721. வகையறிந்து
வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த
தூய்மை யவர்.
பொருள்: சொற்களின் வலிமை அறிந்த
கற்றவர்கள், அவையின் தன்மையை உணர்ந்து, பொருந்தாத சொற்களைப் பேசமாட்டார்கள்.
தொடைநயம்: கூழை மோனை, அடி எதுகை.
722. கற்றாருள்
கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற
செலச்சொல்லு வார்.
பொருள்: கற்றவர்களிடம் தான் கற்றவற்றை அவர்
மனம் கொள்ளும்படியாக உரைக்கத் தெரிந்தவர் கற்றவரினும் மேம்பட்டவர் ஆவார்.
தொடைநயம்: கீழ்க்கதுவாய் மோனை/எதுகை,
அடிமோனை/எதுகை.
குறளில் சொற்பொருள் பின்வரு நிலையணி
பயின்றுவந்துள்ளது.
723. பகையகத்துச்
சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா
தவர்.
பொருள்: போரிட்டு உயிரிழக்கத் துணிந்தவர்
உலகில் பலருண்டு. ஆனால், அவையில் வாதிட்டு வெற்றிபெறத் துடிப்பவர் சிலரே ஆவார்.
தொடைநயம்: கூழை இயைபு, அடி இயைபு.
குறளில் முரண் அணி பயின்று வந்துள்ளது.
724. கற்றார்முன்
கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள்
மிக்க கொளல்.
பொருள்: கற்றறிந்த சான்றோரிடம், அவர் மனம்
கொள்ளும் வகையில் தான் கற்றதைச் சொல்வதோடு, அந்தக் கற்றவர்களிடம் இருக்கும்
கூடுதல் அறிவைப் பெற்றுக்கொள்வதும்அவை அஞ்சாமை ஆகும்.
தொடைநயம்: இணைமோனை
725. ஆற்றின்
அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங்
கொடுத்தற் பொருட்டு.
பொருள்: அவையில் அஞ்சாமல் விவாதிப்பதற்கு,
இலக்கண முறைப்படி சொற்களையும், தர்க்கவியலையும் கற்றுத் தெளய வேண்டும்.
தொடைநயம்: பொழிப்பு எதுகை, அடி எதுகை.
726. வாளொடென்
வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு
பவர்க்கு.
பொருள்: வீரமற்றவர்க்கு வாளினால் என்ன
பயன்? அதுபோல, அவையில் பேச அஞ்சும் நுன்னறிவு அற்றவர்களுக்கு நூலினால் என்ன பயன்?
தொடைநயம்: ஒரூஉ இயைபு.
எடுத்துக்காட்டு உவமையணி குறளில் பயின்று
வந்துள்ளது.
727. பகையகத்துப்
பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற
நூல்.
பொருள்: அவைக்கு முன்னே அஞ்சுபவன் கற்ற
நூல், படைக்களத்தில் கோழை கையில் உள்ள வாளுக்குச் சமமானது.
தொடைநயம்: ஒரூஉ இயைபு
குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று
வந்துள்ளது.
728. பல்லவை
கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு
செலச்சொல்லா தார்.
பொருள்: அறிஞர்கள் நிறைந்துள்ள அவையில்
அவர்கள் மனங்கொள்ளும்படி ஒன்றை விளக்கத் தெரியாவதன், என்ன கற்றிருந்தாலும்
பயனில்லை.
தொடைநயம்: பொழிப்பு மோனை, ஒரூஉ எதுகை.
729. கல்லா
தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு
வார்.
பொருள்: ஆன்றோர் நிறைந்த அவையில், நல்ல
நூல்களைக் கற்று, அவற்றின் நற்பொருளை அறிந்தும்கூடப் பேச அஞ்சுபவர்கள்,
கல்லாதவரைவிடத் தாழ்ந்தவர்களே.
தொடைநயம்: மேல்க்கதுவாய் எதுகை, அடி இயைபு.
730. உளரெனினும்
இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற
செலச்சொல்லா தார்.
பொருள்: தாம் கற்றறிந்த் ஒன்றை அவைக்கு
அஞ்சி, வெளிப்படுத்தாமல் இருப்பவர், உயிர்வாழ்ந்தும் இறந்தவர்க்குச் சமமானவரே.
தொடைநயம்: ஒரூஉ எதுகை.