Tuesday, April 21, 2026

ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும் டிஎன்பிஎஸ்சி தொகுதி (4) 2026 மாதிரித் தேர்வு (1) வினாவிடைகள்

தமிழ் வினாக்கள்

 

 

1.  ‘நிருமித்த’ என்பதன் பொருள் என்ன?

நிர்வகித்த

*உருவாக்கிய

முடித்த

நிர்ணயித்த

 

2.  சரியான தொடரைத் தெரிக.

தமிழ் எங்கள் கவிதைக்கு வையிரத்தின் வாள் (வை+யி+ர+த்+தி+ன்

தமிழ் எங்கள் கவிதைக்கு வைரத்தின் வாள் வை+ர+த்+தி+ன்

*தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்  வ+யி+ர+த்+தி+ன்

தமிழ் எங்கள் கவிதைக்கு வாயிரத்தின் வாள்  வா+யி+ர+த்+தி+ன்

 

 

3. பிழையான சொல்லைத் தெரிக.

தாய்பிள்ளை

*நேர்க்காணல்

மக்கள்குழு

ஆத்திசூடி

 

4.  சரியான தொடரைத் தெரிக.

சிறகிலிருந்து பிரிந்த ஒரு இறகு

*வேல் என்பது ஓர் ஆயுதம்

ஒரே ஒரு அழகான ஊர்

ஓர் தாய் மக்கள்

 

 

5.  பிழையற்ற மயங்கொலிச் சொல் எது?

மூத்த தமிழ்மொழி என்றும்

<இலமையானது

*எளிமையானது

<இணிமையானது

வழமையானது

 

 

6.  பிழையற்ற தொடரைத் தெரிக.

*எழுத்துகளைக் கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழ்ந்துவிடும்.

எழுத்துகளை கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழ்ந்துவிடும்.

எழுத்துகளைக் கூட்டி ஒலித்தாலேத் தமிழ் படித்தல் இயல்பாக நிகழ்ந்துவிடும்.

எழுத்துகளைக் கூட்டிய்யொலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழ்ந்துவிடும்.

 

 

7.  சரியான அகர வரிசையைத் தெரிக.

மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு

அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு, மரம், விலங்கு, பெரிய, திருமகள்,

அழைத்தல், அழகு, அறிவு, அளவு, துகள், மேன்மை, வயல், வண்டு, மரம், விலங்கு, பெரிய, திருமகள்,

*அழகு, அழைத்தல், அளவு, அறிவு, திருமகள், துகள், பெரிய, மரம், மேன்மை, வண்டு, வயல், விலங்கு

 

 

8.  மிகச் சரியான தொடர் எது?

சூரியன் தொடர்ந்து எரிந்து கொண்டே இருப்பதால் ஒளியையும் வெப்பத்தையும் வெளியிடுகிறது.

சூரியன் தொடர்ந்து எரிந்து கொண்டே இருப்பதால் ஒளியையும் வெப்பத்தையும் வெளியிடும்.

*சூரியன் தொடர்ந்து எரிந்து கொண்டே இருப்பதால் ஒளியையும் வெப்பத்தையும் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.

சூரியன் தொடர்ந்து எரிந்து கொண்டே இருப்பதால் ஒளியையும் வெப்பத்தையும் வெளியிட்டு வருகிறது.

 

 

9. பொருத்துக.

அ. வரகு  1. தழை

ஆ. சப்பாத்திக்கள்ளி  2. கூந்தல்

இ. மல்லி  3. தாள்

ஈ. பாக்கு  4. மடல்

3 1 4 2

*3 4 1 2

4 3 2 1

2 4 1 2

 

10. இடப்புறம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

இடன் + புறம்      

இடது+ புறம்      

*இடம் + புறம்             

இடப்+ புறம்

 

11. ‘ஏதிலி’ என்பதன் எதிர்ச்சொல் தருக.

அகதி

*விருந்தினர்

நாடோடி

கைதி

 

12. சரியான ஒன்றைத் தெரிக.

சிட்டுக்குருவி உருவத்தில்

சிறியன

சிறியவை

*சிறியது

சிறிதானவை

 

13. ‘காக்கை குருவி எங்கள் சாதி’

பாடலில் பயின்றுள்ள தொகைகள் எவை?

பண்புத்தொகை – வேற்றுமைத்தொகை

வேற்றுமைத்தொகை – பண்புத்தொகை

உவமைத்தொகை – உம்மைத்தொகை

*உம்மைத்தொகை – வேற்றுமைத்தொகை

 

 

14. ‘பறவையியல்’ பொருத்தமான ஆங்கிலச் சொல் எது?

Numismatics

Philology

Gerontology

*ornithology

 

15. தட்பவெப்பம் பிரித்த்உ எழுதுக.

*தட்பம் + வெப்பம்

தட்ப + வெப்பம்

தட்பு + வெப்பம்

தட் + வெப்பம்

 

 

16. பொருத்தமான இணைப்புச் சொல்லைத் தெரிக.

அவன் முழுமையாகப் பயிற்சி செய்யவில்லை. வெற்றி பெற்றுவிட்டான்.

ஆனால்

*ஆயினும்

அதற்குள்

எனவே

 

 

17. பிழையற்ற தொடரைத் தெரிக.

*<பரவையின் <கரைதொடும் <திரை

>பறவையின் >கறை தொடும் >திறை

>பறவையின் <கரை தொடும் >திறை

<பரவையின் >கறை தொடும் <திரை

 

               

18. திருக்குறள் உரையாசிரியர்கள் குறித்து கீழ்காணும் கூற்றுகளை ஆய்வு செய்க:

1. திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பதின்மர் எனப்படுவர்.

2. மணக்குடவர் உரை காலத்தால் முற்பட்டதாகும்.

3. பரிமேலழகர் உரை எளிமையானதாக கருதப்படுகிறது.

4. பரிமேலழகர் உரை சிறந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

கீழ்கண்டவற்றில் சரியானது எது?

*A) 1, 2, 4 மட்டும்

B) 1, 3 மட்டும்

C) 2, 3, 4 மட்டும்

D) அனைத்தும் சரி

 

19. ஒழுக்க முடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்”  இந்த குறள் வலியுறுத்துவது எது?

A) பிறப்பால் மனிதன் உயர்வான்

B) செல்வத்தால் குடிமை தீர்மானிக்கப்படுகிறது

*C) ஒழுக்கமே உயர்ந்த குடிப்பிறப்பை நிர்ணயிக்கிறது

D) கல்வியே மனிதனை உயர்த்துகிறது

 

20. கூற்று – காரணம்

கூற்று: ஒருவர் கற்ற கல்வியை மறந்தாலும் மீண்டும் கற்க முடியும்.

