Sunday, March 2, 2025

ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் டிஎன்பிஎஸ்சி தொகுதி IV வாராந்திரத் தேர்வு (5) வினாவிடைகள்

குறிப்பு: *குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

1) பொருத்துக.

A) கொத்து 1) முந்திரி

B) குலை 2) அவரை

C) தாறு 3) கேழ்வரகு

D) கதிர் 4) வாழைக் குலை

A) 2,1,3,4

*B) 2,1,4,3

C) 3,2,1,4

D) 3,1,2,4

2) பொருத்துக.

A) Discussion 1) ஒரு மொழி

B) Conversation 2) ஒப்பெழுத்து

C) Monolingual 3) கலந்துரையாடல்

D) Homograph 4) உரையாடல்

A) 3,4,2,1

*B) 3,4,1,2

C) 4,3,2,1

D) 3,2,1,4

3) பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

A) Storm - புயல்

B) Tornado -சூறாவளி

C) Tempest -பெருங்காற்று

*D) Land Breeze - கடற்காற்று

4) விருந்து குறித்தப் பழமொழியைத் தேர்ந்தெடு.

*A) 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை'

B) அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு

C) சுத்தம் சோறு போடும்

D) நொறுங்கத் தின்றால் நூறு வயது

5) பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?

A) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.

B) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

*C) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

D) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.

6) பொருத்துக.

A) செவ்விலக்கியம் 1) classical literature

B) வட்டார இலக்கியம் 2) Regional literature

C) காப்பிய இலக்கியம் 3) Epic literature                

D) நாட்டுப்புற இலக்கியம் 4) Folk literature

*A) 1,2,3,4

B) 2,3,4,1

C) 4,3,2,1

D) 1,3,4,2

7) சரியானவற்றை தேர்ந்தெடு.

1) பக்தி இலக்கியம் - Devotional literature

2) நவீன இலக்கியம் - Modern literature

3) பண்டைய இலக்கியம் - Ancient literature

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

*D) அனைத்தும் சரி

8) இலக்கணமுறைப்படி பிழையுடையது.எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது எது?

A) வழு

B) வழாநிலை

*C) வழுவமைதி

D) வழக்கு

9) சரியானவற்றை தேர்ந்தெடு.

1)இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.

2) இலக்கணமுறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்.

3) இலக்கணமுறைப்படி பிழையுடையது.எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது வழுவமைதியாகும்.

A) 1 மட்டும் சரி

B) 1,2 சரி

*C) 1,2,3 சரி

D) அனைத்தும் சரி

10) "கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் பட வேணும்" பாரதியின் இவ்வரிகள் எவ்வகை வழுவமைதிக்கு எடுத்துக்காட்டு?

*A) மரபு வழுவமைதி

B) கால வழுவமைதி

C) இட வழுவமைதி

D) பால் வழுவமைதி

11) பொருத்துக.

A) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் 1) பால் வழுவமைதி

B) "என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது 2) மரபு வழுவமைதி

C) "கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் பட வேணும்" 3) திணை வழுவமைதி

D) வாடா இராசா, வாடா கண்ணா " என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது 4) கால வழுவமைதி

A) 1,2,3,4

*B) 4,3,2,1

C) 3,2,1,4

D) 4,2,3,1

12) தவறான இணையைத் தேர்ந்தெடு.

*A) Space Technology - உயிரித் தொழில்நுட்பம்

B) Cosmic rays - விண்வெளிக் கதிர்கள்

C) Ultraviolet rays - புற ஊதாக் கதிர்கள்

D) Infrared rays - அகச்சிவப்புக் கதிர்கள்

13) சிற்றிலக்கியம் எத்தனை வகைப்படும்?

A) 93

B) 94

C) 95

*D) 96

14) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர் யார்?

A) சேக்கிழார்

*B) குமரகுருபரர்

C) பிரகாசர்

D) வல்லலார்

15) பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?

A) 1

*B) 2

C) 3

D) 4

16) கூற்றுகளைப் படித்து உரிய விடையைத் தருக.

1) 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.

2) இதில் இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர்.

A) ஒன்று மட்டும் சரி

*B) ஒன்று மற்றும் இரண்டு சரி

C) இரண்டு மட்டும் சரி

D) இரண்டும் தவறு

17) பிள்ளைத்தமிழில் எத்தனை பாடல்கள் இடம்பெரும்?

*A) 100

B) 90

C) 105

D) 108

18) குமரகுருபரர் எம்மொழிகளில் புலமை மிக்கவர்?

*A) தமிழ், வடமொழி, இந்துஸ்தானி.

B) தமிழ், ஆங்கிலம், வடமொழி.

C) தமிழ், தெலுங்கு, வடமொழி.

D) இந்துஸ்தானி, ஹிந்தி, தெலுங்கு.

19) குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?

A) 16

*B) 17

C) 18

D) 19

20) பொருந்தாததைத் தேர்ந்தெடு.

A) சிற்றில்

B) சிறுபறை

C) சிறுதேர்

*D) கழங்கு

21) பொருத்துக.

A) ஆண்பாற் பிள்ளைத்தமிழ் கடைசி மூன்று பருவம் 1) காப்பு, செங்கீரை, சப்பாணி.

B) பெண்பாற் பிள்ளைத்தமிழ் கடைசி மூன்று பருவம்2) சிற்றில், சிறுபறை, சிறுதேர்.

C) இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் 3) கழங்கு, அம்மானை, ஊசல்.

*A) 2,3,1

B) 1,2,3

C) 3,2,1

D) 1,3,2

22) பிள்ளைத்தமிழ் எத்தனைப் பருவங்களைக் கொண்டது?

A) 8

B) 9

*C) 10

D) 11

23) பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவம் எத்தனையாவது பருவமாகக் குறிப்பிடப்படுகிறது?

*A) இரண்டாம்

B) நான்காம்

C) எட்டாம்

D) பத்தாம்

24) பொருந்தாததைத் தேர்ந்தெடு.

A) கந்தர் கலிவெண்பா மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்

B) மதுரைக்கலம்பகம் சகலகலாவல்லிமாலை

C) நீதிநெறி விளக்கம் திருவாரூர் மும்மணிக்கோவை

*D) முத்தம் , அம்புலி

25) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?

A) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்.

B) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.

*C) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.

D) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.

26) கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?

A) கரகாட்டம் என்றால் என்ன?

B) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?

C) கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை?

*D) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

27) அழைப்புமணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார். இது எவ்வகைச் சொற்றொடர்?

A) தனிச்சொற்றொடர்

B) தொடர்சொற்றொடர்

*C) கலவைச் சொற்றொடர்

D) இவற்றில் எதுவுமில்லை

28) Aesthetics என்ற ஆங்கிலச்சொல்லைத் தமிழாக்கம் செய்க.

*A) அழகியல், முருகியல்

B) கலைப் படைப்புகள்

C) கலைச்சொல்

D) தொன்மம்

29) தவறான இணையைத் தேர்ந்தெடு.

A) Consulate - துணைத்தூதரகம்

B) Patent - காப்புரிமை

C) Guild வணிகக் குழு

*D) Irrigation - நிலப்பகுதி

30) பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?

*A) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது.

B) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது.

C) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்.

D) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்.

31) மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக. (மனக்கோட்டை ,கண்ணும் கருத்தும்)

1) படிக்காமல் தேர்வில் வெற்றி பெறலாம் என்று மனக்கோட்டைக் கட்டாதே.

2) ராஜா தினமொரு திருக்குறள் படிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தான்.

A) ஒன்று மட்டும் சரி

B) இரண்டு மட்டும் சரி

*C) இரண்டுமே சரி

D) இரண்டுமே தவறு

32) மறுமலர்ச்சி என்பதன் சரியான ஆங்கிலச்சொல் யாது?

A) Belief

*B) Renaissance

C) Philosopher

D) Revivalism

33) தமிழ் சொல்லை ஆங்கிலப்படுத்துக. (நம்பிக்கை)

*A) Belief

B) Renaissance

C) Philosopher

D) Revivalism

34) “கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா“ - எனக் கூறும் நூல்.

A) நான்மணிக்கடிகை

*B) பழமொழி நானூறு

C) ஏலாதி

D) திரிகடுகம்

35) துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு.

