது.
அ. இரண்டும் சரி
*ஆ. இரண்டும்
தவறு
இ. 1 சரி 2 தவறு
ஈ. 1 தவறு 2 சரி
48 கூற்று
(A): ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1997–2002) நிர்ணயிக்கப்பட்ட 6.5% GDP வளர்ச்சி இலக்கை
இந்தியாவால் எட்ட முடியவில்லை (உண்மை வளர்ச்சி 5.4%).
காரணம்
(R): இத்திட்டக் காலத்தில் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடி
(Asian Financial Crisis - 1997) மற்றும் 1998 அணு ஆயுதச் சோதனைக்குப் பின் சர்வதேச நாடுகள் இந்தியா மீது விதித்த
பொருளாதாரத் தடைகள் இதன் முக்கிய காரணங்களாகும்.
*A) (A) மற்றும்
(R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமாகும்.
B) (A) மற்றும்
(R) இரண்டும் சரி, ஆனால் (R) சரியான விளக்கமல்ல.
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
49 தேசிய வளர்ச்சிக்
குழு (National Development Council - NDC) மற்றும்
திட்டக்குழு இடையேயான உறவு குறித்து பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
1. திட்டக்குழு
திட்டங்களைத் தயாரிக்கும்; தேசிய வளர்ச்சிக் குழு
அத்திட்டங்களைப் பரிசீலித்து ஒப்புதல் அளிக்கும்.
2. திட்டக்குழுவின்
உறுப்பினர்கள் அனைவரும் தேசிய வளர்ச்சிக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
3. தேசிய வளர்ச்சிக்
குழுவின் தலைவராகத் திட்டக்குழுவின் துணைத் தலைவர் செயல்படுவார்.
*A) 1 மற்றும்
2 மட்டும்
B) 1 மட்டும் சரி
C) 2 மற்றும்
3 மட்டும்
D) அனைத்தும் சரி
50. நாகப்பட்டினத்தில் இருந்த
சூடாமணி விகாரத்திற்கு ஆதரவளித்த சோழ அரசர் யார்?
அ. பராந்தகன்
ஆ. விஜயாலயன்
*இ. ராஜராஜன்
ஈ. ராஜேந்திரன்
51. கூற்று அலாவுதீனுக்கு எதிரான சித்தூர் போரில் ராஜபுத்திரர்கள் ஜவகர்
எனப்படும் சடங்கை மேற்கொண்டனர்
காரணம்
போரில் தாங்கள் தோற்று விடுவோம் என்ற நிலையில் ராஜபுத்திரர்களால் தங்கள் முறைப்படி
ஆண்களும் பெண்களும் உயிரைத்துறப்பதற்காக மேற்கொள்ளப்படும் சடங்கு
*A] கூற்று மற்றும் காரணம் சரி கூற்றை காரணம் விளக்குகிறது
B] கூற்று மற்றும் காரணம் சரி கூற்றை காரணம் விளக்கவில்லை
C] கூற்று சரி காரணம் தவறு
D] கூற்று தவறு காரணம் சரி
52 பின்வரும்
கூற்றுகளில் எது 'சுழல் திட்டம்' (Rolling Plan) பற்றிய தவறான விளக்கமாகும்?
A) இத்திட்டத்தில்
நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் இலக்கு, ஒரு குறிப்பிட்ட
எண்ணிக்கையிலான ஆண்டுகளுக்கான (எ.கா:
3, 4 அல்லது 5 ஆண்டுகள்) நீண்ட காலத் திட்டத்தோடு இணைக்கப்படும்.
B) இம்முறையில்
பொருளாதாரத்தின் செயல்திறனுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் திட்டத்தின் இலக்குகளும்
நிதி ஒதுக்கீடும் மறுபரிசீலனை செய்யப்பட்டு மாற்றியமைக்கப்படும்.
C) இந்த சுழல்
திட்டக் கோட்பாட்டை முதன்முதலில் முன்மொழிந்தவர் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர்
குன்னார் மிர்டால் (Gunnar Myrdal) ஆவார்.
*D) இந்தியாவில்
இத்திட்டம் 1978 முதல் 1983 வரையிலான
5 ஆண்டு காலத்திற்கு முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு வெற்றியடைந்தது.
53 திட்டக்குழுவின்
அதிகார வரம்பு குறித்து விமர்சித்த 'முதல் நிர்வாகச்
சீர்திருத்தக் குழு' (1st Administrative Reforms Commission) எதை வலியுறுத்தியது?