காரணம்: ஒழுக்கம் குறைந்தால் குடிப்பிறப்பின் சிறப்பு அழியும்.

A) கூற்று சரி; காரணம் தவறு

B) கூற்று தவறு; காரணம் சரி

C) இரண்டும் சரி; காரணம் கூற்றிற்கு சரியான விளக்கம்

*D) இரண்டும் சரி; காரணம் கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல

 

21. கூற்று: ஒழுக்கம் கல்வியை விட முக்கியமானதாக வள்ளுவர் கருதுகிறார்.

காரணம்: உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார்” என்ற குறளில், நல்லோருடன் ஒத்துழைத்து வாழாதவரை எவ்வளவு கற்றிருந்தாலும் அறிவில்லாதவர் என்கிறார்.

*A) கூற்று சரி; காரணம் சரி; காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

B) கூற்று சரி; காரணம் சரி; காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல

C) கூற்று சரி; காரணம் தவறு

D) கூற்று தவறு; காரணம் சரி

 

22. கூற்று 1 : உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வராது.

            கூற்று 2 : அளபடையில் உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வராது.

            ) கூற்று 1,2 சரி.           

           *) கூற்று 1 சரி 2 தவறு

           ) கூற்று 1தவறு 2சரி.  

             ) கூற்று 1,2 தவறு

 

23. கபிலர் என்ற பெயரின் மாத்திரை அளவு என்ன?

            )2 ½

           * )3 ½ 

             ) 1 ½    

              ) 4 ½

 

24. பாரதிதாசனைப் பற்றி எழுதிய பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

A)  இவர் பெண் கல்வி, கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சிகரமான கருத்துகளைப் பாடியுள்ளார்.

B) இவர் பொதுவுடைமை, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளைத் தம் கவிதைகளில் வலியுறுத்தியுள்ளார்.

C) பாரதியார் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.

* D) இவர் 'இயற்கைக்கவி' மற்றும் 'கவிமணி' என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

 

25. கூற்று: பாரதிதாசன் தமிழைச் சமூகத்தின் விளைச்சலுக்கு அடிப்படையான 'நீர்' என்று குறிப்பிடுகிறார்.

காரணம்: பாரதிதாசன் கவிதைகளில் பகுத்தறிவு மற்றும் பொதுவுடைமை போன்ற சமூகச் சீர்திருத்தக் கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

A) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு.

B) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி; மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

* C) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி; ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

D) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டுமே தவறு.

 

26. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களுள் 'தமிழுணர்வை உலகெங்கும் பரப்பிய இதழ்' எது?

A. நிலமுற்றம்

B. தமிழ்ச்சிட்டு

C. கொய்யாக்கனி

* D. தென்மொழி

 

27. கீழ்க்கண்டவற்றுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் படைக்காத நூல் எது?

* A. தேன்கனி

B. மகுடகாசி

C. பள்ளிப் பறவைகள்

D. என்சுவை என்பது

 

28. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் 'மக்கள் கவிஞர்' என அழைக்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் எது?

* A. எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் உழைப்பாளிகளின் உயர்வையும் பாடியதால்

B. அவர் அதிக எண்ணிக்கையிலான பக்திப் பாடல்களை இயற்றியதால்

C. சங்க காலப் பாடல்களை எளிய உரைநடையில் மாற்றியமைத்ததால்

D. அவர் அரசவை கவிஞராக இருந்ததால்

 

29.கல்யாணசுந்தரனாரின் பாடல்களில் அதிகம் இடம்பெறும் தத்துவம் எது?

மரபார்ந்தவை

*பொதுவுடைமை சார்ந்தவை

பெண்ணியம் சார்ந்தவை

மொழிப் பற்று சார்ந்தவை

 

  30.  பொருத்துக:

   (அ) அறக்கட்டளை - 1. Junior Red Cross

   (ஆ) தன்னார்வலர் - 2. Trust

   (இ) இளம் செஞ்சிலுவைச் சங்கம் - 3. Social Worker

   (ஈ) சமூக சேவகர் - 4. Volunteer

   *அ) 2, 4, 1, 3

   ஆ) 1, 2, 3, 4

   இ) 4, 3, 2, 1

   ஈ) 2, 1, 4, 3

 

31. தவறான இணையைக் கண்டறிக:

   அ) இலக்கியம் - Literature

   ஆ) கலைக்கூடம் - Art Gallery

   இ) மெய்யுணர்வு - Knowledge of Reality

   *ஈ) நாட்டுப்பற்று - Social Service

 

32.  'Transplantation' என்பதன் சரியான தமிழ்ச் சொல் எது?

   *அ) உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை

   ஆ) இரத்த தானம்

   இ) உடல் பரிசோதனை

   ஈ) மருந்து செலுத்துதல்

 

33. பத்தியைப் படித்து விடை எழுதுக.

தமிழ்மொழியை எழுதும் முறை மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

எடுத்துக்காட்டு       வலஞ்சுழி எழுத்துகள்  அ, , , ,

              இடஞ்சுழி எழுத்துகள்  ட , ,

தமிழ்மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ்மொழியின் சிறப்பாகும். சான்றாக, தோன்றுவது முதல் உதிர்வது வரை உள்ள பூவின் ஏழுநிலைகளுக்கும் தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு.

தமிழ்மொழி எழுத்துகள் பெரும்பாலும் –- எழுத்தாகவே அமைந்துள்ளன.

இடஞ்சுழி

கோடுகள்

புள்ளிகள்

*வலஞ்சுழி

 

34. பத்தியைப் படித்து விடை தருக.

தமிழ்மொழியை எழுதும் முறை மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

எடுத்துக்காட்டு       வலஞ்சுழி எழுத்துகள்  அ, , , ,

              இடஞ்சுழி எழுத்துகள்  ட , ,

தமிழ்மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ்மொழியின் சிறப்பாகும். சான்றாக, தோன்றுவது முதல் உதிர்வது வரை உள்ள பூவின் ஏழுநிலைகளுக்கும் தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு.

பொருந்தாத இணையைத் தெரிக.

,

,

*எ,

,

 

35. பத்தியைப் படித்து விடை தருக.

தமிழ்மொழியை எழுதும் முறை மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

எடுத்துக்காட்டு       வலஞ்சுழி எழுத்துகள்  அ, , , ,

              இடஞ்சுழி எழுத்துகள்  ட , ,

தமிழ்மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ்மொழியின் சிறப்பாகும். சான்றாக, தோன்றுவது முதல் உதிர்வது வரை உள்ள பூவின் ஏழுநிலைகளுக்கும் தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு.