A) கலையரசி துணி தைத்தாள்

B) கலையரசி தைத்தாள் துணி

C) கலையரசி என்ன தைத்தாள்

*D) கலையரசி துணியைத் தைத்தாள்

36) பொருத்துக :- பிறமொழிச் சொல்

A)  ஐதீகம் 1) விருந்தோம்பல்

B) இருதயம் 2) சொத்து

C) ஆஸ்தி 3) உலக வழக்கு

D) உபசரித்தல் 4) நெஞ்சகம்

 --- A) 2,3,1,4

*B) 3,4,2,1

C) 4,1,2,3

D) 1,2,3,4

37) பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக.

A) சினிமா தியேட்டர் அருகாமையில் உள்ளது

B) திருநெல்வேலி சமஸ்தானம் பெரியது

C) விழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர்

*D) வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்

38) பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.-- உலக நிலைகளை அறியாதிருத்தல்

A) கீரியும் பாம்பும் போல

B) இலவு காத்த கிளி போல

*C) கிணற்றுத் தவளை போல

D) அனலிடைப்பட்ட புழு போல

39) “நாமர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ளநடலைக்கு இணையான ஆங்கிலச் சொல்லை எழுதுக.

A) Affection

*B) Affliction

C) Attraction

D) Addition

40) தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.

A) இலக்கியர் புத்தாடை அணிவித்தாள்

*B) இலக்கியா புத்தாடை அணிந்தாள்

C) புத்தாடை இலக்கியாவால் அணிவிக்கப்பட்டது

D) இலக்கியா புத்தாடை அணியாள்

41) பொற்கொடி ஆயகலை அறுபத்து நான்கிணையும் கற்றாள் - இவ்வாக்கியம் எவ்வகை வினை சார்ந்தது?

A) பிறவினை

*B) தன்வினை

C) கலவை

D) செயப்பாட்டு வினை

42) உரிய மரபுச் சொல்லை எழுதுக.- “ மயில்

A) கரையும்

B) பிளிறும்

C) அலறும்

*D) அகவும்

43) அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.

A) வீண், வீழ்ச்சி, வீடு, வீதி

*B) வீடு, வீண், வீதி, வீழ்ச்சி

C) வீழ்ச்சி, வீண், வீதி, வீடு

D) வீழ்ச்சி, வீடு, வீதி, வீண்

44) பொருத்தமான பழமொழியைக் கண்டறி .- கற்றாரைக் கற்றாரே காமுறுவர்

A) ஞாயிறைக் கைமறைப்பார் இல்

B) முள்ளினால் முள்களையும் ஆறு

*C) பாம்பு அறியும் பாம்பின் கால்

D) ஆற்று உணா வேண்டுவது இல்

45) உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.- “ கொக்கொக்க கூம்பும் பருவத்து

*A) காத்திருத்தல்

B) வெறுத்திருத்தல்

C) அறியாதிருத்தல்

D) மறந்திருத்தல்

46.விழிகளை இலக்க நேரிட்டாலும் தாய் தமிழை இழந்து விடக்கூடாது

என கூறியவர் யார்?

A.திரு வி கல்யாண சுந்தரனார்.

 B. தேவநேய பாவாணர்.

*c. ரா இளங்குமரனார்.

D. பெருஞ்சித்திரனார்.

 

47. பின்வருவனவற்றுள் இளங்குமரனார் எழுதாத நூல் எது?

A. இலக்கண வரலாறு.

B. தனித்தமிழ் இயக்கம்.

C. பாவாணர் வரலாறு.

*d. திருக்குறள் மெய்ப்பொருளுரை.

48. பின்வருவனவற்றுள் பொருந்தாத கூற்றை தேர்வு செய்க.

A. காலையிலே மாலையும் வந்துவிட்டது என சிலேடையாக கூறியவர் கி வா ஜெகநாதன்.

B. அன்று கச்சேரியில் அவர் காதிலும் கம்மல் குரலிலும் கம்மல் என்று கூறியவர் இசை விமர்சகர் சுகுடு.

*c. சாகும்போது தமிழ் படித்து சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் என கூறியவர் திரு வி கல்யாண சுந்தரனார்.

D. பல் மருத்துவத்துறையில் சிறப்பு பட்டம் பெற்ற ஒரு நண்பரை இவர் பல் துறையின் வித்தகர் என அறிமுகப்படுத்தியவர் கி ஆ பெ விசுவநாதன்.

49. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை அல்ல?

A. வாழ்க்கை நடத்துவதற்கு பொருட்கள் பல வேண்டும் என கூறியவர் மூவா.

B. குடிசைகள் ஒரு பக்கம் கோபுரம் ஒரு பக்கம் பசித்த வயிறுகள் ஒரு பக்கம் புளிச்ச ஏப்ப காரர்கள் மறுபக்கம் என்று கூறியவர் பா ஜீவானந்தம்.

C. பெரியார் பேசாத நாள் உண்டோ குரல் கேட்காத ஊர் உண்டோ அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டோ என பெரியாரை சிறப்பித்துக் கூறியவர் அறிஞர் அண்ணா.

*d. இந்தியா தான் என்னுடைய மோட்சம் இந்தியாவின் நன்மைதான் என்னுடைய நன்மை எனக் கூறியவர்  பாரதிதாசன்.

50. பின்வருவனவற்றைப் பொருத்துக.

A. மேற்கு 1. உனக்கு

 b. கிழக்கு 2. குடக்கு.

 c. வடக்கு 3. வாடைக்காற்று.

 D. தெற்கு 4. தென்றல் காற்று

 A. 3 4 1 2.

 B. 2 3 4 1.

 *c. 2 1 3 4.

D. 1 2 3 4.

51. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?

A. குறிஞ்சிப்பாட்டு.

*b. முல்லைப்பாட்டு

c. குயில் பாட்டு.

d. பாப்பா பாட்டு.

52. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாக கூறியவர்யார்?

A. அவ்வையார்.

*b. கம்பர்.

C. தொல்காப்பியர்.

D. பென்னிகுவித்யா.

53. பின்வருவனவற்றுள் பொருந்தாத நூல் எது?

A. லிங்க புராணம்.

 B. கூர்மா புராணம்.

*c. பெரியபுராணம்.

D. திருக்கருவை அந்தாதி.

54. வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால் மாலாவதா காதல் நோயாளன் போல் மாய்த்தான் என்ற வரியை பாடியவர் யார்?

A. பூதத்தாழ்வார்.

*b. குலசேகர ஆழ்வார்.

C. பெரிய ஆழ்வார்.

D. பொய்கை ஆழ்வார்.

55.சேது தம்பி பாவலர் பற்றிய கூற்றுகளில் பொருந்தாத இணையை காண்க?

A. சேகு தம்பி பாவலரின் காலம் 1874 முதல் 1950 வரை.

B. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார்.

C. இவர் சீறாப்புராணத்திற்கு உரை எழுதினார்.

*d. 1908 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் நாள் இவர் சதாவதானி என்னும் பட்டம் பெற்றார்.

56. கரகாட்டத்தின் துணை ஆட்டம் எது?

*a. மயிலாட்டம்

B. காவடி ஆட்டம்.

C. தேவராட்டம்.

D. ஒயிலாட்டம்.

57. கலை ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்?

A. தேவநேய பாவாணர்.

B. தாராபாரதி.

*c. நா முத்துசாமி

D. கவிஞர் உமா மகேஸ்வரி.

58. பின்வருவனவற்றுள் குமரகுருபரர் ஏற்றாத நூல் எது?

A. கந்தர் கலிவெண்பா.

B. மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்.

C. மதுரை கலம்பகம்.

*d. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்.

59. தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம் என கூறியவர் யார்?

*a. மா போ சிவஞானம்.

B. ராஜாஜி.

C. மார்சல் நேசமணி.

D. மங்கல கிழார்.

60. தமிழ்நாடு பாரத மணி பாரத தேவி கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணிபுரிந்தவர் யார்

*a. குபா ராஜா கோபாலன்.

B. டி ராஜநாராயணன்.

C. மீரா.

D. பாரதியார்.

 

 

61.  தர்மார்த்தம், உபதேசம்வடமொழிச் சொற்களுக்கான சரியான தமிழ்ச்சொற்களைத் தெரிக.

நியாயத்தின் சாரம், போதனை

*அறத்தின் பொருள், அறிவுரை

அறத்தின் சாரம், இயம்புதல்

நீதியின் பொருள், எடுத்துக்கூறல்

 

62 பொருத்துக:

. அசும்பு  1. வாழும் முறை

. சேக்கை  2. நிலம்

. உய்முறை  3.  மாலை

. படலை  4.  படுக்கை

2 4 3 1

*2 4 1 3

4 2 3 1

4 1 2 3

 

 63 தொடைநயங்களால் வேறுபட்டுக் காணப்படும் அடியினைத் தெரிக.

