Thursday, July 3, 2025

பொருட்பால்: அரசியல்: 55. செங்கோன்மை

541. ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்து செய்வஃதே முறை.

பொருள்: நன்கு ஆராய்ந்து, எந்தப் பக்கமும் சாயாமல், குற்றம் இன்னதென்றும், அதற்கான தண்டனைகள் இவை எனவும் உரிய அறிஞரோடு ஆராய்ந்து நீதி செய்வதே செங்கோன்மையாகும்.

தொடைநயம்: அடி இயைபு.

 

542. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி.

பொருள்: உலக உயிர்கள் அனைத்தும் வானத்திலிருந்து பெய்ய்உம் மழையை எதிர்பார்த்து உயிர்வாழும். அதுபோல, மன்னனின் செங்கோலை நோக்கியே மக்களின் வாழ்வு அமையும்.

குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

தொடைநயம்: இணைமோனை, அடி இயைபு.

 

543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.

பொருள்: அந்தணர்களால் போற்றி ஓதப்படும் மறைநூலுக்கும், அது வலியுறுத்தும் அறத்துக்கும் முதன்மையாய் இருப்பது மன்னனின் முறைதவறாத செங்கோல்தான்.

தொடைநயம்: மேல்க்கதுவாய் மோனை.

 

544. குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.

பொருள்: தனது மக்களை அரவணைத்து, நடுவுநிலைமை தவறாது ஆட்சி செய்கிற மன்னவனின் அடியைப் பின்பற்றி மக்கள் நடப்பர்.

தழீஇ-இன்னிசை அளபெடை,

கோல், உலகு-ஆகுபெயர்கள்.

தொடைநயம்: அடி இயைபு.

 

545. இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளும் தொக்கு.

பொருள்: நீதிமுறை தவறாது, செங்கோன்மையுடன் ஆட்சிபுரியும் மன்னவனின் நாட்டில் மழையும் விளைச்சலும் குன்றவே குன்றாது.

பெயல்-மழை.

தொடைநயம்: அடி எதுகை.

 

546. வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉங் கோடா தெனின்.

பொருள்: ஒரு மன்னனுக்கு வெற்றி தருவது அவன் கையிலிருக்கும் வேல் அல்ல. நீதிமுறை தவறாமல் ஆட்சி செய்யும் செங்கோல்தான். அது எப்போதும் வளையாது இருக்க வேண்டும்.

வென்றி – வெற்றி,

கோடாது – வளையாது.

தொடைநயம்: அடிமோனை/எதுகை.

 

547. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்.

பொருள்: மன்னன் மக்களைக் காப்பான். மன்னவனை அவன் முறைதாழாது மேற்கொண்ட ஆட்சிமுறை காக்கும்.

தொடைநயம்: மேல்க்கதுவாய் இயைபு, அடி எதுகை.

 

548. எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும்.

பொருள்: அணுகுதலில் எளிமையும், நீதி தவறாமல் ஆட்சி செய்வதுமே மன்னனுக்கு அழகு. இதிலிருந்து தவறும் மன்னவனுடைய நாடு எதிரிகள் இல்லாமல் தானே அழியும்.

தொடைநயம்: அடி இயைபு.

 

549. குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில்.

பொருள்: தன்னுடைய மக்களைப்பிறர் வருத்த அனுமதிக்காமலும், தானும் அவர்களைவருத்தாமல் பேண வேண்டும். அதேசமயம், , அவர்களிடம் குற்றம் கண்டவிடத்து, அவர்களைத் தண்டிப்பது அரசனுக்குக் குற்றமாகாது. அது அரசனது தொழில்.

வடு – குற்றம்.

தொடைநயம்: பொழிப்பு மோனை.

 

550. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்.

பொருள்: கொலை உள்ளிட்ட குற்றங்களைச் செய்பவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்குதல், பயிர்களிடையே வளர்கின்ற களைகளைப் பறித்தலுக்கு ஒப்பானதாகும்.

குறளில் உவமையணி பயின்று வந்துள்ளது.

பைங்கூழ் – பசும்பயிர்.

தொடைநயம்: இணைமோனை. 

Wednesday, July 2, 2025

பொருட்பால்: அரசியல்: 58. கண்ணோட்டம்

571. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு.

பொருள்: அருள்நோக்கு ஒன்று இருப்பதால்தான் இந்த உலகம் அழியாமல் இயங்கிவருகிறது.

காரிகை – அன்பு நிறைந்த பெண்.

தொடைநயம்: மேல்க்கதுவாய் மோனை, அடி எதுகை.

 

572. கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை.