பூவின் நிலைகள் எத்தனை?

4

6

8

*7

 

36. சரியான செயப்பாட்டு வினையைத் தெரிக.

பாதுகாப்புக் கருவிகளில்  பயன்படுத்தப்படும் கார்பன் இழையைக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கினோம்.”

*பாதுகாப்புக் கருவிகளில்  பயன்படுத்தப்படும் கார்பன் இழையைக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன.”

பாதுகாப்புக் கருவிகளில்  பயன்படுத்தப்படும் கார்பன் இழையைக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாகின.”

“பாதுகாப்புக் கருவிகளில்  பயன்படுத்தப்படும் கார்பன் இழையைக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டது.”

 

37. பிறவினை வாக்கியத்தைத் தெரிக.

அனைத்து இயற்கை வளங்களும் தீர்ந்து போயிருக்கும்

*அனைத்து இயற்கை வளங்களும் தீர்க்கப்பட்டிருக்கும்.

அனைத்து இயற்கை வளங்களும் தீர்ந்து போனவையாக இருக்கும்.

அனைத்து இயற்கை வளங்களும் தீர்ந்து போயிருக்கலாம்.

 

38. சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான தொடரைத் தெரிக.

மொழி மனிதரைப் பிறரிடமிருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது.

மனிதரைப் பிறரிடமிருந்து மொழி வேறுபடுத்தியும் காட்டுவது மேம்படுத்தியும்.

பிறரிடமிருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் மனிதரைக் காட்டுவது மொழி.

*மனிதரைப் பிறரிடமிருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது மொழி.

 

 

 

 

மனிதரைப் பிறரிடமிருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது மொழி.

 

 

39. சரியான வினைமரபைத் தெரிக.

சிட்டுக்குருவி கூடு

அமைக்கும்

பின்னும்

*கட்டும்

தேடும்

40. ‘பெய்தும் கெடுக்கிறது, பெய்யாமலும் கெடுக்கிறது’

மரபுத் தொடருக்குப் பொருத்தமான குறளைத் தெரிக.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

       உள்நின்று உடற்றும் பசி.

*கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

      எடுப்பதூஉம் எல்லாம் மழை.

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

பொதுப்பாடப் பிரிவு வினாக்கள்

 

1. தமிழர் தோற்றம் பற்றி எத்தனை வகையான கருதுகோள்கள் உள்ளன?

. 5 வகை

*. 4 வகை

. 3 வகை

. 2 வகை

 

2 இந்திய அரசியலமைப்பின் முகவுரை எந்த நாட்டு அரசியலமைப்பின் தாக்கத்தால் உருவாக்கப்பட்டது ?

A ஐக்கிய ராஜ்ஜியம்

B கனடா

*C அமெரிக்கா (USA)

D அயர்லாந்து

 

3 பின்வரும் அறிக்கைகளில் எது துல்லியமாக கருத்தை விவரிக்கிறது?

 

i. வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது தனிநபரின் முன்னேற்றத்தைக் குறிக்கிறது, அதன் விளக்கம் நபருக்கு நபர் மாறுபடும்.

 

ii. வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தால் மட்டுமே வரையறுக்கப்படுகிறது, காலப்போக்கில் நிலையான விளக்கத்துடன் வரையறுக்கப்படுகிறது.

 

iii.அபிவிருத்தி என்பது ஒரு நிலையான கருத்து, வெவ்வேறு சூழல்கள் மற்றும் தனி நபர்களால் மாற்ற இயலாது.

 

iv. வளர்ச்சி என்பது ஒரு உலகளாவிய கருத்தாகும், இது வியூகம் அல்லது நோக்கங்களை மாற்றுவதால் பாதிக்கப்படாது.

 

*A i மற்றும் ii மட்டுமே

 

B i மட்டும்

 

C மேலே உள்ள அனைத்தும்

 

D மேலே எதுவும் இல்லை

 

4.  A: கூற்று  சிந்து சமவெளி மக்கள் இரும்பை பயன்படுத்தினர்.

 காரணம் R: அந்த நாகரிகம் இரும்பு காலத்தைச் சேர்ந்தது.

 

A) கூற்று (Assertion) மற்றும் காரணம் (Reason) இரண்டும் சரி; காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி; ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

C) கூற்று சரி; காரணம் தவறு.

*D) கூற்று தவறு; காரணம் சரி.

 

 

 

5. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று தமிழ்த்தாயின் தொன்மையைப் பாடியவர் யார்?

. நாமக்கல் கவிஞர்

. பாரதிதாசன்

*. பாரதியார்

. சுரதா

 

6. கூற்று  A: லோத்தல் ஒரு முக்கிய வர்த்தக மையமாக இருந்தது.

காரணம் R: லோத்தலில் துறைமுகம் Gujarat   இருந்தது.

 

*A) கூற்று (Assertion) மற்றும் காரணம் (Reason) இரண்டும் சரி; காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி; ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

C) கூற்று சரி; காரணம் தவறு.

D) கூற்று தவறு; காரணம் சரி.

 

7. தமிழன் என்ற சொல் முதன்முதலில் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

. சிலப்பதிகாரம்

. தொல்காப்பியம்

*. தேவாரம்

. திருவாய்மொழி

 

8 அடிப்படைப் பொருளாதாரக் கோட்பாட்டினை பின்பற்றி பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க?

 

1 பப்புவா நியூ கேனியா

 

2 கென்யா

 

3 சூடான்

 

4 மாலத்தீவு

 

A 2

 

*B 4

 

C 1

 

D எதுவும் இல்லை

 

 

9. சிந்து சமவெளி எழுத்து எப்படி உள்ளது?

A) முழுமையாக வாசிக்கப்பட்டது

*B) இன்னும் வாசிக்க முடியவில்லை

C) சமஸ்கிருத எழுத்து

D) தமிழ் எழுத்து

 

10 இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் சமதர்மம், சமயச்சார்பின்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகிய சொற்கள் எந்தத் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டன?

A 44-வது அரசியலமைப்புத் திருத்தம்

*B 42-வது அரசியலமைப்புத் திருத்தம்

C 52-வது அரசியலமைப்புத் திருத்தம்

D 61-வது அரசியலமைப்புத் திருத்தம்

 

11 தனிநபர் வருமானம் நாட்டின்................வருமானம் என்றும் அழைக்கப்படும்.