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

*முன்னைக்கும்முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக்குமரிக்கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப்பேரரசே!

 

 64 “என்னால் ஒருமணி நேரம் மட்டுமே இங்கு இருக்க முடியும். – நான் தமிழ் உரைநடை பற்றிப் பேசிவிடுகிறேன்.”

மிகப் பொருத்தமான இணைப்புச் சொல்லைத் தெரிக.

அதனால்

இப்போது

என்பதால்

*அதற்குள்

 

65 பொருந்தாத இணையைத் தெரிக.

தாமரைவேங்கை

*மதியார்மதியாமை

இடிஅடி

கேடுசூடு

 

 66 ‘வாழ்த்துஅடிச்சொல்லைத் தெரிக.

வாழ்க

வாழி

வாழிய

*வாழ்த்து

 

 67 சொட்டு, வழிபாடு, கோறல்‌ - இத்தொழிற் பெயர்களை வகைப்படுத்துக

முதனிலை திரிந்த தொழிற்பெயர், முதனிலை தொழிற்பெயர், தொழிற்பெயர்

*முதனிலை தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர், தொழிற்பெயர்

தொழிற்பெயர், முதனிலை தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர்

தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர், முதனிலை தொழிற்பெயர்

 

68.  எந்தமிழ்நா என்பதைப்பிரித்தால்இவ்வாறு வரும்?

*எந்‌ + தமிழ்‌ + நா

எந்த + தமிழ்‌ + நா

எம்‌ + தமிழ் ‌ + நா

எந்தம்‌ + தமிழ்‌ + நா

 

69.  ‘உடுப்பதூஉம்உண்பதூஉம்காணின்பிறர்மேல்

வடுக்காண்வற்றாகும்கீழ்இக்குறளில்அமைந்துள்ள அளபெடையின்வகை தெரிக.

இசைநிறை அளபெடை

செய்யுளிசை அளபெடை

சொல்லிசை அளபெடை

*இன்னிசை அளபெடை

 

70.  பொருத்தமான வினாச்சொல்லைத் தெரிக.

பொய்இல் புலவர் என்பதன் விளக்கம்

தருக

*யாது

எதனால்

ஏன்

 

71.  ‘கிடைப்பதற்கரியபிரித்து எழுதுக.

கிடைப்பது + அரிய

கிடைப்பதற் + கரிய

*கிடைப்பதற்கு + அரிய

கிடைப்பதற் + அரிய

 

72.  வேறுபட்ட தொடரைத் தெரிக.

*‘தீதும் நன்றும் பிறர்தர வாரா

அலைகடல் ஓசை அமுதிசை ஆகும்

உறுதுயர் களைய, இன்சொல் பேணு

மேடுபள்ளம் வாழ்க்கையின் நியதி.

 

73. பொருத்துக.

. பாச்சல்‌ 1.  அழுத்தம்

. மகுளி 2.  மேல்க்கஞ்சி

. நீத்துப்பாகம்‌ 3.  சோற்றுக்கஞ்சி

. அலுக்கம்‌ - 4. பாத்தி

1 3 4 2

4 3 1 2

*4 3 2 1

2 3 4 1

 

74.  வேறுபட்ட குறளைத் தெரிக.

நச்சப்படாதவன்செல்வம்நடுஊருள்

நச்சு மரம்பழுத்தற்று.

உலகத்தொடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.

முயற்சி திருவினை ஆக்கும்முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்‌.

*உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

 

75.  கீழ்க்கண்டவற்றுள் விளித்தொடர் எது?

யார் அங்கே

ஓடியவள் சுமதி

*அம்மா பசிக்கிறது

பாலைக்குடித்தேன்

 

76.  மயங்கொலிப் பிழையற்ற தொடரைத் தெரிக.

தளைவாழை இலையில் உணவளிப்பது தமிழர்களின் மரபு.

*தலைவாழை இலையில் உணவளிப்பது தமிழர்களின் மரபு.

தலைவாழை இலையில் உணவழிப்பது தமிழர்களின் மரபு.

தலைவாழை இளையில் உணவளிப்பது தமிழர்களின் மரபு.

 

77.  இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார்இலானும்கெடும்‌.

ஏமராபொருள் தருக.

துணையில்லாத

அரணில்லாத

*பாதுகாப்பில்லாத

அரசியில்ஆத

 

78.  “தமிழக வடக்குதெற்கு எல்லைக்கிளர்ச்சிகளைத்தமிழகம்தழுவிய அளவில்தொடங்கி வைத்தது தமிழரசுக்கழகம்தான் -- அதனை நடத்துகின்ற பொறுப்பை எல்லைப்பகுதி மக்களிடமே விட்டு வைத்திருந்தேன்.”

மிகப் பொருத்தமான இணைப்புச் சொல்லைத் தெரிக.

ஆனாலும்

ஆனால்

இருந்தும்

*என்றாலும்

 

79.  உரிய சொல்கொண்டு நிரப்புக.

என் பள்ளிப்பருவத்தின்பசுமைமாறா நினைவுகள்நெஞ்சில் –“

எழுகிறது

எழுந்தது

எழுகின்றவை

*எழுகின்றன

 

80.  சரியான எழுத்துத்தமிழ் தொடரைத் தெரிக.

நாட்டுக்கே பெரியதலைவர்அவரு, விருதைக்குடுத்துட்டுப்பொசுக்குனு எங்கால்ல விழுந்துட்டாரு.

நாட்டுக்கே பெரிய தலைவர் அவர், விருதைக்குடுத்துட்டுப் பொசுக்கென்று எங்கால்ல விழுந்துட்டாரு.

நாட்டுக்கே பெரிய தலைவர்அவர், விருதைக்கொடுத்துவிட்டுப் பொசுக்கென்று என் காலில் விழுந்துட்டாரு.

*நாட்டுக்கே பெரிய தலைவர்அவர், விருதைக்கொடுத்துவிட்டுச் சட்டென்று   என் காலில் விழுந்துவிட்டார் .

 

81.  சந்திப்பிழையற்ற தொடரைத் தெரிக.

மண்ணாசை காரணமாக பகைவர்நாட்டைக் கைப்பற்றக்கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச்செல்வது வஞ்சிதிணை.

*மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக்கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச்செல்வது வஞ்சித்திணை.

மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டை கைப்பற்றகருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குசெல்வது வஞ்சித்திணை.

மண்ணாசை காரணமாக பகைவர் நாட்டை கைப்பற்றகருதி வஞ்சிப்பூவைச் சூடி போருக்குச்செல்வது வஞ்சித்திணை.

 

 

82.  ‘உதகமண்டலம்ஊரின் மரூஉப் பெயர் தெரிக.

ஊட்டி

நீலகிரி

*உதகை

நீலமலை

 

83.  ‘வாளால்அறுத்துச்சுடினும்மருத்துவன்பால்

மாளாத காதல்நோயாளன்போல்மாயத்தால்

மீளாத்துயர்தரினும்வித்துவக்கோட்டம்மா! நீ

ஆளா உனதருளை பார்ப்பன்அடியேனே.’

பாடலில் பயின்றுள்ள தொடைநயம் என்ன?

அடி மோனை

*அடி எதுகை

அடி இயைபு

சீர் எதுகை

 

84.  ‘கருந்துளைபிரித்தெழுதுக.

கரிய + துளை

*கருமை + துளை

கறுப்பு + துளை

கரு + துளை

 

85. ‘தெய்வம் நின்று கொல்லும்இது எவ்வகை வழுவமைதி?

பால்

இடம்

எண்

*திணை

 

86.  உரிய சொல்லைத் தெரிக.

வெற்றியில் வேண்டும் பணிவு,

விருந்தினரிடம் கொள்ளுங்கள் --.

நட்பு

உறவு

*கனிவு

பரிவு

 

87. வல்லினத்தை சரியான முறையில் இட்டு நீக்கிய தொடரைத் தெரிக.

*இன்றைக்குப் பல்வேறு துறைகளின்வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது.

இன்றைக்கு பல்வேறுத் துறைகளின்வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது.

இன்றைக்குப் பல்வேறு துறைகளின்வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்புத் தேவைப்படுகிறது.

இன்றைக்குப் பல்வேறுத் துறைகளின்வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்புத் தேவைப்படுகிறது.