பொருள்: உலகியல் இயங்குவதற்குக் கண்ணோட்டம் என்கிற அருள்நோக்கே காரணமாகும். அத்தகைய கண்ணோட்டம் இல்லாதவர்கள் இந்த நிலத்துக்குச் சுமையே ஆவார்கள்.

பொறை – சுமை.

தொடைநயம்: அடி எதுகை.

 

573. பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

பொருள்: பாடலுக்குப் பொருத்தமில்லாத ராகத்தால் பயனில்லை. அதுபோல, அன்பு, இரக்கம் இல்லாத கண்களால் எந்த ஒரு பயனுமில்லை.

குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

தொடைநயம்: ஒரூஉ இயைபு, அடி எதுகை.

 

574. உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண்.

பொருள்: அன்பும் இரக்கமும் கொண்ட அருள்நோக்கு இல்லாத கண்கள், முகத்தில் இருக்கின்றன என்பதைத் தவிர வேறு என்ன நன்மை பயக்கும்?

தொடைநயம்: ஒரூஉ எதுகை

 

575. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்

புண்ணென்று உணரப் படும்.

பொருள்: அருள்நோக்குப் பார்வையே கண்ணுக்குச் சிறந்தஆபரணமாகும். அது இல்லையென்றால், அந்தக் கண்கள் வெறும் புண்கள் என்றே கருதப்படும்.

தொடைநயம்: பொழிப்பு மோனை/எதுகை, அடி எதுகை.

 

576. மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு

இயைந்து கண்ணோடா தவர்.

பொருள்: அருள்நோக்கு இல்லாத கண்களை உடையவர்கள், மரத்துக்கு ஒப்பானவர்களே.

குறளில் உவமையணி பயின்று வந்துள்ளது.

தொடைநயம்: பொழிப்பு மோனை, ஒரூஉ எதுகை/இயைபு.

 

577. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்.

பொருள்: அருள்நோக்கு இல்லாதவர்கள் கண் இல்லாதவர்களே. கண் உடையவர்கள் எவரும் கண்ணோட்டம் இல்லாமல் இருப்பது இல்லை.

தொடைநயம்: மேல்க்கதுவாய் மோனை/எதுகை, கீழ்க்கதுவாய் இயைபு, அடி இயைபு.

 

578. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்திவ் வுலகு.

பொருள்:தன்னுடைய கடமைக்கு ஊறு நேராத அன்பும் இரக்கமு் கொண்ட அருள்நோக்கு உடையவர்களுக்கே இந்த உலகம் உரிமையுடையது.

தொடைநயம்: பொழிப்பு மோனை.

 

579. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை.

பொருள்: தம்மை வருத்த நினைப்பவரிடத்திலும் அன்பும் இரக்கமும் கொண்ட அருள்நோக்கோடு இருத்தலே சிறந்த பண்பாகும்.

ஒறுத்தாற்றல் – வருத்துதல்.

தொடைநயம்: அடி இயைபு.

 

 580. பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

பொருள்: அருள்நோக்கு உடைய பண்பாளர்கள், தம்மோடு பழகியவர்கள் தம் கண் முன்னே தனக்கு நஞ்சு கலந்து கொடுத்தாலும் அதை வாங்கி அருந்திவிட்டு, அவர்களோடு இயல்பாகப் பேசி மகிழ்ந்திருப்பார்கள்.

தொடைநயம்: ஒரூஉ எதுகை. 

Saturday, June 28, 2025

பொருட்பால்: அமைச்சியல்: 73. அவை அஞ்சாமை

721. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.

பொருள்: சொற்களின் வலிமை அறிந்த கற்றவர்கள், அவையின் தன்மையை உணர்ந்து, பொருந்தாத சொற்களைப் பேசமாட்டார்கள்.

தொடைநயம்: கூழை மோனை, அடி எதுகை.

 

722. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்.

பொருள்: கற்றவர்களிடம் தான் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும்படியாக உரைக்கத் தெரிந்தவர் கற்றவரினும் மேம்பட்டவர் ஆவார்.

தொடைநயம்: கீழ்க்கதுவாய் மோனை/எதுகை, அடிமோனை/எதுகை.

குறளில் சொற்பொருள் பின்வரு நிலையணி பயின்றுவந்துள்ளது.

 

723. பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர்.

பொருள்: போரிட்டு உயிரிழக்கத் துணிந்தவர் உலகில் பலருண்டு. ஆனால், அவையில் வாதிட்டு வெற்றிபெறத் துடிப்பவர் சிலரே ஆவார்.

தொடைநயம்: கூழை இயைபு, அடி இயைபு.