 

*A சராசரி

 

B மொத்தம்

 

C மக்கள்

 

D மாதாந்திர

 

 

12. . சிந்து சமவெளி மக்கள் அதிகமாக பயன்படுத்திய உலோகம்?

A) இரும்பு

*B) செம்பு

C) தங்கம்

D) வெள்ளி

 

 

13. பண்பாடு என்ற சொல்லை தமிழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

*. டி கே சிதம்பரனார்

. ரா. இளங்குமரனார்

. மாக்சு முல்லர்

. ஆறுமுக நாவலர்

 

14 இந்தியப் பொருளாதாரம், குறைந்த தலா வருமானம், அதிக மக்கள் தொகை வளர்ச்சி, வேலையின்மை போன்ற பண்புகளால் அறியப்படுகிறது. இது எத்தகையப் பொருளாதாரம்?

 

A வளர்ந்த பொருளாதாரம்

 

B வளர்ச்சியில் பின்தங்கிய பொருளாதாரம்

 

*C வளரும் பொருளாதாரம்

 

D மூன்றாம் தரப் பொருளாதாரம்

 

E விடை தெரியவில்லை

 

15 ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை விவரிக்கும் சொல் எது?

 

A மனித வளர்ச்சிக் குறியீடு

 

B மொத்த தேசிய வருமானம்

 

C மொத்த தேசிய உற்பத்தி

 

*D மொத்த உள்நாட்டு உற்பத்தி

 

16. சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க.

1. இந்தியாவின் முதல் பேரங்காடி முசிரி.

2. இக்கூற்றை தாலமி தனது புவியல் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

. இரண்டும் சரி

. இரண்டும் தவறு

*. 1 சரி 2 தவறு

. 1 தவறு 2 சரி

விளக்கம்: பிலினி, இயற்க்கை வரளாறு

 

17. சிந்து சமவெளி மக்கள் எந்த விலங்கை அதிகமாக வணங்கினர்?

*A) பசு

B) குதிரை

C) புலி

D) யானை

 

 

18 நாடாளுமன்ற ஆட்சி முறை இந்திய அரசியலமைப்பில் எந்த நாட்டுத் தாக்கத்தால் பின்பற்றப்படுகிறது?

A அயர்லாந்து

B ரஷ்யா

*C பிரிட்டன் (UK)

D பிரான்ஸ்

19 வாங்கும் சக்தி அடிப்படையில் (PPP) உலக அளவில் இந்தியா வகிக்கும் இடம் எது?

 

A முதலிடம்

 

B இரண்டாம் இடம்

 

*C மூன்றாம் இடம்

 

D நான்காம் இடம்

 

 

20. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்று கூறும் நூல்

. புறநானுறு

. அகநாநூறு

. குறுந்தொகை

*. கலித்தொகை

 

21 _______ஆறு தீபகற்ப பீடபூமியை இரு பெரும்பகுதிகளாக பிரிக்கின்றது?

*A) நர்மதை ஆறு

B) தபதி ஆறு

C) கோதாவரி

D) a மற்றும் b இரண்டும்

 

 

 

22. தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும்  கலந்து எழுதப்பட்டுள்ள கல்வெட்டு எது?

. புகலூர் கல்வெட்டு

*. அரச்சலூர் கல்வெட்டு

. அ மற்றும் ஆ

. இரண்டும் அல்ல

 

23. தங்கத்தின் தூய்மை "காரட்" என்ற அழகால் குறிப்பிட படுகின்றது. ----- காரட் தூய்மையான தங்கம்.

A. 22

*B. 24

C. 26

D.28

 

24. கூற்று அலெக்சாண்டர் கன்னிங்காம் இந்திய தொல்லியல் துறையின் இயக்குனராக பொறுப்பேற்ற நிகழ்வு இந்திய வரலாற்றின் திருப்பு முனையாக அமைந்தது.

காரணம் இவரது முயற்சிகள் மூலம் ஹரப்பாவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

A] கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. கூற்றைக் காரணம் விளக்குகிறது.

*B] கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

C] கூற்று சரி ;காரணம் தவறு.

D] கூற்று தவறு; காரணம் சரி.

 

 

25 சரியான கூற்றை தேர்வு செய்க?

 

1 இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்று உலக பொருளாதார வல்லுனர்களால் கணிக்கப்படுகிறது.

 

2 இந்திய உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மை பெரிதும் பங்காற்றுகிறது

 

3 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவின் பணிகள் துறை உலக அளவில் வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் இரு மடங்கு வளர்ச்சியை எட்டி உள்ளது

 

*A 1 மட்டும் சரி

 

B 2 மட்டும் சரி

 

C 3 மட்டும் சரி

 

D அனைத்தும் சரி

 

 

26 அரசியலமைப்பு நிர்ணய சபை தனது முதல் கூட்டத்தை எப்போது நடத்தியது?

A ஜனவரி 26, 1950

*B டிசம்பர் 9, 1946

C நவம்பர் 26, 1949

D ஆகஸ்ட் 15, 1947

 

27. சரியானக் கூற்றுகளைத் தேர்வு செய்க.

1. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கில் புளிமான்கொம்பை கிராமம் உள்ளது.

2. இந்த கிராமத்தில் 2004 ஆம் ஆண்டு தமிழ்-பிராமி எழுத்துக்களில் அரிய

வீரக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

3. புலிமான்கோம்பை கல்வெட்டுகளில் ஒன்று

"கூடலூர் அகோள் பேடு தியன் ஆண்டவன் கல்".

4. "கூடலூர் கிராமத்தில் கால்நடைத் தாக்குதலில் கொல்லப்பட்ட தியன் ஆண்டவனின் கல்" என்பது இதன் பொருள்.

. 1, 2, 3 மற்றும் 4

*. 1, 3 மற்றும் 4

. 1, 2 மற்றும் 4

. 2, 3 மற்றும் 4

விளக்கம்: 2006 ஆம் ஆண்டு

 

28 பின்வரும் இணைகளை சரிவர பொருத்துக.

 

அ மக்கள் தொகை அழுத்தம் - 1 குறைந்த தனி நபர் வருமானம்

 

ஆ கலப்புப் பொருளாதாரம் - 2 பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயல்படுதல்

 

இ வேளாண்மையின் ஆதிக்கம் - 3 மிகத் தீவிரமான மக்கள் தொகை வளர்ச்சி

 

ஈ வளரும் பொருளாதாரம் - 4 அதிகமானோர் விவசாயத்தை நம்பி வாழ்தல்

 

A 3, 1, 4, 2

 

B 4, 3, 2, 1

 

C 2, 3, 4, 1

 

*D 3, 2, 4, 1

 

 

29 இந்திய அரசியலமைப்பை அரை-கூட்டாட்சி (Quasi-federal) என்று அழைத்தவர் யார்?