 

 

88. வேறுபட்ட இணையைத் தெரிக.

தாமம்- தார்

தமர்கேளீர்

*தரளம்துகிர்

செறுநர்பகைவர்

 

89. [சரியான சொல்கொண்டு நிரப்புக.

வீட்டினுள்விளையாடியபடி சுற்றி வந்தபோது ஓர்ஓரத்தில்கிடந்த சிறிய மேசையும்அதன்மீதிருந்த ஒரு பொருளும்மேரியின்கவனத்தை

ஈர்த்தது

*ஈர்த்தன

ஈர்த்தவை

ஈர்த்திருந்தது

 

90.  பொருத்துக:

. பெயரெச்சத் தொடர்  -  1. அம்மா திட்டாதே

. வினையெச்சத் தொடர்  2. மறந்த பாடல்

. விளித்தொடர்  3.  யார் அவன்

. வினாத்தொடர்  4. ஓடி வந்தான்

2 4 3 1

*2 4 1 3

3 4 1 2

1 4 3 2

 

91.   சரியான அகரவரிசையைத் தெரிக.

காப்பு, செங்கீரை, தால்‌, சப்பாணி, முத்தம்‌, வருகை, அம்புலி.

காப்பு, சப்பாணி, செங்கீரை, தால்‌, முத்தம்‌, வருகை, அம்புலி.

*அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, தால்‌, முத்தம்‌, வருகை,

அம்புலி, சப்பாணி, செங்கீரை, காப்பு, தால்‌, முத்தம்‌, வருகை,

 

92. தொடரில் விடுபட்ட இடத்தைத் தொழிற்பெயர் கொண்ட்உ நிரப்புக.

எனக்கு நடனம்பிடிக்காது.

ஆடப்

ஆடினால்

ஆடுவது

*ஆடுதல்

 

93.  வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்‌.

வெண்மைபொருள் தருக.

தூய்மை

*அறியாமை

வெள்ளை நிறம்

சத்தம்

 

94.  முழு நிலவு, கடல், இளமை, யானை இவற்றைக் குறிக்கும் ஒருசொல்?

மதி

*உவா

பௌவம்

யுவா

 

95. ஆசுகவி எனப்படுபவர்?

இனிமையான சொற்களைக்கொண்டு கவிபாடுபவர்

எழுத்துகளை ஓவியமாகத் தீட்டிக் கவிபாடுபவர்

*இன்ன பொருளை இன்னசொல் கொண்டு பாடுபவர்

விரிவான வகையில் கவிபாடுபவர்

 

96.  ‘பாடான்திணைபிரித்தெழுதுக.

பாடான் + திணை

*பாடு + ஆன் + திணை

பாட்டு + ஆன் + திணை

பாடுவான் + திணை

 

97.  “நான் நாளை மதுரை செல்கிறேன்இது எவ்வகை வழுவமைதி?

இடம்

*காலம்

பால்

திணை

 

98.  ‘அறிவுடையார்இலக்கணக் குறிப்பு தருக.

வினை முற்று

பலர்பால் வினைமுற்று

பெயரெச்சம்

*வினையாலணையும் பெயர்

 

99.  பிழையில்லாச் சொல் தெரிக.

சேர்க்கை

*செயற்க்கை

படர்க்கை

இடக்கை

 

100.  ‘உழுவைஎன்பதன் பொருள்?

மாடு

குதிரை

யானை

*புலி

101.             1) கீழ்கண்ட கூற்றுக்களை ஆராய்க.

கூற்று - 1: கிராம சபை என்பது ஒவ்வொரு ஊராட்சியும் சரத்து 243a இன்படி கட்டாயமாக அமைக்கப்பட வேண்டும்.

கூற்று - 2: கிராம சபை ஒரு நிரந்தரமற்ற சபையாகும்.

கூற்று - 3: 18 வயது பூர்த்தி அடைந்த வாக்களிக்கத் தகுதி பெற்ற எந்த ஒரு குடிமகனும் இச்சபையின் உறுப்பினராகக் கூடிய தகுதியைப் பெற்றுள்ளார்.

A) கூற்று 2 மற்றும் 3 மட்டும் சரி

*B) கூற்று 1 மற்றும் 3 மட்டும் சரி

C) கூற்று 1 மற்றும் 2 மட்டும் சரி

D) மேற்கண்ட அனைத்து கூற்றுகளும் சரி

 

102.           பின்வருவனவற்றுள் வில்லியம் டிம்பை உடன் தொடர்புடைய பத்திரிக்கை எது?

A] மெட்ராஸ் ஸ்டாண்டர்ட்

B] பெங்கால் கெசட்

*C] மெட்ராஸ் டைம்ஸ்

D] A மற்றும் C

 

103.           சென்னைவாசிகள்சங்கம்‌ (Madras Native Association-MNA), பற்றிய கூற்றுக்களில்  எது /எவை  சரியானவை என்று  காண்க .

1 இவ்வமைப்பில்கல்வியாளர்களே  அதிக எண்ணிக்கையில்அங்கம்வகித்தனர்

2 கிறித்தவ சமயப் பரப்பாளர்களின்செயல்பாடுகளுக்கு அரசு ஆதரவளித்ததைஎதிர்த்தனர்‌.

A ஒன்று மட்டும் சரி

*B இரண்டு மட்டும் சரி

C இரண்டுமே சரி

D இரண்டுமே தவறு

 

 

104.            ரூ.7500-க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் ஆறு மாதங்களுக்கான தனி வட்டியைக் காண்க.

          (A)     ரூ.600/-
          (B)     
ரூ.700/-
          (C)    
ரூ.800/-
*        (D)    
ரூ.900/-
          (E)     
விடை தெரியவில்லை

105.           முந்தைய காலத்தில் எந்த மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அமைப்பு உச்சநிலையை அடைந்தது?

*A) சோழர்கள்

B) பல்லவர்கள்

C) மௌரியர்கள்

D) சாளுக்கியர்கள்

 

106.           பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க

A] இராமலிங்க அடிகள்

B] வைகுண்ட சுவாமிகள்

C] அயோத்திதாச பண்டிதர்

*D] விவேகானந்தர்

 

107.            தி ஹிந்து நாளிதழ் தொடங்கப் பட்ட ஆண்டு

A 1882

B 1885

*C 1878

D 1876

 

 

108.           எத்தனை வருடங்களில் ரூ.450/- தொகையானது ஆண்டு வட்டி 4.5%-ல்  தனி வட்டி ரூ.81/-ஐக் கொடுக்கும்?

          (A)     3.5
வருடங்களில்
*        (B)      4 வருடங்களில்
          (C)     4.5 வருடங்களில்
          (D)     5 வருடங்களில்
          (E)      விடை தெரியவில்லை

109.           சரியான இணைகளைக் காண்க.

1 சுதேச மித்ரன் பருவ இதழ்.          1899

2 சென்னை வாசிகள் சங்கம்            1852

3 சென்னை மகா ஜன சபை             சித்தரவதை ஆணையம் ஒழிப்பு  1879

A ஒன்று மட்டும் சரி

*B இரண்டு மட்டும் சரி

C மூன்று மட்டும் சரி

D ஒன்று மற்றும் இரண்டு சரி

 

110.             பின்வரும் கூற்றுக்களை ஆராய்க

1]இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய அன்னிபெசன்ட் 1915இல் ஜூலை 14 அன்று நியூ இந்தியா எனும் நாளிதழைத் தொடங்கினார்

2] சென்னையில் அன்னிபெசன்ட் நடத்திய உரையில் தன்னாட்சி குறித்த தனது கொள்கையை வெளியிட்டார்

3] ஜூன் 1917-ல் அன்னிபெசன்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் ஊட்டியில் சிறைபிடிக்கப்பட்டனர்

A] ஒன்று மட்டும் சரி

*B] ஒன்று மற்றும் மூன்று சரியானது

C] மூன்று மட்டும் சரி

D] இரண்டு மற்றும் மூன்று சரியானது

 

111. கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்ந்து அவற்றில் சரியான கூற்றைத் தேர்வு செய்க.

கூற்று - 1: சமூக மேம்பாட்டுத் திட்டத்தை மேம்படுத்தவும் அதன் நிலையை கண்காணிக்கவும் 1957 ஆம் ஆண்டு பல்வந்தராய் மேத்தா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

கூற்று - 2: மாவட்ட ஆட்சியரை உறுப்பினராகக் கொண்ட மாவட்ட மேம்பாட்டுக் குழு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இக்குழு பரிந்துரைத்தது.