குறளில் முரண் அணி பயின்று வந்துள்ளது.

 

 

724. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்.

பொருள்: கற்றறிந்த சான்றோரிடம், அவர் மனம் கொள்ளும் வகையில் தான் கற்றதைச் சொல்வதோடு, அந்தக் கற்றவர்களிடம் இருக்கும் கூடுதல் அறிவைப் பெற்றுக்கொள்வதும்அவை அஞ்சாமை ஆகும்.

தொடைநயம்: இணைமோனை

 

725. ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

பொருள்: அவையில் அஞ்சாமல் விவாதிப்பதற்கு, இலக்கண முறைப்படி சொற்களையும், தர்க்கவியலையும் கற்றுத் தெளய வேண்டும்.

தொடைநயம்: பொழிப்பு எதுகை, அடி எதுகை.

 

726. வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

பொருள்: வீரமற்றவர்க்கு வாளினால் என்ன பயன்? அதுபோல, அவையில் பேச அஞ்சும் நுன்னறிவு அற்றவர்களுக்கு நூலினால் என்ன பயன்?

தொடைநயம்: ஒரூஉ இயைபு.

எடுத்துக்காட்டு உவமையணி குறளில் பயின்று வந்துள்ளது.

 

727. பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சு மவன்கற்ற நூல்.

பொருள்: அவைக்கு முன்னே அஞ்சுபவன் கற்ற நூல், படைக்களத்தில் கோழை கையில் உள்ள வாளுக்குச் சமமானது.

தொடைநயம்: ஒரூஉ இயைபு

குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

 

728. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்

நன்கு செலச்சொல்லா தார்.

பொருள்: அறிஞர்கள் நிறைந்துள்ள அவையில் அவர்கள் மனங்கொள்ளும்படி ஒன்றை விளக்கத் தெரியாவதன், என்ன கற்றிருந்தாலும் பயனில்லை.

தொடைநயம்: பொழிப்பு மோனை, ஒரூஉ எதுகை.

 

729. கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்

நல்லா ரவையஞ்சு வார்.

பொருள்: ஆன்றோர் நிறைந்த அவையில், நல்ல நூல்களைக் கற்று, அவற்றின் நற்பொருளை அறிந்தும்கூடப் பேச அஞ்சுபவர்கள், கல்லாதவரைவிடத் தாழ்ந்தவர்களே.

தொடைநயம்: மேல்க்கதுவாய் எதுகை, அடி இயைபு.

 

730. உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்.

பொருள்: தாம் கற்றறிந்த் ஒன்றை அவைக்கு அஞ்சி, வெளிப்படுத்தாமல் இருப்பவர், உயிர்வாழ்ந்தும் இறந்தவர்க்குச் சமமானவரே.

தொடைநயம்: ஒரூஉ எதுகை.

 

  

பொருட்பால்: அரசியல்: 60. ஊக்கமுடைமை

591. உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று.

பொருள்:  மனதில் ஊக்கம் கொண்டவர்களே உடையவர்கள் அதாவது செல்வந்தர்கள் எனப்படுவார்கள். அது இல்லாதவர்கள் வேறு எதைக் கொண்டிருந்தாலும் இல்லாதவர்கள் என்றே கருதப்படுவார்கள்.

தொடைநயம்: அடிமோனை/எதுகை

உடையர்-வினையாலணையும் பெயர்.

 

592. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.

பொருள்: எந்த ஒரு சூழலிலும் மனதை விட்டுவிடாமல் அதன் ஊக்கம் குன்றாமல் காப்பவனுக்கு அதுவே செல்வமாகும். மற்ற பொருளுடைமை எல்லாம் என்றேனும் ஒருநாள் அழிந்துபோகும்.

தொடைநயம்: கூழை மோனை/இயைபு.

 

593. ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்.

பொருள்: மன உறுதிகொண்டவர்கள், தங்களது செல்வத்தை இழந்தாலும் கலங்கமாட்டார்கள்.

ஆக்கம் – செல்வம்,

கைத்துடை – கையிருப்பு.

தொடைநயம்: ஒரூஉ இயைபு.

 

594. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உழை.

பொருள்: செல்வமானது, தளராத ஊக்கம் உடையவனின் முகவரியைத் தேடிக்கொண்டு தானே அவனிடம் போய்ச்சேரும்.

அதர்வினாய் – தானாக,

அசைவிலா – தளராத.

தொடைநயம்: அடி இயைபு.

 

595. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

பொருள்: நீர் மட்டத்தின் அளவைப் பொருத்தே தாமரையின் அடித்தண்டு வளர்ச்சி அமையும். அதுபோல, மக்களின் உள்ள உயர்வுக்கு ஏற்ப அவர்களின் பிற உயர்வுகள் அமையும்.

குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

வெள்ளம் – நீர்.

தொடைநயம்: அடி இயைபு.

 

596. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

பொருள்: எப்போதும் உயர்வான எண்ணங்களைக்கொண்டிருக்க வேண்டும். அந்த உயர்வான எண்ணங்களால் நமக்குப் பெரிதாக எந்த ஒரு நன்மையும் நடந்துவிடவில்லை என்றாலும், உயர்வாக எண்ணுதலைக் கைவிடக்கூடாது.

உள்ளுதல் – நினைத்தல்.

தொடைநயம்: பொழிப்பு மோனை, அடி எதுகை.

 

597. சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பில்

பட்டுப்பாடு ஊன்றுங் களிறு.

பொருள்: போர்க்களத்தில் உடல் முழுக்க அம்புகள் துளைத்து உட்சென்று வலியை ஏற்படுத்தியபோதும், யானை தன் ஊக்கத்திலிருந்து தளராமல் போரிடும். அதுபோல, தங்களுக்கு அழிவு வந்தவிடத்திலும் ஊக்கம் உடையவர்கள் தங்கள் ஊக்கத்தைக் கைவிடமாட்டார்கள்.

குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

புதையம்பு – அம்புக்கட்டு,

களிறு – யானை.

தொடைநயம்: ஒரூஉ எதுகை.

 

598. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னும் செருக்கு.

பொருள்: உள்ளத்தில் ஊக்கம் அதாவது மனநிறைவு இல்லாதவர்கள், கொடுக்கும் எண்ணம் அற்றவர்களாகவே இருப்பார்கள். அதனால், அவர்கள் தங்களைப் பெரும் வள்ளல்கள் என்று செருக்கோடு சொல்லிக்கொள்ள இயலாது.

வள்ளியம் – கொடைத்தன்மை.

தொடைநயம்: ஒரூஉ மோனை, அடி எதுகை.

 

599. பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின்.

பொருள்: பெரிய உடல், கூரிய கொம்புகளைக் கொண்டிருந்தாலும், யானை புலியைக் கண்டால் அஞ்சி ஓடும். அதுபோல, தன்னைவிட உடல் வலிமை குறைந்தவர்கள், உள்ள ஊக்கத்தில் தன்னையும் விஞ்சியவர்கள் என்றால், அவர்களுக்கு அஞ்சித்தான் ஆக வேண்டும்.

குறளில் வேற்றுப்பொருள் வைப்பணி (பிறிது மொழிதல்) பயின்று வந்துள்ளது.

பரியது – வலிமையானது,

கூர்ங்கோடு – கூரிய கொம்பு,

வெரூஉம் – அஞ்சும்.

வெரூஉம்-இன்னிசை அளபெடை.

 

600. உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்

மரம்மக்கள் ஆதலே வேறு.

பொருள்: உள்ளத்தில் ஊக்கத்தோடு இருப்பதே ஒருவருக்கு வலிமையாகும். அத்தகைய ஊக்கம் இல்லாதவர்கள், உருவத்தில் மனிதர்கள் என்றாலும், மரத்துக்கே ஒப்பாவார்கள்.

உரம் – வலிமை,

வெறுக்கை – ஊக்கம்.

தொடைநயம்: இணைமோனை, அடி எதுகை.             

Monday, June 9, 2025

ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் வாராந்திர மாதிரித்தேர்வு (11) வினாவிடைகள்

குறிப்பு: *குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

1.       இவற்றுள் தமிழ்ச்சொல் அல்லாதது எது?

*க்ரீடம்

அன்பு

மடமை

வாழை

 

2.        சேர்த்தெழுதுக. ‘நாள் + மீன்’

நாள்மீன்

<நான்மீன்

>நாண்மீன்

நாமீன்

 

3.        “இன்னக்கி சாயங்காலம் நான் மதுரை போறேன்”எழுத்து வழக்காக்குக.

இன்றைக்கு சாயங்காலம் நான் மதுரை போறேன்.

இன்றைக்கு மாலை நான் மதுரை போறேன்.

*இன்றைக்கு மாலை நான் மதுரை போகிறேன்.

இன்னைக்கு மாலை நான் மதுரை போகிறேன்.

 

4.        சரியான தொடரைத் தெரிக.

உங்களுக்கு யார் நன்மை என நினைக்கிறீர்கள்?

உங்களுக்கான நன்மை யார் என்று நினைக்கிறீர்கள்?

உங்களுக்கு யாரை நன்மை என நினைக்கிறீர்கள்?