*A கே.சி.வீர் (K.C. Wheare)

B ஐவர் ஜென்னிங்ஸ்

C கிரான்வில் ஆஸ்டின்

D பி.ஆர். அம்பேத்கர்

 

30.  சரியானக் கூற்றுகளைத் தேர்வு செய்க.

1. மௌரியர் காலத்தில் கௌடில்யனால் எழுதப்பட்ட பொருளாதாரம் மற்றும் அரசமைப்பு பற்றிய உன்னதமான படைப்பான அர்த்தசாஸ்திரம், பாண்டிய கபடகத்தைக் குறிக்கிறது.

2. இது பாண்டிய நாட்டிலிருந்து வந்த  முத்துகளை  குறிக்கலாம்.

*. இரண்டும் சரி

. இரண்டும் தவறு

. 1 சரி 2 தவறு

. 2 சரி 1 தவறு

 

31. பொருத்துக.

1. குறிஞ்சி - இரங்குதல்

2. முல்லை - பிரிதல்

3. மருதம் - புணர்தல்

4. நெய்தல் - இருத்தல்

5 பாலை - ஊடல்

. 3 1 5 4 2

. 3 1 4 5 2

*. 3 4 5 1 2

. 3  1 2 4 5

 

32 இந்திய அரசியலமைப்பின் நெறிமுறைப்படுத்தும் கோட்பாடுகள் (Directive Principles) எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?

A பிரிட்டன்

*B அயர்லாந்து

C கனடா

D தென்னாப்பிரிக்கா

33 கீழே கொடுக்கப்பட்டுள்ள நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) அடிப்படையில் மோசமான நிலையில் உள்ள ஒன்றை தேர்வு செய்க?

 

A பாகிஸ்தான்

 

*B ஆப்கானிஸ்தான்

 

C இலங்கை

 

D மொரிசியஸ்

 

E விடை தெரியவில்லை

 

 

34) கீழ்கண்ட கூற்றுக்களை ஆராய்க

கூற்று; இமயமலை இந்திய துணைக்கண்டத்திற்கு இயற்கைஅரணாக அமைந்துள்ளது.

காரணம்; தென்மேற்கு பருவக்காற்றைத்தடுத்து வடஇந்திய பகுதிக்கு கனமழையைக்கொடுக்கிறது.

A) கூற்று சரி காரணம் சரி கூற்று காரணத்தை விளக்குகிறது

*B) கூற்று சரி காரணம் சரி கூற்று காரணத்தை விளக்க வில்லை

C) கூற்று சரி காரணம் தவறு

D) கூற்று தவறு காரணம் சரி

 

35. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்து என்று கூறும் நூல்?

. சிலப்பதிகாரம்

மணிமேகலை

. நந்நூல்

*. தொல்காப்பியம்

 

36 கூற்று (A): இந்தியாவில் 'மறைமுக வேலையின்மை' வேளாண்மைத் துறையில் அதிகமாகக் காணப்படுகிறது.

 

காரணம் (R): தேவைக்கு அதிகமான நபர்கள் ஒரே வேலையில் வேளாண்மைத் துறையில் ஈடுபட்டுள்ளனர்.

 

A.

(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமல்ல.

 

B.

(A) சரி ஆனால் (R) தவறு.

 

C.

(A) தவறு ஆனால் (R) சரி.

 

*D.

(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்.

 

 

37. தவறானவற்றைத் தேர்வு செய்க

1. முதற்ச்சங்கம் - உக்கிரப்பெருவழுதி முதல் கடுங்கோன் வரை

2. இடைச்சங்கம் - வேண்டேற்ச்செழியன்  முதல் முடத்திருமாறன் வரை

3. கடைச்சங்கம் - முடத்திருமாறன்  முதல் காய்ச்சினப்பெருவழுதி வரை

. 1, 2

*. 1, 3

. 2, 3

. எதுவுமில்லை

 

38. பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே _____ எனப்படும்.

A. இயக்கவிசை

*B. விசை

C.தொடுவிசை

D. இயக்கம்

 

 

39 சட்டத்தின் ஆட்சி (Rule of Law) தத்துவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?

*A பிரிட்டன் (UK)

B அமெரிக்கா

C ஜெர்மனி

D ஆஸ்திரேலியா

40) கீழ்கண்ட கூற்றுக்களை ஆராய்க?

கூற்று 1;  ட்ரான்ஸ்இமயமலை ஜம்மு-காஷ்மீர்மற்றும்திபெத்பீடபூமியில்அமைந்துள்ளது.

கூற்று 2; இம்மலைகள்மேற்கு மற்றும்கிழக்கு எல்லைகளில்சுமார்‌ 40 கி.மீ அகலத்துடனும்அதன்மையப்பகுதியில்‌ 225 கி.மீ அகலத்துடன்காணப்படுகிறது.

கூற்று 3; இம்மலையில்எப்போதும்நிரந்தரமாகபனிசூழ்ந்து காணப்படுவதால்கங்கோத்திரி,சியாச்சின்போன்ற பனியாறுகள்காணப்படுகின்றன.

*A) 1 மற்றும் 2 சரி

B) 1 மற்றும் 3 சரி

C) 2 மற்றும் 3 சரி

D) மேற்கண்ட அனைத்தும் சரி

 

41. கூற்று (A): காலிபங்கனில் கண்டறியப்பட்ட வேள்விப் பீடங்கள் மற்றும் சுடுமண் உருவங்கள் சிந்துவெளி மக்களின் நெறிமுறைப் படுத்தப்பட்ட வழிபாட்டு முறையைப் பறை சாற்றுகின்றன.

காரணம் (R): ஹரப்பா புதைகுழிகளில் காணப்படும் அணிகலன்கள் மற்றும் தாமிரக் கண்ணாடிகள் அவர்கள் இறப்பிற்குப் பின்னரான வாழ்க்கையில் கொண்டிருந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன.

கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி; மேலும் காரணம் (R) என்பது கூற்று (A)-விற்கான சரியான விளக்கம்.

 * (B) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி; ஆனால் காரணம் (R) என்பது கூற்று (A)-விற்கான சரியான விளக்கம் அல்ல.

 (C) கூற்று (A) சரி, ஆனால் காரணம் (R) தவறு.

 (D) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.

 

 42. தரையில் வாழும் விலங்குகளில் சிறுத்தையானது சராசரியாக எவ்வளவு வேகத்தில் ஓடும் மிக வேகமான விலங்காகும்?