கூற்று - 3; இந்த மாவட்ட அமைப்பு ஆலோசனை மற்றும் திட்ட செயலாக்க அமைப்பாக செயல்படுகிறது.

A) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

*B) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

D) மேற்கண்ட அனைத்தும்

 

112.             அஸ்மிதா ரூ.9,534/- என்ற தொகையை ஆண்டு வட்டி 4%-ல் முதலீடு செய்ததில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தனி வட்டியுடன் மொத்தத் தொகை ரூ.11,44/- ஆக மாறுகிறது. இந்த மொத்தத் தொகை கிடைப்பதற்கு அவள் பணத்தை எத்தனை வருடங்களுக்கு முதலீடு செந்திருப்பாள்?

          (A)     2
வருடங்கள்
          (B)      4 வருடங்கள்
*        (C)     5 வருடங்கள்
          (D)     10 வருடங்கள்
          (E)      விடை தெரியவில்லை

113.             கீழ்கண்ட தினங்களில் கிராம சபை கூட்டப்படும் நாட்களில் இருந்து வேறுபட்ட ஒன்றை தேர்வு செய்க?

*A) தேசிய ஊராட்சி தினம்

B) உலக தண்ணீர் தினம்

C) உள்ளாட்சி தினம்

D) தொழிலாளர் தினம்

 

114.              சென்னை மகா ஜன சபையின் முக்கிய கோரிக்கைகளில் தவறானவற்றைக் காண்க.

A வரிகளைக் குறைப்பது

B ராணுவ செலவுகளைக் குறைப்பது

C குடிமைப் பணித் தேர்வுகளை இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஒரே சமயத்தில் நடத்த வேண்டும்

*D லண்டனில் உள்ள இந்திய கவுன்சிலை மூடக்கூடாது

 

115.             கூற்று: .உ சிதம்பரம் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.காரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின்முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.

*A) கூற்று மற்றும் காரணம் சரி.காரணம் கூற்றை விளக்குகிறது

B)கூற்று மற்றும் காரணம் சரிஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை

C) கூற்று சரி; காரணம் தவறு

D) கூற்று தவறு; காரணம் சரி

 

116.             தீபக் ரூ.21,250/- என்ற தொகையை 6 வருடங்களுக்கு முதலீடு செய்தான். 6 ஆண்டுகளுக்குப் பிறகு அவனுக்கு ரூ.26,350/- மொத்தத் தொகையாக கிடைப்பதற்கு தனி வட்டி விகிதம் என்னவாக இருக்கும்?

          (A)     5%
ஆண்டு வட்டி விகிதம்
*        (B)      4% ஆண்டு வட்டி விகிதம்
          (C)     8% ஆண்டு வட்டி விகிதம்
          (D)     12% ஆண்டு வட்டி விகிதம்
          (E)      விடை தெரியவில்லை

117.              திருநெல்வேலியில் தேசாபிமான சங்கத்தை தோற்றுவித்தவர் யார்

A சத்திய மூர்த்தி

B வீரவாஞ்சி

*C . . சிதம்பரனார்

D பாரதியார்

 

118.             அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் புரட்சிகர தேசியவாதிகள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் யார்?

*A] சித்தரஞ்சன் தாஸ்

B] ஜவஹர்லால் நேரு

C] மகாத்மா காந்தி

D] சுபாஷ் சந்திர போஸ்

 

119.             பின்வரும் கூற்றுகளில் இருந்து 73 & 74 வது திருத்த சட்டங்களில் தவறான கூற்றைத் தேர்வு செய்க.

A) இரண்டு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையை உடைய சிறு மாநிலங்களில் பஞ்சாயத்துக்கள் இரண்டடுக்கு முறையில் இயங்குகின்றன

B) பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது

C) எல்லா அளவு நிலைகளிலும் தலைவர்கள் பதவிக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

*D) மேற்கண்ட எதுவும் இல்லை

 

120.           ஒரு தொகை ரூ.1,600/- 2 வருடங்கள் 4 மாதங்களில் தனி வட்டியாக ரூ.252/ஐக் கொடுக்கும். எனில் ஆண்டு வட்டி விகிதம் என்ன?

          (A)     6%
          (B)      6 ¼ %
          (C)     6 ½%
*        (D)     6 ¾ %
          (E)     
விடை தெரியவில்லை

121.             சிவாஜியின் முதல் ராணுவ வெற்றி எது

A] ரேய்க்கர்

B] தோர்ணா

*C] கோண்டுவானா

D] ஜாவாலி

 

122.           சரியான இணையைப் பொருத்துக.

A) மதராஸ் கிராம பஞ்சாயத்து சட்டம் - 1) 1958

B) மதராஸ் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் சட்டம் - 2) 1950

C) தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் - 3) 1952

D) சமூக மேம்பாட்டு திட்டம்  - 4) 1994

A) 3 2 4 1

B) 2 4 3 1

C) 4 3 1 2

*D) 2 1 4 3

 

123.           இவற்றுள் எவை சுப்பிரமணிய பாரதியின் கவிதைகள் ஆகும்?

A வந்தே மாதரம்

B அச்சமில்லை

C எந்தையும் தாயும்

*D மேலே உள்ள அனைத்தும்

 

124.            ரூ.8,630/- தொகைக்கு 3 வருடங்கள் கழித்து என்ன ஆண்டு தனி வட்டி விகிதத்தில் ரூ.1,553.40/- வட்டித் தொகையாக கிடைக்கும்?

          (A)     8%
ஆண்டு வட்டி விகிதம்
          (B)      5% ஆண்டு வட்டி விகிதம்
          (C)     7% ஆண்டு வட்டி விகிதம்
*        (D)     6% ஆண்டு வட்டி விகிதம்
          (E)      விடை தெரியவில்லை

125.           இந்திய நகராட்சி நிர்வாகங்களின் வரலாற்றில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும்  திட்டத்தினை முதன்முதலில் செயல்படுத்தியவர் யார்?

A) காமராஜர்

*B) பெரியார்

C) C. ராஜாஜி

D) சத்தியமூர்த்தி

 

126.           சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:

கூற்று 1 : லோகமான்ய திலகர் சுதேசி நேவிகேஷன் நிறுவனத்தின் வெற்றியைப் பற்றி தனது கேசரி மற்றும் மராட்டா பத்திரிகைகளில் எழுதினார்.

கூற்று 2 : அரவிந்த கோஷ் சுதேசி முயற்சிகளைப் பாராட்டினார் மற்றும் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதை ஊக்குவிக்க உதவினார்.

A ஒன்று மட்டும் சரி

B இரண்டு மட்டும் சரி

*C இரண்டுமே சரி

D இரண்டுமே தவறு

 

127.            ரூ.600/- தொகைக்கு 4 ஆண்டுகளுக்கு தனி வட்டி மற்றும் ரூ.600/-க்கு 2 ஆண்டுகளுக்கான தனி வட்டி இணைந்து ரூ.180/- கிடைக்கும் எனில் வட்டி விகிதத்தைக் காண்க.

          (A)     4% ஆண்டு வட்டி விகிதம்
*        (B)      5% ஆண்டு வட்டி விகிதம்
          (C)     5.5% ஆண்டு வட்டி விகிதம்
          (D)     6.25% ஆண்டு வட்டி விகிதம்
          (E)      விடை தெரியவில்லை

128.           மராட்டிய நிர்வாகத்தில் கிராமத்தை நிர்வகித்த அதிகாரமிக்க கிராமத் தலைவர் யார்

A] தேஸ்முக்

*B] பட்டீல்

C] குல்கர்னி

D] இவர்கள் அனைவரும்

 

129.           சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:

கூற்று 1 : சத்தியமூர்த்தி 1887 இல் திருமயத்தில் பிறந்தார்.

கூற்று 2 : ராஜாஜி ஆலோசனையின் பேரில் அவர் அரசியலுக்கு வந்தார்.

கூற்று 3 : அவர் "தென்னிந்தியாவின் தீப்பொறி " என்று பிரபலமாக அறியப்பட்டார்.

A ஒன்று மற்றும் இரண்டு சரி

B இரண்டு மட்டும் சரி

*C ஒன்று மற்றும் மூன்று சரி

D அனைத்தும் சரி

 

130.           பொருத்தமற்ற இணையைத் தேர்வு செய்க

*A] கெய்க்வாட் - புனே

B] பான்ஸ்லே - நாக்பூர்

C] ஹோல்கார் - இந்தூர்

D] சிந்தி அல்லது சிந்தியா - குவாலியர்

 

131.             ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 8% ஆண்டு வட்டி விகிதத்தில் 6 வருடங்களுக்குப் பிறகு வீணாவிற்கு ரூ.8,376/- தனி வட்டியாகக் கிடைத்தது. எனில் வீணா முதலீடு செய்த தொகை எவ்வளவு?