A) திட்டக்குழுவை ஒரு
தன்னாட்சி அமைப்பாக மாற்ற வேண்டும்.
*B) திட்டக்குழுவின்
உறுப்பினர்களாக அமைச்சர்கள் இருக்கக்கூடாது.
C) திட்டக்குழுவை
முழுமையாகக் கலைக்க வேண்டும்.
D) மாநில முதல்வர்களே
திட்டக்குழுவின் தலைவர்களாக வேண்டும்.
54. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்ந்தெடு:
1 பிரோஷ் ஷா துக்ளக் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தார்.
2 இவர் ஜான்பூர், ஹிசார் போன்ற புதிய நகரங்களை நிர்மாணித்தார்.
3 1365 ல் தன் தந்தைக்கு எதிராகக்
கிளர்ச்சி செய்த முகம்மது கானை இவர்
அடக்கினார்.
4 மனிதாபிமானமற்ற கொடூரமான தண்டனைகளை
இவர் ஒழித்தார்.
A) 1, 2 மட்டும் சரி
B) 2, 3, 4
மட்டும் சரி
*C) 1, 2,
4 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
55 இந்தியாவின்
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1956–61) உருவாக்கப்பட்ட
பொதுத்துறை இரும்பு எஃகு ஆலைகள் மற்றும் அவற்றிற்கு உதவிய நாடுகளின் அடிப்படையில்
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
1 பிலாய்
(Bhilai) எஃகு ஆலை — சோவியத் யூனியன்
(USSR)
2 ரூர்கேலா
(Rourkela) எஃகு ஆலை — மேற்கு ஜெர்மனி
3 துர்காபூர்
(Durgapur) எஃகு ஆலை — இங்கிலாந்து
(UK)
A) 1 மற்றும்
2 மட்டும் சரி
B) 2 மற்றும்
3 மட்டும் சரி
*C) 1, 2 மற்றும்
3 அனைத்தும் சரி
D) எதுவுமில்லை
56. எந்த டில்லி சுல்தான் முக்திகளுக்கு ராணுவ சேவைக்காக பணத்திற்கு பதிலாக
நிலத்தை வழங்கும் முறையை அறிமுகம் செய்தார்
A] பால்பன்
*B] இழ்துமிஸ்
C] அலாவுதீன் கில்ஜி
D] முகமது பின் துக்ளக்
57 திட்டக்குழுவிற்கும்
மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவு குறித்து தவறான கூற்றைத் தேர்வு செய்க:
*A) திட்டக்குழு ஒரு
சட்டரீதியான அமைப்பு (Statutory Body) என்பதால் அதன்
முடிவுகள் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும்.
B) மாநிலத் திட்டக்
குழுக்களின் (State Planning Boards) தலைவராக அந்தந்த மாநில
முதலமைச்சர்கள் செயல்படுவார்கள்.
C) திட்டக்குழுவின்
தொழில்நுட்பக் குழுக்கள் மாநிலங்களின் திட்டப் பணிகளை மதிப்பாய்வு செய்யும்
அதிகாரம் கொண்டிருந்தன.
D) மாநிலங்களின்
நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய 'மத்திய உதவி'
(Central Assistance) என்ற முறையைத் திட்டக்குழு கையாண்டது.
58. கஜினி முகமதுவின் சோமநாதபுரம் கோவில் படையெடுப்பு பற்றிய தகவல்கள்
13ம் நூற்றாண்டைய அரபு மரபு வழி பதிவுகளில் காணப்படுகிறது ஆனால்
சமகாலத்தைச் சேர்ந்த சமண மத பதிவுகளில் காணப்படுவதில்லை என குறிப்பிடும் வரலாற்று
அறிஞர்
A] வின்சன் ஸ்சுமித்
B] மஜும்தார்
*C] ரொமீலா தாபர்
D] ஏ வி டெய்சி
59 கூற்று
(A): மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் (1961–1966) இந்தியப் பொருளாதார வரலாற்றில் ஒரு 'முழுமையான
தோல்வி அடைந்த திட்டம்' (Miserable Failure) என
மதிப்பிடப்படுகிறது.
காரணம்
(R): இத்திட்ட காலத்தில் தேசிய வருமானத்தின் வளர்ச்சி விகிதம்
நிர்ணயிக்கப்பட்ட 5.6%-க்கு எதிராக வெறும் 2.4% ஆக மட்டுமே இருந்தது, மேலும் இறுதி ஆண்டில்
(1965-66) வளர்ச்சி எதிர்மறையாக (-4.6%) சென்றது.