A. 110 கீ.மீ/மணி

B. 120 கீ.மீ/மணி

*C. 112 கீ.மீ/மணி

D. 102 கீ.மீ/மணி

 

43 பின்வரும் குறிப்புகளில் சரியான ஒன்றை தேர்வு செய்க?

 

1 இந்தியாவின் ஜிடிபியில் சேவைத் துறையின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது.

 

2 இந்தியாவின் பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதம் ஆகிய இரண்டுமே சமமாக உள்ளன.

 

3 இந்தியா உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளதுடன் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் உள்ளது.

 

 

*A 1 மற்றும் 3 சரி

 

B 1 மற்றும் 2 சரி

 

C அனைத்தும் தவறு

 

D அனைத்தும் சரி

 

 

44. சரியான கூற்றுகளை தேர்வு செய்க.

1. 7.5 கிலோ மிளகு, தேக்கு மரம், தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கொண்ட பானை ஓடு மற்றும் இந்திய மட்பாண்டங்கள் கொண்ட இந்திய ஜாடி எகிப்தின் செங்கடல் கடற்கரையில் உள்ள பெரெனிகே துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2. செங்கடல் கடற்கரையில் பெரெனிகேக்கு வடக்கே அமைந்துள்ள மற்றொரு துறைமுகமான குசேர் அல் காதிமில், இங்கு கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களில் மூன்று தமிழ்-பிராமி கல்வெட்டுகள், பனையோரி, கானன் மற்றும் காட்டன் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

3. தாய்லாந்தின் குவான் லுக் பாட் என்ற இடத்தில் பெரும்படங்கல் என்ற பெயர் கொண்ட கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

*. 1, 2, 3

. 1, 2

. 2, 3

. அனைத்தும் தவறு

 

45 இந்திய அரசியலமைப்பின் 'நெகிழும்' மற்றும் 'நெகிழா' தன்மைக்குக் காரணம் என்ன?

*A அரசியலமைப்பு திருத்தச் சட்டம் (சரத்து 368)

B மத்திய-மாநில உறவுகள்

C குடியரசுத் தலைவர் தேர்தல் முறை

D நீதித்துறை மறுஆய்வு அதிகாரம்

 

46 இந்தியாவின்மத்திய தீர்க்கரேகையான _____° கிழக்கு தீர்க்கரேகையின்தலநேரம்‌, இந்திய திட்டநேரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது?

A) 97 25

*B) 82 30

C) 83 25

D) 68 7

47 கூற்று (A): இந்தியப் பொருளாதாரம் உலகமயமாக்கலுக்குப் பிறகு (1991) பெரும் மாற்றத்தைச் சந்தித்தது.

 

காரணம் (R): புதிய பொருளாதாரக் கொள்கை அந்நிய நேரடி முதலீட்டிற்கான (FDI) தடைகளைத் தளர்த்தியது.

 

*A.

(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்.

 

B.

(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமல்ல.

 

C.

(A) தவறு ஆனால் (R) சரி.

 

D.

(A) சரி ஆனால் (R) தவறு.

 

48. பூம்புகார் துறைமுகம் குறித்துக் கூறும் சங்க இலக்கியம் எது?

. சிறுபானாற்றுப்படை

. பெறும்பானாற்றுப்படை

*. பட்டினப்பாலை

. மதுரைக்காஞ்சி

 

49. சரியான கூற்றுகளை தேர்வு செய்க.

1. பண்டைய இஸ்ரேலின் அரசன் சாலமன் கொற்கை பாண்டிய துறைமுகத்திற்கு அருகில் உள்ள உவரியிலிருந்து முத்துக்களை இறக்குமதி செய்தான்.

2. மதுரையில் ரோமானிய நாணயங்கள்  கிடைத்தது; மதுரையில் பிற நாட்டு நாணயங்களும் அச்சடிக்கப்பட்டது மதுரையின் பெருமைக்கு சான்றாகும்.

*. இரண்டும் சரி

. இரண்டும் தவறு

. 1 சரி 2 தவறு

. 2 சரி 1 தவறு

 

50 கூற்று (A): இந்தியப் பொருளாதாரத்தில் தொழில்நுட்பப் பின்தங்கிய நிலை இன்னும் ஒரு சவாலாக உள்ளது.

 

காரணம் (R): நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) இந்தியா குறைந்த அளவே செலவிடுகிறது.

 

A.

(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமல்ல.

 

*B.

(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்.

 

C.

(A) சரி ஆனால் (R) தவறு.

 

D.

(A) தவறு ஆனால் (R) சரி.

 

51. பொருத்துக

  பட்டியல் I (சான்றுகள்) பட்டியல் II (குறிக்கும் பொருள்/இடம்)

 

 (i) வேள்விப் பீடங்கள் 1. இறப்பிற்குப் பின்னரான வாழ்க்கை

 (ii) சுடுமண் உருவங்கள் 2. காலிபங்கன்

 (iii) அரச மரம் 3. பெண் தெய்வம் (தாய் தெய்வம்)

 (iv) புதைகுழிகளில் அணிகலன்கள் 4. இயற்கை வழிபாடு

 

 

* (A) (i)-2, (ii)-3, (iii)-4, (iv)-1

  (B) (i)-1, (ii)-2, (iii)-3, (iv)-4

  (C) (i)-3, (ii)-4, (iii)-1, (iv)-2

  (D) (i)-4, (ii)-1, (iii)-2, (iv)-3

 

 

52 இந்தியக் கூட்டாட்சி முறையை 'ஒற்றையாட்சிப் பண்புகளைக் கொண்ட கூட்டாட்சி' என்று அழைப்பதற்குப் பின்வரும் காரணங்களில் எது மிக முக்கியமானது?

A மாநிலங்களுக்கு அதிக நிதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

*B அவசரக்கால அதிகாரங்கள் மற்றும் வலுவான மத்திய அரசு

C இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நீதிமன்ற அமைப்பு

D அரசியலமைப்புத் திருத்தத்தில் மாநிலங்களுக்குச் சம உரிமை

 

53. ஒரு பொருள் பயணம் செய்த வேகமும் அப்பொருள் அப்பயணத்திற்காக எடுத்து கொண்ட காலமும் நமக்குத் தெரியுமானால் நம்மால் அப்பொருளின் ____ ஐ கணக்கிட முடியும்.

A. சராசரி வேகம்

*B. கடந்த தொலைவு

C. கடந்த நேரம்

D. சீரான வேகம்

 

54 இந்தியா ஒரு துணைக்கண்டம்என்ற கூற்றை மெய்ப்பிக்கும் காரணங்களில் தகுந்தவற்றை தேர்வு செய்க?