*உங்களுக்கு யாரால் நன்மை என நினைக்கிறீர்கள்?

 

5.        ‘transplantation’ என்பதன் தமிழாக்கம் தெரிக.

இதய மாற்று அறுவை சிகிச்சை

*உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

 

6. எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு.

குறளில் பயின்றுள்ள தொடைநயங்கள் எவை?

*அடி இயைபு, மேல்க்கதுவாய் மோனை

அடி எதுகை, கீழ்க்கதுவாய் எதுகை

அடிமோனை, அடி எதுகை

கீழ்க்கதுவாய் எதுகை, மேல்க்கதுவாய் இயைபு

 

7.        பொருத்துக.

அ. விசா  1. நிறுவனம்

ஆ. பாஸ்போர்ட்  2. ஊழி

இ. யுகம்  3. கடவுச்சீட்டு

ஈ. கம்பெனி  4. நுழைவு இசைவு

2 3 4 1

3 4 1 2

*4 3 2 1

1 4 3 2

 

8.        சரியான தொடரைத் தெரிக.

பிறர் செய்யாவிட்டாலும் செய்த தீமை மறக்கக்கூடாது நன்மை செய்யக்கூடாது உதவியை.

செய்த தீமை மறக்கக்கூடாது நன்மை செய்யக்கூடாது உதவியை செய்யாவிட்டாலும் பிறர்.

*பிறர் செய்த உதவியை மறக்கக் கூடாது, நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யக்கூடாது.

நன்மை செய்யாவிட்டாலும் பிறர் செய்த உதவியை மறக்கக்கூடாது, தீமை செய்யக்கூடாது.

 

9.        கீழ்க்கண்ட சொற்களுள் ஒற்றுப்பிழையுடைய சொல்லைத் தெரிக.

வீழ்ச்சி

*காட்ச்சி

செயற்கை

சேர்க்கை

 

10.   ‘பதிப்பித்தார்’ வினையாலணையும் பெயரைத் தெரிக.

பதிப்பித்தோர்

பதிப்பித்தான்

*பதிப்பித்தவர்

பதிப்பிப்பவர்

 

11.    ‘reciprocity’ தமிழ்ப்படுத்துக.

ஒத்துழைப்பு

நட்பஆராய்தல்

*ஒப்புரவு நெறி

கிழைமை

 

12.    வேறுபட்ட சொல்லைத் தெரிக.

பொன்னகரம்

*மாநகரம்

கொடைநகரம்

மனைநகரம்

 

13.   இவற்றுள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட தொழிற்பெயர் இணை எது?

வாழ்க்கை, ஆளல்

சூடு, கேடு

இடி, அடி

*அழுகை, கொல்லாமை

 

14.   எதிர்ச்சொல் தருக. ‘அவல்’

இவல்

*சுவல்

காவல்

ஏவல்

 

15.     எழுகதிர் முகத்தாள்,

இன்சொல் தொடுத்தாள்,

முத்துப்பல் காட்டி,

மூதுரை படித்தாள்.

இக்கவிதையில் இரண்டுமுறை இடம்பெற்றுள்ள தொகைநிலைத்தொடர் எது?

வினைத்தொகை

*பண்புத்தொகை

உவமைத்தொகை

வேற்றுமைத்தொகை

 

16.    பழமொழியை நிறைவு செய்யும் தொடரைத் தெரிக.

உப்பிட்டவரை உள்ளளவும் --.

*போற்று

புகழ்

மறவாதே

*நினை

 

17.     நாள்தொறும்நாடி முறைசெய்யா மன்னவன்

நாள்தொறும்நாடு கெடும்.

‘நாடி’ என்பதன் பொருள் யாது?

அணுகல்

கண்டுபிடித்தல்

*ஆராய்தல்

அறிதல்

 

18.    ‘Bio Diversity’ என்பதன் தமிழாக்கம் தெரிக.

பல்லுடற்கூறியல்

*பல்லுயிர் மண்டலம்

பல்லுயிர்ப் பாதுகாப்பு

பல்நோக்கு மருத்துவம்

 

19.    பொருத்துக.

அ. பால்  1. குடி

ஆ. சோறு  2. தின்

இ. முறுக்கு  3. உண்

ஈ. கூழ்  4. பருகு

4 1 2 3

*4 3 2 1

3 4 1 2

2 3 4 1

 

20.   வல்லின மெய் இட்டும் நீக்கியும் எழுதப்பட்ட சரியான தொடரைத் தெரிக.

விளையாட்டுப் போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்று வீடுத் திரும்பினேன்.

பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள்ப் பெற்றுத் தேர்ச்சியடைந்தேன்.

*கிராமத்துத் தலைவர்களைப் பார்த்துப் பேசிவிட்டுப் போனார் ஆட்சியர்.

சொல்லக் கேட்டுத் திரும்ப சொல்வதால் மொழிபயிற்சி மேம்படும்.

 

21.    ‘didactic compillation” என்பதன் சரியான மொழிபெயர்ப்பைத் தெரிக.

புறத்திரட்டு

பன்மொழித்திரட்டு

நாட்டுப்புறப்பாடற் திரட்டு

*நீதிநூல் திரட்டு

 

22.     பாடிய பாடலையே  மீண்டும் பாடிப் பார்த்தான்.

சரியான வரிசையைத் தெரிக.

பெயரெச்சம், வினைமுற்று, வினையெச்சம்

*பெயரெச்சம், வினையெச்சம், வினைமுற்று

வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம்

வினையெச்சம், வினைமுற்று, பெயரெச்சம்

 

23. கூத்துக்கலைஞர்பாடத் -- கூடியிருந்த மக்கள்அமைதியாயினர்.

பொருத்தமான சொல்லை இட்டு நிரப்புக.

தொடங்கி

*தொடங்கியதும்

தொடங்கினால்

தொடங்குவதால்

 

24) பிறவினை தெரிக.

“குழந்தைகளிடம் கதைகள் பேசி அவர்களை –

மகிழ்ச்சியாக்கினேன்

மகிழ்ந்தேன்

*மகிழ்வித்தேன்

மகிழ்வேன்

 

25.  சரியான செயப்பாட்டு வினையைத் தெரிக.

பொதுமக்களிடம் கோரிக்கைகள் –

பெற்றுக்கொள்ளப்பட்டது

பெறப்படுகிறது

பெறப்படுபவை

*பெற்றுக்கொள்ளப்பட்டன

 

26.  ‘Equestrian’ என்பதற்கான கலைச்சொல்லாக்கம் தருக.

*குதிரையேற்றம்

மலையேற்றம்

பாரமேற்றம்

குதிரைப்பந்தயம்

 

27.  அவன் பேனா வைத்திருந்தான். அதைக் கீழே போட்டுவிட்டான். அதை மற்றொருவன் எடுத்துக்கொண்டான்.

தொடரில் இடம்பெற்றுள்ள துணைவினைகளைத் தெரிக.

வை, போடு, எடு

*இரு, விடு, கொள்

வை, கொள், விடு

எடு, இரு, விடு

 

28.  பிழைநீக்கிய தொடரைத் தெரிக.

மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிபவை

மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன

*மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகிறது

மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிந்திருக்கின்றன

 

29. துரோனர் பாண்டவர்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தார். அதைத் தொலைவிலிருந்து பார்த்தே ஏகலைவன் கற்றுக்கொண்டான்.

நிகழ்வுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிக.

கல்வி கரையில, கற்பவர் நாள்சில

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

ஆபத்துக்குப் பாவமில்லை

*நெல்லுக்குப் பாய்கிற நீர் புல்லுக்கும் பாய்வதுபோல

 

30. பொருத்துக.

அ. மேடும் பள்ளமும்  1. கவனம்

ஆ. கண்ணும் கருத்தும்  2. தோற்றம்

இ. நகமும் சதையும்  3. நெருக்கம்

ஈ. நடையும் உடையும்  4. இயல்பு

4 1 2 3

*4 1 3 2

3 4 1 2

2 4 3 1

 

31. வல்லினம் மிகாத தொடரைத் தெரிக.

அப்படிச் சொன்னார்

*தரும்படிக் கேட்டார்

அடங்காப்பசி

துரத்திப் போ

 

32.  மாறுபட்ட தொடரைத் தெரிக.

அவரும் எனக்கு நண்பர்தான்.

அவன் மட்டும் பாடவில்லை.

*அமைதியாய் இருப்பது சாலச் சிறந்தது

தெருவில் ஒருவர்கூட நடமாடவில்லை

 

33. தவறான இணையைத் தெரிக.

நாட்டுப்பண், ஓலைப்பெட்டி

மரவேர், புறநானூறு

பற்பசை, கற்றூண்

*மலையருவி, மாமரம்

 

34. “அண்ணாவைப் படியுங்கள்” இது எவ்வகை ஆகுபெயர்?