A) (A) மற்றும்
(R) இரண்டும் சரி, ஆனால் (R) சரியான விளக்கமல்ல.
*B) (A) மற்றும்
(R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமாகும்.
C) (A) சரி, ஆனால் (R) தவறு.
D) இரண்டும் தவறு
60. பின்வருவனவற்றைச் சரியாகப் பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
1. தற்காப்பு ராஜதந்திரம் அ) அலிவர்தன்
2. நாணயச் சீர்திருத்தம் ஆ) குதுப்
மினார்
3. வங்காளச் சதி இ) கவாரிஸ்மி
ஷா
4. கட்டிடப் பணி நிறைவு ஈ) தங்கா
மற்றும் ஜிட்டல்
*A) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
B) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
C) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
D) 1-அ, 2-ஆ, 3-இ, 4-ஈ
61 திட்டக்குழுவின்
நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் எது/எவை தவறானவை?
1 திட்டக்குழுவின்
கீழ் இயங்கும் 'நிகழ்ச்சி மதிப்பீட்டு அமைப்பு'
(Programme Evaluation Organisation - PEO) என்பது திட்டங்களின்
தாக்கத்தை ஆய்வு செய்யும் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.
2 திட்டக்குழுவின்
'செயலாளர்' (Secretary), இந்தியப் பொருளாதாரப்
பணியைச் (Indian Economic Service) சேர்ந்த மூத்த அதிகாரியாக
மட்டுமே இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
3 திட்டக்குழுவானது
மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வை மேற்கொள்ளும் 'நிதி ஆணையத்தின்' (Finance Commission) பணிகளில்
எந்தவிதத் தலையீடும் செய்ததில்லை.
A) 1 மற்றும்
2 மட்டும்
*B) 2 மற்றும்
3 மட்டும்
C) 1 மற்றும்
3 மட்டும்
D) அனைத்தும் தவறானவை
62. துக்ரில் கானின் கழகத்தை அடக்கு வதற்காக பால்பனால் முதலில்
அனுப்பப்பட்டவர்
A) புக்ரா கான்
B) முகமது கான்
C) கைகுபாத்
*D) அமின் கான்
63 பதினோராவது
ஐந்தாண்டுத் திட்டம் (2007–2012) பற்றிய தவறான கூற்றைக்
கண்டறிக:
A) இத்திட்டத்தின்
வரைவறிக்கையை (Draft) தயாரித்தவர் முன்னாள் ரிசர்வ் வங்கி
ஆளுநர் சி. ரங்கராஜன் ஆவார்.
B) இத்திட்டம் இந்திய
வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக 8% சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதத்தை
எட்டி சாதனை படைத்தது.
C) இத்திட்டத்தின்
கீழ் 2009-க்குள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்
வழங்குவது ஒரு முக்கிய இலக்காகும்.
*D) இத்திட்டம்
வறுமையை 15 சதவீதப் புள்ளிகள் (Percentage points) குறைக்க இலக்கு நிர்ணயித்தது.
64. அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பு இடங்களை அவற்றுக்குரிய ஆண்டுகளுடன்
பொருத்துக:
பட்டியல் I (இடம்) பட்டியல் II (ஆண்டு)
1. தேவகிரி (முதல் முறை) (A) 1303
2. குஜராத் (B) 1305
3. சித்தூர் (C) 1296
4. மால்வா (D) 1299
*(a) 1-C,
2-D, 3-A, 4-B
(b) 1-D, 2-C,
3-B, 4-A
(c) 1-C, 2-A,
3-D, 4-B
(d) 1-A, 2-D,
3-C, 4-B
65. கூற்று தைமூர் படையெடுப்பால் இந்திய கலை மத்திய ஆசியாவிற்கு பரவியது
காரணம்
இந்தியாவில் பெரும் செல்வத்தை கொள்ளையடித்த தைமூர் அவற்றை சாமர்க்கண்ட் கொண்டு
சென்றார்
A] கூற்று மற்றும் காரணம் சரி கூற்றைக் காரணம் விளக்குகிறது
*B] கூற்று மற்றும் காரணம் சரி கூற்றை காரணம் விளக்கவில்லை
C] கூற்று சரி காரணம் தவறு
D] கூற்று தவறு காரணம் சரி