1. இயற்கை தாவரங்கள், கனிமங்கள்

2.. மனித வளம்

3. நிலத்தோற்றம்

4. காலநிலை

A) 2, 3 மற்றும் 4 சரி

B) 3 மற்றும் 4 மட்டும் சரி

C) 1, 3 மற்றும் 4 சரி

*D) மேற்கண்ட அனைத்தும்

55 சிந்துவெளி நாகரிகத்தின் நகரத் திட்டமிடல் மற்றும் வணிக நடவடிக்கைகளில் காணப்பட்ட சீரான தன்மை (Uniformity) பின்வரும் எதனை உறுதிப் படுத்துகிறது?

(A) வசதி படைத்த வணிகர்களின் தன்னிச்சையான முடிவு.

 

*(B) அதிகாரம் படைத்த மைய ஆட்சியமைப்பின் நிர்வாகத் திறன்.

(C) அண்டை நாடுகளின் தொழில்நுட்ப உதவி.

 

(D) புவியியல் அமைப்பால் உருவான தற்செயலான ஒற்றுமை.

 

 

56 இந்திய அரசியலமைப்பை 'வழக்கறிஞர்களின் சொர்க்கம்' (Lawyer's Paradise) என்று விமர்சித்தவர் யார்?

A கே.சி. வீர் (K.C. Wheare)

B பி.ஆர். அம்பேத்கர்

*C சர் ஐவர் ஜென்னிங்ஸ் (Sir Ivor Jennings)

D கிரான்வில் ஆஸ்டின் (Granville Austin)

 

57 கூற்று (A): இந்தியாவின் 'மக்கள் தொகை பகுப்பு' (Demographic Dividend) பொருளாதார வளர்ச்சிக்குச் சாதகமானது.

 

காரணம் (R): இந்தியாவில் உழைக்கும் வயதுடைய (15-59) மக்கள் தொகையின் சதவீதம் அதிகமாக உள்ளது.

 

A (A) தவறு ஆனால் (R) சரி.

 

B

(A) சரி ஆனால் (R) தவறு.

 

C (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமல்ல.

 

*D.

(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்.

 

58 கீழ்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?

A. பூமி தன் அச்சைப் பற்றிச் சூழலுதல்

B. நிலவு பூமியைச சுற்றி வருதல்

*C. அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்

D. மேற்கண்ட அனைத்தும்

 

 

59 கூற்று (A): இந்தியாவில் மூலதனத் திரட்சி (Capital Formation) குறைவாக உள்ளது.

 

காரணம் (R): பெரும்பாலான மக்கள் குறைந்த வருமானம் காரணமாகக் குறைந்த அளவே சேமிக்கின்றனர்.

 

A (A) சரி ஆனால் (R) தவறு.

 

B (A) தவறு ஆனால் (R) சரி

 

*C (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்.

 

D (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமல்ல.

 

60 பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

 

1 ஹரப்பா நகரங்கள் நன்கு திட்டமிடத் தெரிந்த குடிமை அதிகாரிகளால் வடிவமைக்கப்பட்டவை.

 

2 இங்குள்ள நகரங்களில் தெருக்கள் மூன்று அடி முதல் 12 அடிவரை அகன்றவையாக காணப்படுகின்றன.

 

3 மக்களின் நிலையான வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கைவினைத் தொழில் திகழ்கிறது.

 

4 முத்திரைகள் போக்குவரத்திற்கு உட்படும் பொருட்களை அடையாளப் படுத்துவதற்கோ அல்லது அதன் உடைமையாளர்களை அடையாளப் படுத்துவதற்கோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

 

A] 1,3 சரி

B] 2 4 சரி

C] 1 2 சரி

*D] 1 4 சரி

கணித வினாக்கள்

1.             இரு எண்களின் மீ.பொ.வ 1 எனில் அவ்வெண்கள் __________ எனப்படும்.

 

                (A)           பகா எண்கள்

*              (B)           சார் பகா எண்கள்

                (C)          இரட்டைப் பகா எண்கள்

                (D)          இணக்கமான எண்கள்

                (E)           விடை தெரியவில்லை

 

2.             80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 விட்டர் கொள்ளளவு உள்ள கலன்களில் உள்ள பாலினை சரியாக அளக்கக் கூடிய பாத்திரத்தின் அதிகபட்ச கொள்ளளவு என்ன?

 

                (A)           10 லிட்டர்

*              (B)           20 லிட்டர்

                (C)          40 லிட்டர்

                (D)          60 லிட்டர்

                (E)           விடை தெரியவில்லை

3.             இரு எண்களின் மீ.சி.ம 432 மற்றும் மீ.பொ.வ 36. அவற்றில் ஓர் எண் 108 எனில் மற்றோர் எண் என்ன?

 

                (A)           120

                (B)           72

                (C)          196

*              (D)          144

                (E)           விடை தெரியவில்லை

4.             மூன்று போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள நெரிசல் விளக்குகளில் ஒவ்வொன்றும் முறையே 40, விநாடிகளில், 60 விநாடிகளில் மற்றும் 72 விநாடிகளில் ஒளிர்கின்றன. அவ்விளக்குகள் காலை 8 மணிக்கு சந்திப்புகளில் ஒன்றாக ஒளிர்ந்தன. எனில் மீண்டும் அவை எப்போது ஒன்றாக ஒளிரும்?

 

                (A)           காலை 8:05

                (B)           காலை 8:10

*              (C)          காலை 8:06

                (D)          காலை 8:12

                (E)           விடை தெரியவில்லை

5.             62, 78 மற்றும் 109 ஆகிய எண்களை வகுத்து முறையே 2, 3 மற்றும் 4-ஐ மீதிகளாக கொடுக்கும் மீப்பெரு பொதுக் காரணி என்ன?

 

*              (A)           15

                (B)           12

*              (C)          5

                (D)          20

                (E)           விடை தெரியவில்லை

6.             சில எண்களின் மீ.சி.ம 120 ஆகும். பின்வரும் எந்த எண்ணானது அவற்றின் மீ.பொ.வ-ஆக இருக்க இயலாது?

 

 

                (A)           60

                (B)           40

*              (C)          80

                (D)          3

                (E)           விடை தெரியவில்லை

7.             இரு சார் பகா எண்களின் மீ.சி.ம 5005. அவற்றில் ஓர் எண் 65 எனில், மற்றோர் எண் என்ன?