          (A)    
ரூ.16,660/-
          (B)     
ரூ.17,180/-
*        (C)    
ரூ.17,450/-
          (D)    
ரூ.18,110/-
          (E)     
விடை தெரியவில்லை

132.           உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடித்தளமிட்டவர் யார்?

A) மேலோ பிரபு

B) லிட்டன் பிரபு

C) காலிங் பிரபு

*D) ரிப்பன் பிரபு

 

133.           இனி தலைநகர் சதாரா நகர் அன்று புனே நகரே என்று அறிவித்தவர் யார்

 

A] பாலாஜி விஸ்வநாத்

B] பாஜிராவ்

*C] பாலாஜி பாஜிராவ்

D] சாகு

 

134.            பின்வரும் கூற்றுகளில் இருந்து உத்திரமேரூர் கல்வெட்டு குறித்த தவறான கூற்றை தேர்வு செய்க.

கூற்று - 1: கி.பி. பொ.919 - கி.பி. பொ.922  முதலாம் பராந்தக சோழனின் காலத்தை சார்ந்தது

கூற்று - 2: ஒவ்வொரு ஊரிலும் ஓர் உள்ளாட்சி அமைப்பு ஏற்படுத்தப்பட்டதை குறிப்பிடுகிறது. இந்த சபைகள் ஊர் மற்றும் மகாசபை என்று இரண்டு விதங்களாக அழைக்கப்பட்டன.

கூற்று - 3: உள்ளாட்சி அமைப்பில் அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் உறுப்பினராக  இருந்ததைக் குறிப்பிடுகிறது. இதில் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டது.

A) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

B) கூற்று 1 மட்டும்

*C) கூற்று 3 மட்டும்

D) மேற்கண்ட அனைத்தும்

 

135.           சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக முதல் இந்தியர் எந்த ஆண்டு நியமிக்கப் பட்டார்

*A 1877

B 1876

C 1800

D 1870

 

136.           எந்த தொகைக்கு 3 ¾% வட்டி விகிதத்தில் 2 1/3 வருடங்களில் தனி வட்டி ரூ.210/- கிடைக்கும்?

          (A)    
ரூ.1,580/-
*        (B)     
ரூ.2,400/-
          (C)    
ரூ.2,800/-
          (D)    
ரூ.3,200/-
          (E)     
விடை தெரியவில்லை

137.            மராட்டியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த ஆண்டு

A] 1771

B] 1749

C] 1751

*D] 1761

 

138.           எந்த ஆண்டு ஆங்கிலேயர்கள் பாரதியின் படைப்புகளுக்குத் தடை விதித்தனர்?

A 1907

*B 1909

C 1906

D 1910

 

 

139.           கிராம ஊராட்சியின் ஆய்வாளராக ________ செயல்படுகின்றார்.

A) வட்டார வளர்ச்சி அலுவலர்

*B) மாவட்ட ஆட்சியர்

C) வருவாய் ஆய்வாளர்

D) கிராம நிர்வாக அலுவலர்

 

140.            இரண்டு ஆண்டுகளாக உள்ள கடன் தொகை ரூ.132/-  ஆண்டு தனி வட்டி 5%-ல் அன்றைய மதிப்பு என்ன?

          (A)    
ரூ.112/-
          (B)     
ரூ.118.80/-
*        (C)    
ரூ.120/-
          (D)    
ரூ.122/-
          (E)     
விடை தெரியவில்லை

141.              அயன மண்டல வறண்ட காடுகளில் ஆண்டு மழைப்பொழிவு எவ்வளவு?

A] 50 சென்டிமீட்டர்

*B] 50 முதல் 100 சென்டிமீட்டர்

C] 100 முதல் 200 cm

D] 200cm க்கு மேல்

 

142.            முதல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த தலைவர்களின் எண்ணிக்கை

*A 22

B 72

C 67

D 2

 

143.            கீழ்கண்ட அரசியலமைப்பு சரத்துகளைப் பொருத்துக.

A) வரிவிதிப்பு அதிகாரம் - 1) 243 I

B) மாநில நிதிக்குழு - 2) 243 D

C) இட ஒதுக்கீடு - 3) 243 K

D) மாநில தேர்தல் ஆணையம் - 4) 243 H

A) 3 4 1 2

B) 4 3 1 2

C) 2 1 4 3

*D) 4 1 2 3

       

144.            ஒரு தொகைக்கு X வருடங்களுக்கு X%-ல் தனி வட்டி ரூ.X/- ஆகும். அந்த தொகை என்ன?

          (A)    
ரூ.X/-
*        (B)     
ரூ.(100/X)/-
          (C)    
ரூ.100X/-
          (D)    
ரூ.(100/X2)
          (E)     
விடை தெரியவில்லை

145.            இந்தியாவில் எத்தனை வகையான வன உயிரினங்களுக்கு மேற்பட்டவை காணப்படுகின்றன?

*A] 81251

B] 80250

C] 80255

D] 86252

 

146.            கீழ்க்கண்ட பேரூராட்சி குறித்த கூற்றுக்களை ஆராய்ந்து சரியான கூற்றை தேர்வு செய்க.

கூற்று - 1: இப்பகுதியில் மக்கள் தொகை 5,000 - க்கு மேலும் 13,000 - க்கு மிகாமலும் இருக்கும்.

கூற்று - 2: ஒரு பேரூராட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 3 க்கு குறையாமலும் அதே சமயத்தில் 15ஐ விட மிகாமலும் அம்மாநில சட்டம் கூறும் எண்ணிக்கையில் இருக்கும்.

கூற்று - 3: பேரூராட்சியின் கூட்டங்களை பொதுவாக துணை ஆணையர் கூட்டுகிறார்.

A) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

B) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

*D) மேற்கண்ட அனைத்தும்

 

147.            இந்திய வனவிலங்கு வாரியம் எப்போது ஏற்படுத்தப்பட்டது?

A] 1972

B] 1963

*C] 1952

D] 1983

 

148.            1908ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் யார் ?

A கோபால கிருஷ்ண கோகலே

B மதன் மோகன் மாளவியா

C பூபேந்திர நாத் போஸ்

*D ராஷ் பிஹாரி கோஷ்

149.            X, Y, Z ஆகியவை மூன்று தொகைகள். இதில் Y என்பதனு X-ன் தனி வட்டி, Z என்பது சம காலத்திற்கான Y-ன் தனி வட்டி மற்றும் அதே அளவிலான வட்டி விகிதத்தைக் கொண்டது. எனில் கீழே உள்ளவற்றுள் எது சரியாகும்?

          (A)     X2 = YZ
          (B)      Y2 = XZ
          (C)     X2 = XY
*        (D)     XYZ = 1
          (E)     
விடை தெரியவில்லை

 

150.           மாநகராட்சியின் தலைமை நிர்வாகத் தலைவராக செயல்படும் அதிகாரம் பெற்றவர் யார்?

A) மாவட்ட ஆட்சியர்

*B) ஆணையர்

C) மேயர்

D) துணை மேயர்

 

151.             1887ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு குறித்த கூற்றுக்களில் தவறானவற்றைக் காண்க

1 இந்த மாநாட்டில் முதல் தீர்மானத்தை முன் மொழிந்தவர் சுப்ரமணிய அய்யர்

2 பல்வேறு பிராந்திய குழுக்களிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, முஸ்லிம்கள் INC இல் சேருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது

*A ஒன்று மட்டும் தவறு

B இரண்டு மட்டும் தவறு

C இரண்டுமே தவறு

D இரண்டுமே சரி

 

152.           ரூ.8,000/- தொகைக்கு ஆண்டு வட்டி 15%-ல் 3 வருடங்களில் சேர்ந்த கூட்டு வட்டி எவ்வளவு?

 (A)            
ரூ.4,051/-
 (*B)   
ரூ.4,167/-
 (C)             
ரூ.4,283/-

(D)            ரூ..4,325/-
 (E)
விடை தெரியவில்லை

153.           இவற்றுள் எந்த ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு லால் மோகன் கோஷ் தலமை வகித்தார்

*A 1893

B 1898

C 1903

D 1908

 

154.            தமிழகத்தில் அமைந்துள்ள 18 வது வனவிலங்குகள் சரணாலயம் எது?