முதலாகுபெயர்

காரியவாகுபெயர்

தொழிலாகுபெயர்

*கருத்தாவாகுபெயர்

 

35.  பொருத்துக:

அ. அகழாய்வு  1. Hero stone

ஆ. கல்வெட்டியல்  2. Excavation

இ. நடுகல்  3. epigraphy

ஈ. பண்பாட்டுக் குறியீடு  4. Cultural Symbol

3 2 4 1

*2 3 1 4

2 3 4 1

3 2 1 4

 

36.  கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளுள் சரியான இணைகளைத் தெரிக.

1. புலி-பறழ்-உறுமும்

2. பசு-கன்று-கத்தும்

3. சிங்கம்-குருளை-முழங்கும்

1 மற்றும் 2 சரி

2 மற்றும் 3 சரி

1 2 3 சரி

*1 மற்றும் மூன்று சரி

 

37. “ஆட்டு மந்தையென மக்கள் கூட்டம் பசுக்கூட்டங்களை ஓட்டிக்கொண்டு இடம்பெயர்ந்தனர்.

தொடரில் பிழையாக இடம்பெற்றுள்ள தவறான சொல் எது?

ஆட்டு மந்தை

மக்கள் கூட்டம்

*பசுக்கூட்டம்

தவறான சொல் இல்லை

 

38. இரவு நேரத்தில் கூகை குனகியது.

தொடரில் குனகியது தவறென்றால் அதனை ஒலிமரபாகக் கொண்ட உயிரினம் எது?

ஆந்தை

மயில்

*புறா

குயில்

 

39. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.

சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கனரா வங்கி அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. ஜூன் மாதம் முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அந்த வங்கி அறிவித்திருப்பது சாதாரண மக்களுக்கு நிம்மதியை வரவழைத்துள்ளது.

தற்போது அந்த வங்கியில் நகர்ப்புறங்களில் உள்ள கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.2000, இரண்டாம் கட்ட நகரங்களில் ரூ.1000, கிராமப்புற கிளைகளில் உள்ள கணக்குகளுக்கு ரூ.500 பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. புதிய அறிவிப்பால் இந்த தொகை கணக்கில் எப்போதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்க முடியும் என்ற நடைமுறையால் பாதிக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் ஏராளம். அத்தகைய மக்களுக்கு கனராவங்கியின் உத்தரவு பெரும் விடுதலையாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே எஸ்பிஐ வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகையை சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் பராமரிக்கத் தேவையில்லை என்ற உத்தரவை 2020-ம் ஆண்டேஅறிவித்துவிட்டது. அந்த வரிசையில் கனரா வங்கியும் மக்கள்நலன்சார்ந்த முடிவை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. மத்திய அரசின் நேரடி நலத்திட்ட உதவிகளுக்காக துவக்கப்பட்ட பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா(PMJDY) வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.

 ஆனால், வேறு வங்கிக் கணக்குகளில் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறும் சாதாரண மக்கள் குறைந்தபட்ச இருப்பு வைக்காததால் விதிக்கப்படும் அபராதத் தொகையை செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். அப்படிப்பட்ட மக்களுக்கு வரும் ரூ.1000, ரூ.2000 உதவித் தொகையில் இருந்து கூட வங்கிகள் அபராதத் தொகையை எடுத்துக் கொள்ளும் புகார்கள் வருகின்றன. எஸ்பிஐ மற்றும் கனரா வங்கிகள் ஏழை மக்களை மனதில் கொண்டு இந்த சலுகையை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

அதேசமயம், மற்ற வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதத்தை வசூலிக்கும் நடைமுறையை இன்னும் தொடர்கின்றன.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தாலும் அபராதம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் கையை விட்டு பணத்தை எடுக்கும் நடைமுறை குறைந்தபாடில்லை. எச்டிஎப்சி போன்ற வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக நகர்ப்புறங்களில் ரூ.10,000. இரண்டாம் கட்ட நகரங்களில் ரூ.5,000, கிராமப்புறங்களில் ரூ.2,500 என்ற நிர்ணயித்துள்ளன. வேறு சில கணக்குகளுக்கு இதைவிட அதிகம்.

இந்த இருப்புத் தொகையை பராமரிக்க முடியாத சாமானிய மக்களிடம் இருந்து அந்த வங்கிகள் கறாராக அபராதம் வசூலிக்கின்றன. இதுபோன்று அபராதமாக வசூலிக்கப்படும் தொகையே கோடிகளில் குவிந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, எஸ்பிஐ, கனரா வங்கியைப் பின்பற்றி மற்ற வங்கிகளும் மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகளை எடுத்து மக்களின் பாராட்டைப் பெற வேண்டும்.

உத்தரவு என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்துக.