 

 

                (A)           55

*              (B)           77

                (C)          91

                (D)          100

                (E)           விடை தெரியவில்லை

8.             72 மற்றும் 108 ஆகிய எண்களால் சரியாக வகுப்படக்கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் என்ன?

 

 

                (A)           10000

*              (B)           10152

*              (C)          10368

                (D)          10080

                (E)           விடை தெரியவில்லை

9.             இரு எண்களில், ஓர் எண்ணின் காரணிகளின் (அந்த எண்ணைத் தவிர்த்து) கூடுதலானது மற்றோர் எண்ணைத் தரும் எனில், அந்த எண்கள் _____________ எனப்படும்.

 

 

                (A)           சார் பகா எண்கள்

                (B)           இரட்டை பகா எண்கள்

*              (C)          இணக்கமான எண்கள்

                (D)          செவ்விய எண்கள்

                (E)           விடை தெரியவில்லை

10.           (y3 + 1) மற்றும் (y2 - 1) ஆகியவற்றின் மீ.பொ.வ காண்க.

 

 

                (A)           (Y – 1)

                (B)           (Y2 – y + 1)

*              (C)          (Y + 1)

                (D)          (Y2 – 1)

                (E)           விடை தெரியவில்லை

11.           5x – 10 மற்றும் 5x2 – 20 ஆகியவற்றின் மீ.பொ.ம காண்க.

 

 

                (A)           5(x - 2)

*              (B)           5(x2 - 4)

                (C)          25(x2 - 4)

                (D)          5()x + 2

                (E)           விடை தெரியவில்லை

12.           இரட்டை எண்களில் உள்ள ஒரே பகா எண் எது?

 

 

                (A)           0

                (B)           4

                (C)          6

*              (D)          2

                (E)           விடை தெரியவில்லை

13.           இரண்டு எண்களின் மீ.பொ.கா 12 மற்றும் மீ.சி.ம 720. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யக்கூடிய எத்தனை ஜோடி எண்கள் சாத்தியம்?

 

 

                (A)           2

                (B)           3

*              (C)          4

                (D)          5

                (E)           விடை தெரியவில்லை

14.           130, 305 மற்றும் 245 ஆகிய எண்களை வகுக்கும் பொழுது ஒவ்வொரு வழக்கிலும் ஒரே மீதியைக் கொடுக்கக்கூடிய மீப்பெரு வகுத்தியைக் காண்க.

 

 

*              (A)           5

                (B)           15

                (C)          23

                (D)          35

                (E)           விடை தெரியவில்லை

15.           X3 – 8 மற்றும் x2 – 5x + 6 ஆகியவற்றின் மீ.பொ.வ காண்க.

 

 

*              (A)           X – 2

                (B)           X – 3

                (C)          X + 2

                (D)          X2 + 2x + 4

                (E)           விடை தெரியவில்லை

16.           (x2 – 4x + 3) மற்றும் (x2 – 5x + 3) ஆகியவற்றின் மீ.சி.ம காண்க.

 

 

*              (A)           (x - 1)(x - 2)(x - 3)

                (B)           (x - 1)(x - 2)(x - 3)2

                (C)          (x - 1)(x - 2)

                (D)          (x - 3)

                (E)           விடை தெரியவில்லை

17.           20, 25, 35 மற்றும் 40 ஆகிய எண்களால் வகுக்கும் போது முறையே 14, 19, 29 மற்றும் 34 ஆகிய மீதிகளைத் தரும் மிகச் சிறிய எண்ணைக் கண்டறியவும்.

 

 

                (A)           1400

                (B)           1406

*              (C)          1394

                (D)          1388

                (E)           விடை தெரியவில்லை

18.           இரு எண்களின் கூடுதல் 384 மற்றும் அவற்றின் மீ.பொ.கா 48 எனில், அவ்வெண்களின் வித்தியாசம் என்ன?

 

 

*              (A)           96

                (B)           144

                (C)          192

                (D)          128

                (E)           விடை தெரியவில்லை

19.           0.6, 1.8 மற்றும் 0.03 ஆகிய எண்களின் மீ.சி.ம காண்க.

 

 

*              (A)           1.8

                (B)           0.18

                (C)          18.0

                (D)          0.06

                (E)           விடை தெரியவில்லை

20.           A, B, C ஆகியோர் 1200 மீட்டர் வட்டப் பாதையில் ஒரே புள்ளியில், ஒரே நேரத்தில், ஒரே திசையில் முறையே 2மீ/விநாடி, 4மீ/விநாடி மற்றும் 6மீ/விநாடி வேகத்தில் ஓடுகிறார்கள். அவர்கள் மீண்டும் தொடக்கப்புள்ளியில் எப்போது சந்திப்பார்கள்?

 

 

*              (A)           10 நிமிடம்

                (B)           20 நிமிடம்

                (C)          5 நிமிடம்

                (D)          600 நிமிடங்கள்

                (E)           விடை தெரியவில்லை

21.           இரு எண்களின் பெருக்கற்பலன் 3072, அவற்றின் மீ.சி.ம 192 எனில் அவற்றின் மீ.பொ.கா என்ன

 

 

                (A)           12

*              (B)           16

                (C)          18

                (D)          24

                (E)           விடை தெரியவில்லை

22.           1134 மற்றும் 1344-ன் மீ.பொ.வ காண்க.

 

 

                (A)           21

*              (B)           42

                (C)          14

                (D)          6

                (E)           விடை தெரியவில்லை

23.           இரு எண்களின் விகிதம் 4 : 5, அவற்றின் HCF மற்றும் LCM-ன் பெருக்கற்பலன் 320 எனில் அந்த எண்களைக் காண்க.

 

 

                (A)           8, 10

                (B)           12, 15

*              (C)          16, 20

                (D)          20, 25

                (E)           விடை தெரியவில்லை

24.           10.5 மீட்டர் * 8.25 மீட்டர் அளவுள்ள செவ்வக வடிவ அறையின் தரையை முழுமையாக பதிக்கத் தேவையான மிகப்பெரிய சதுர வடிவ ஓட்டின் பக்க அளவு என்ன

 

 

                (A)           0.25 மீட்டர்

                (B)           0.50 மீட்டர்

*              (C)          0.75 மீட்டர்

                (D)          1.00 மீட்டர்

                (E)           விடை தெரியவில்லை

25.           (x4 – y4) மற்றும் (x6 – y6) ஆகியவற்றின் மீ.பொ.வ காண்க.

 

 

*              (A)           X2 – y2

                (B)           X – y

                (C)          X4 – y4

                (D)          X6 – y6

                (E)           விடை தெரியவில்லை