A] இந்திரா காந்தி சரணாலயம்

B] கொடைக்கானல் சரணாலயம்

*C] பெரியார் சரணாலயம்

D] மேகமலை சரணாலயம்

 

155.           இந்தியாவின் மிக பழமையான உள்ளாட்சி அமைப்பு என குறிப்பிடப்படுவது_______ஆகும்.

A) மும்பை

B) கல்கத்தா

*C) சென்னை

D) மேற்கண்ட அனைத்தும்

 

156.           ஒரு நபர் ஒவ்வொரு வருட முடிவிலும் ரூ.200/- சேமிக்கிறார் மற்றும் அந்த பணத்தை 5%-ல் கூட்டு வட்டியில் கடனாக கொடுக்கிறார். எனில், 3 வருடங்களுக்குப் பிறகு அவருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்?

 (A)            
ரூ.565.25/-
 (B)             
ரூ.635/-
*(C)            
ரூ.662.02/-
 (D)            
ரூ.666.50/-
 (E)
விடை தெரியவில்லை

157.            பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து அவற்றிலிருந்து தவறான கூற்றைத் தேர்வு செய்க.

கூற்று - 1: இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான 26 நவம்பர் 1949 முதல் தேசிய மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கூற்று - 2: தேசிய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலையும், மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையும் நடத்துகின்றன.

கூற்று - 3: தமிழ்நாடு மாநில தற்போதைய தேர்தல் அதிகாரியாக பழனி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

A) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

B) கூற்று 3 மட்டும்

*C) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

D) மேற்கண்ட அனைத்து கூற்றுகளும் சரி

 

158.           2023 ஆம் ஆண்டு வனநிலை அறிக்கையின்படி இந்தியக்  காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு எத்தனை சதவிகிதம்?

A] 25%

*B] 25.17%

C] 27.15%

D] 30.16%

 

159.           தமிழ் நாட்டில் நடந்த சுதேசிய இயக்கம் பற்றிய குறிப்புக்களுள் சரியானவற்றைக் காண்க

1 மக்களின்நாட்டுப்பற்று உணர்வுகளைத்தட்டிஎழுப்பியதில்சுப்பிரமணிய பாரதியின்தேசபக்திப்பாடல்கள்மிக முக்கியமானவையாகும்‌.

2 மக்களைத்திரட்டுவதற்கு முதன்முதலாக ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டது

*A ஒன்று மட்டும் சரி

B இரண்டு மட்டும் சரி

C இரண்டுமே சரி

D இரண்டுமே தவறு

 

160.           முதல் வருடத்திற்கு வட்டி விகிதம் 4%, இரண்டாவது வருடத்திற்கு வட்டி விகிதம் 5% மற்றும் மூன்றாவது வருடத்திற்கு 6% வட்டி விகிதம் எனில் ரூ.10,000/-க்கு 3 வருடங்களில் கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?

*(A)            
ரூ.1,575.20/-
 (B)             
ரூ.1,600/-
 (C)             
ரூ.1,625.80/-
 (D)            
ரூ.2,000/-
 (E)
விடை தெரியவில்லை

 

 

161.             கீழ் உள்ளவற்றுள் மத்திய வரி ஆதாரங்களில் வராதது எது?

*A வேளாண்மை நிலங்கள் மீதான பண்ணை வரி

B உறுதி மொழிப் பத்திரங்கள் மீதான வில்லைக் கட்டணம்

C லாட்டரிச் சீட்டு மீது விதிக்கும் வரி

D செய்தித் தாள் மீதான வரி

 

162.       தமிழக அரசு சமூக நலத்துறை வாரியம் நிறுவப்பட்ட ஆண்டு எது?

A) 1953

*B) 1954

C) 1955

D) 1956

 

163.           எந்த ஆண்டில் ஸ்வதேசமித்ரன் நாளிதழானது?

A18991

*B 1899

C 1878

D 1884

    

164.        ஆப்பிளில் உள்ள அமிலம் என்ன?

*A)மாலிக் அமிலம்

 B)சிட்ரிக் அமிலம்

C)டார்டாரிக் அமிலம்

D)ஆக்சாலிக் அமிலம்

 

165.       பின்வருவனவற்றில் எது சேவை அல்ல?

A சுகாதாரம்

*B உற்பத்தி

C ஆலோசனை

D கல்வி

 

166.       ஆண்டு வட்டி விகிதம் 20%-ல் ரூ.10,000/- தொகைக்கு 2 ஆண்டுகளில் அரையாண்டு கூட்டு வட்டி முறையில் கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?

      (A)  
ரூ.4,400/-
      (B)   
ரூ.4,600/-
*    (C)   
ரூ.4,641/-
      (D)  
ரூ.4,680/-
      (E)   
விடை தெரியவில்லை

167.        கிராமப்புறத்திலும் நகர்ப்புறத்திலும் நோய் தடுக்கும் முறை மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை மேற்பார்வை செய்பவர் யார்?

A) மாவட்ட ஆட்சியர்

B) கிராம நிர்வாக அதிகாரி

C) சட்டமன்ற உறுப்பினர்

*D) பொது சுகாதார இயக்குநர்

 

168.       கீழ் உள்ள குறிப்பு உணர்த்தும் தலைவரைக் கண்டறியவும்.

                1884ஆம் ஆண்டு பிறந்தார்

                இவரது சொந்த ஊர் வத்தலகுண்டு ஆகும்

                சுதந்திர போராட்டத்தில் மக்களை ஒன்று திரட்ட தர்ம பரிபாலன சமாஜம் என்ற அமைப்பை   ஏற்படுத்தினார்

                A சுப்ரமணிய அய்யர்

                B ..சிதம்பரனார்

                *C சுப்ரமணிய சிவா

                D வாஞ்சிநாதன்

 

169.       வரிகள் என்றால் என்ன?

A நிதி அபராதங்கள்

*B தன்னார்வ கொடுப்பனவுகள்

C கட்டாய பங்களிப்புகள்

D மேலே எதுவும் இல்லை

 

170.        மனித வயிற்றில் சுரக்கும் அமிலம் என்ன?

A) மாலிக் அமிலம்

B)டார்னிக் அமிலம்

C)ஆஸ்காரிக் அமிலம்

*D)ஹைட்ரோ குளோரிக் அமிலம்

 

171.         மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) என்பது எந்த வகையான வரிக்கு ஒரு எடுத்துக்காட்டு?

A நேரடி வரி

*B மறைமுக வரி

C முற்போக்கான வரி

D தன்னார்வ கொடுப்பனவுகள்

 

172.        சமரச வேத சன்மார்க்க சங்கம் எப்போது நிறுவப்பட்டது?

A 1864

*B 1865

C 1866

D 1867

 

173.        ரூ.15,625/- தொகைக்கு 16% ஆண்டு வட்டி விகிதத்தில் காலாண்டு வட்டி முறையில் 9மாதங்களில்  கிடைக்கும் கூட்டு வட்டியைக் கணக்கிடுக.

      (A)   ரூ.1,851/-
      (B)   
ரூ.1,941/-
*    (C)   
ரூ.1,951/-
      (D)  
ரூ.1,961/-
      (E)   
விடை தெரியவில்லை

174.        1954 இல் எந்த நாடு முதலில் GST (சரக்கு மற்றும் சேவை வரி) அமல்படுத்தியது?

A கனடா

B அமெரிக்கா

*C பிரான்ஸ்

D இந்தியா

 

175.        பல்நோக்கு சுகாதார பணியாளர் திட்டம் நிறுவப்பட்ட ஆண்டு எது?

A) 1975

B) 1976

*C) 1977

D) 1978

 

176.        ரூ.P தொகையில் R% வட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டி மற்றும் கூட்டு வட்டி ஆகியவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் எவ்வளவு?

      (A)  
ரூ.PR/100
      (B)   
ரூ.2PR/100
      (C)   
ரூ.PR2/100
*    (D)  
ரூ. PR2/(100)2
      (E)   
விடை தெரியவில்லை

177.        உரமாக பயன்படும் அம்மோனியன் நைட்ரேட் சேர்மம் மற்றும் சாயங்கள் வண்ணப்பூச்சுகள் தயாரிக்க பயன்படும் அமிலம் என்ன?

