571.
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான்
உண்டிவ் வுலகு.
பொருள்: அருள்நோக்கு
ஒன்று இருப்பதால்தான் இந்த உலகம் அழியாமல் இயங்கிவருகிறது.
காரிகை – அன்பு
நிறைந்த பெண்.
தொடைநயம்:
மேல்க்கதுவாய் மோனை, அடி எதுகை.
572.
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை
நிலக்குப் பொறை.
பொருள்: உலகியல்
இயங்குவதற்குக் கண்ணோட்டம் என்கிற அருள்நோக்கே காரணமாகும். அத்தகைய கண்ணோட்டம்
இல்லாதவர்கள் இந்த நிலத்துக்குச் சுமையே ஆவார்கள்.
பொறை – சுமை.
தொடைநயம்: அடி எதுகை.
573.
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம்
இல்லாத கண்.
பொருள்: பாடலுக்குப்
பொருத்தமில்லாத ராகத்தால் பயனில்லை. அதுபோல, அன்பு, இரக்கம் இல்லாத கண்களால் எந்த
ஒரு பயனுமில்லை.
குறளில்
எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.
தொடைநயம்: ஒரூஉ
இயைபு, அடி எதுகை.
574.
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம்
இல்லாத கண்.
பொருள்: அன்பும் இரக்கமும்
கொண்ட அருள்நோக்கு இல்லாத கண்கள், முகத்தில் இருக்கின்றன என்பதைத் தவிர வேறு என்ன நன்மை
பயக்கும்?
தொடைநயம்: ஒரூஉ எதுகை
575.
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று
உணரப் படும்.
பொருள்: அருள்நோக்குப்
பார்வையே கண்ணுக்குச் சிறந்தஆபரணமாகும். அது இல்லையென்றால், அந்தக் கண்கள் வெறும் புண்கள்
என்றே கருதப்படும்.
தொடைநயம்: பொழிப்பு மோனை/எதுகை,
அடி எதுகை.
576. மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்து
கண்ணோடா தவர்.
பொருள்: அருள்நோக்கு இல்லாத
கண்களை உடையவர்கள், மரத்துக்கு ஒப்பானவர்களே.
குறளில் உவமையணி பயின்று
வந்துள்ளது.
தொடைநயம்: பொழிப்பு மோனை,
ஒரூஉ எதுகை/இயைபு.
577.
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம்
இன்மையும் இல்.
பொருள்: அருள்நோக்கு இல்லாதவர்கள்
கண் இல்லாதவர்களே. கண் உடையவர்கள் எவரும் கண்ணோட்டம் இல்லாமல் இருப்பது இல்லை.
தொடைநயம்: மேல்க்கதுவாய்
மோனை/எதுகை, கீழ்க்கதுவாய் இயைபு, அடி இயைபு.
578.
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை
உடைத்திவ் வுலகு.
பொருள்:தன்னுடைய கடமைக்கு
ஊறு நேராத அன்பும் இரக்கமு் கொண்ட அருள்நோக்கு உடையவர்களுக்கே இந்த உலகம் உரிமையுடையது.
தொடைநயம்: பொழிப்பு மோனை.
579. ஒறுத்தாற்றும்
பண்பினார் கண்ணும் கண்ணோடிப்
பொறுத்தாற்றும்
பண்பே தலை.
பொருள்: தம்மை வருத்த
நினைப்பவரிடத்திலும் அன்பும் இரக்கமும் கொண்ட அருள்நோக்கோடு இருத்தலே சிறந்த பண்பாகும்.
ஒறுத்தாற்றல் – வருத்துதல்.
தொடைநயம்: அடி இயைபு.
580. பெயக்கண்டும்
நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம்
வேண்டு பவர்.
பொருள்: அருள்நோக்கு உடைய
பண்பாளர்கள், தம்மோடு பழகியவர்கள் தம் கண் முன்னே தனக்கு நஞ்சு கலந்து கொடுத்தாலும்
அதை வாங்கி அருந்திவிட்டு, அவர்களோடு இயல்பாகப் பேசி மகிழ்ந்திருப்பார்கள்.
தொடைநயம்: ஒரூஉ எதுகை.