A)ஹைட்ரோ குளோரிக் அமிலம்

B)சல்புரிக் அமிலம்

C)ஆக்சாலிக் அமிலம்

*D)நைட்ரிக் அமிலம்

 

178.        சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் எப்போது அமலுக்கு வந்தது

*A ஜூலை 1, 2017

B ஜனவரி 1, 2017

C ஏப்ரல் 15, 2016

D அக்டோபர் 31, 2018

 

179.       அயோத்தி தாசர் தொடங்கிய வார இதழின் பெயர் என்ன?

A கோடியில் தமிழன்

*B ஒரு பைசா தமிழன்

C திராவிட சிறகுகள்

D வெற்றியோடு போராடு

 

180.       ஜிஎஸ்டி பற்றி பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

1 GST என்பதுஒரு புள்ளி வரி "one point tax"

2 இது மத்திய மற்றும் மாநில அரசுகளால் சரக்கு மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் அனைத்து நேரடி வரிகளையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

3  இது ஜூலை 1, 2017 முதல் நாடு முழுவதும் நடை முறையில் உள்ளது

4 இது இந்தியாவில் வரிக் கட்டமைப்பை ஒருங்கிணைக்கிறது

A ஒன்று மற்றும் இரண்டு சரி

B இரண்டு மற்றும் மூன்று சரி

*C மூன்று மற்றும் நான்கு சரி

D அனைத்தும் சரி

 

181.         குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தினை நிறைவேற்றுவதில் முதல் இடத்தை வகிக்கும் மாநிலம் எது?

*A) தமிழ்நாடு

B) மத்திய பிரதேசம்

C) பீகார்

D) மகாராஷ்டிரா

 

 

 

182.       ரூ.30,000/- என்ற தொகைக்கு 7% ஆண்டு வட்டியில் கிடைக்கும் கூட்டு வட்டி ரூ.4,347/- எனில் கால அளவு என்ன?

*    (A)   2
ஆண்டுகள்
      (B)    2 ½ ஆண்டுகள்
      (C)    3 ஆண்டுகள்
      (D)   4 ஆண்டுகள்
      (E)    விடை தெரியவில்லை

183.       பொதுத்துறை நிறுவனங்களில் இந்தியாவில் கணிசமான முதலீட்டின் அவசியத்தை வலியுறுத்திய குழுவின் பெயரைக் குறிப்பிடவும்.

A ராஜமன்னார் கமிட்டி

*B ரங்கராஜன் கமிட்டி

C தாராபூர் குழு

D நரசிம்மம் கமிட்டி

 

184.        வைகுண்ட சுவாமிகளின் இயற் பெயர் என்ன

A கதிரவன்

*b முடிசூடும் பெருமாள்

C செண்பகராமன்

D எதுவும் இல்லை

 

185.           சரியானவற்றை தேர்வு செய்க

ஒன்று முதியோர் ஓய்வூதிய திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு 1962

இரண்டு உடல் ஊனமுற்றோர் ஓய்வூதிய திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு 1974

மூன்று விதவை பெண்கள் ஓய்வூதிய திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு 1975

 

A) ஒன்று மட்டும் சரி

B) இரண்டு மட்டும் சரி

C) மூன்று மட்டும் சரி

*D) ஒன்று இரண்டு மற்றும் மூன்று சரி

 

186.       மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் ____________ கீழ் வருகின்றன

*A மாநிலப் பட்டியல்

B மத்திய பட்டியல்

C பொதுப்பட்டியல்

D மேலே உள்ள எதுவும் இல்லை

 

187.        கழிவறைகளை தூய்மைப்படுத்த பயன்படுத்தும் அமிலம் என்ன?

A)சிட்ரிக் அமிலம்

*B)ஹைட்ரோ குளோரிக் அமிலம்

C)நைட்ரிக் அமிலம்

D)ஆக்சாலிக் அமிலம்

 

188.       ரூ.800/- ஆண்டு வட்டி 10%-ல் அரையாண்டு கூட்டு வட்டியாக கணக்கிடப்படும் பொழுது எத்தனை ஆண்டுகளில் ரூ.926.10/- ஆக மாறும்?

      (A)   1 1/3
ஆண்டுகள்
*    (B)    1 ½ ஆண்டுகள்
      (C)    2 1/3 ஆண்டுகள்
      (D)   2 ½ ஆண்டுகள்
      (E)    விடை தெரியவில்லை

189.       சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் தொடர்பான பிரிவு எது?

A பிரிவு 270A

B பிரிவு 280A

C பிரிவு 279

*D பிரிவு 279A

 

190.       நீல லிட்மஸ் தாளை சிவப்பு நிறமாக மாற்றுவது எது?

*A)அமிலம்

B)காரம்

C)அமிலம் மற்றும் காரம்

D)இரண்டும் இல்லை

 

191.         மத்திய அரசால் வரி விதித்து வசூலித்து மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவது குறித்து கூறும் பிரிவு எது?

A பிரிவு 268

*B பிரிவு 269

C பிரிவு 270

D பிரிவு 272

 

 

192.       அருண் 2 வெவ்வேறு திட்டங்களில் சமமான தொகையை முதலீடு செய்தார். திட்டம்-X-ல் கூட்டு வட்டி விகிதம் 10% ஆகும் மற்றும் திட்டம்-Y-ல் கூட்டு வட்டி விகிதம் 12% ஆகும். திட்டம்-X-ல் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு வட்டியாக 2 ஆண்டுகளில் ரூ.63/- கிடைத்தது. எனில், திட்டம்-Y-ல் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு 2 ஆண்டுகளில் வட்டித் தொகை எவ்வளவு?

      (A)  
ரூ.70.56/-
*    (B)   
ரூ.76.32/-
      (C)   
ரூ.79.0272/-
      (D)  
ரூ.80.32/-
      (E)   
விடை தெரியவில்லை

193.       கீழ் உள்ளவற்றுள் மாநில வரி ஆதாரங்களில் வராதது எது?

A கனிம வளங்கள் மீதான உரிமை வரி

B பொழுதுபோக்கு வரி

*C தொழில் நிறுவனங்கள் மீதான நிறுவன வரி

D எதுவும் இல்லை

 

194.        ரூ.26,000/- என்ற தொகைக்கு 2 ஆண்டுகள் முடிவில் கிடைக்கும் கூட்டு வட்டி மற்றும் தனி வட்டி ஆகியவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் ரூ.2,994.134/- எனில் ஆண்டு வட்டி விகிதம் என்ன?

      (A)   17%
*    (B)    19%
      (C)    22%
      (D)   24%
      (E)   
விடை தெரியவில்லை

195.       தகவல் தொடர்பு ____________ கீழ் வருகிறது.

A மாநில பட்டியல்

*B மத்திய பட்டியல்

C பொதுப்பட்டியல்

D மேலே உள்ள எதுவும் இல்லை

 

196.       ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 8% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி மற்றும் தனி வட்டி ஆகியவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் ரூ.768/-. அந்த தொகை என்ன?

 (A)        
ரூ.1,00,000/-
 (B)        
ரூ.1,10,000/-
*(C)       
ரூ.1,20,000/-
 (D)        
ரூ.1,70,000/-
 (E)        
விடை தெரியவில்லை

 

197.        மத்திய அரசிடமிருந்து சில மாநிலங்களுக்கு வழங்கப்படும் மானியங்களைப் பற்றி எந்தப் பிரிவு கூறுகிறது?

A பிரிவு 270

B பிரிவு 272

*C பிரிவு 275

D பிரிவு 277

 

198.       ஒரு கடன் தொகை ரூ.1,025/-5% கூட்டு வட்டியில் 2 ஆண்டுகளில் கட்டி முடிப்பதற்கு ஆண்டு தவணையாக என்ன தொகையை கட்ட வேண்டும்?

      (A)  
ரூ.550/-
*    (B)   
ரூ.551.25/-
      (C)   
ரூ.560/-
      (D)  
ரூ.560.75/-
      (E)   
விடை தெரியவில்லை

199.       எந்த வகையான வரிச்சுமையை மற்றவர்களுக்கு மாற்ற முடியாது?

*A நேரடி வரி

B மறைமுக வரி

C முற்போக்கான வரி

D பிற்போக்கு வரி

 

200.      எந்த ஆண்டு கூட்டு வட்டி விகிதத்தில் ரூ.1,200/- 2 ஆண்டுகளில் ரூ.1,348.32/- ஆக மாறும்?

      (A)   7.5%
      (B)    6.5%
      (C)    7%
*    (D)   6%

      (E)    விடை தெரியவில்லை