கட்டளை

அறிவிப்பு

*ஆணை

அறிவிக்கை

 

40.  சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கனரா வங்கி அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. ஜூன் மாதம் முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அந்த வங்கி அறிவித்திருப்பது சாதாரண மக்களுக்கு நிம்மதியை வரவழைத்துள்ளது.

தற்போது அந்த வங்கியில் நகர்ப்புறங்களில் உள்ள கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.2000, இரண்டாம் கட்ட நகரங்களில் ரூ.1000, கிராமப்புற கிளைகளில் உள்ள கணக்குகளுக்கு ரூ.500 பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. புதிய அறிவிப்பால் இந்த தொகை கணக்கில் எப்போதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்க முடியும் என்ற நடைமுறையால் பாதிக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் ஏராளம். அத்தகைய மக்களுக்கு கனராவங்கியின் உத்தரவு பெரும் விடுதலையாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே எஸ்பிஐ வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகையை சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் பராமரிக்கத் தேவையில்லை என்ற உத்தரவை 2020-ம் ஆண்டேஅறிவித்துவிட்டது. அந்த வரிசையில் கனரா வங்கியும் மக்கள்நலன்சார்ந்த முடிவை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. மத்திய அரசின் நேரடி நலத்திட்ட உதவிகளுக்காக துவக்கப்பட்ட பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா(PMJDY) வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.

 ஆனால், வேறு வங்கிக் கணக்குகளில் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறும் சாதாரண மக்கள் குறைந்தபட்ச இருப்பு வைக்காததால் விதிக்கப்படும் அபராதத் தொகையை செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். அப்படிப்பட்ட மக்களுக்கு வரும் ரூ.1000, ரூ.2000 உதவித் தொகையில் இருந்து கூட வங்கிகள் அபராதத் தொகையை எடுத்துக் கொள்ளும் புகார்கள் வருகின்றன. எஸ்பிஐ மற்றும் கனரா வங்கிகள் ஏழை மக்களை மனதில் கொண்டு இந்த சலுகையை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

அதேசமயம், மற்ற வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதத்தை வசூலிக்கும் நடைமுறையை இன்னும் தொடர்கின்றன.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தாலும் அபராதம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் கையை விட்டு பணத்தை எடுக்கும் நடைமுறை குறைந்தபாடில்லை. எச்டிஎப்சி போன்ற வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக நகர்ப்புறங்களில் ரூ.10,000. இரண்டாம் கட்ட நகரங்களில் ரூ.5,000, கிராமப்புறங்களில் ரூ.2,500 என்ற நிர்ணயித்துள்ளன. வேறு சில கணக்குகளுக்கு இதைவிட அதிகம்.

இந்த இருப்புத் தொகையை பராமரிக்க முடியாத சாமானிய மக்களிடம் இருந்து அந்த வங்கிகள் கறாராக அபராதம் வசூலிக்கின்றன. இதுபோன்று அபராதமாக வசூலிக்கப்படும் தொகையே கோடிகளில் குவிந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, எஸ்பிஐ, கனரா வங்கியைப் பின்பற்றி மற்ற வங்கிகளும் மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகளை எடுத்து மக்களின் பாராட்டைப் பெற வேண்டும்.

கனரா வங்கியில் கிராமப்புற கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகை எவ்வளவு?

1500

*500

2500

1300

 

41.  சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கனரா வங்கி அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. ஜூன் மாதம் முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அந்த வங்கி அறிவித்திருப்பது சாதாரண மக்களுக்கு நிம்மதியை வரவழைத்துள்ளது.

தற்போது அந்த வங்கியில் நகர்ப்புறங்களில் உள்ள கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.2000, இரண்டாம் கட்ட நகரங்களில் ரூ.1000, கிராமப்புற கிளைகளில் உள்ள கணக்குகளுக்கு ரூ.500 பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. புதிய அறிவிப்பால் இந்த தொகை கணக்கில் எப்போதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்க முடியும் என்ற நடைமுறையால் பாதிக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் ஏராளம். அத்தகைய மக்களுக்கு கனராவங்கியின் உத்தரவு பெரும் விடுதலையாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே எஸ்பிஐ வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகையை சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் பராமரிக்கத் தேவையில்லை என்ற உத்தரவை 2020-ம் ஆண்டேஅறிவித்துவிட்டது. அந்த வரிசையில் கனரா வங்கியும் மக்கள்நலன்சார்ந்த முடிவை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. மத்திய அரசின் நேரடி நலத்திட்ட உதவிகளுக்காக துவக்கப்பட்ட பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா(PMJDY) வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.

 ஆனால், வேறு வங்கிக் கணக்குகளில் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறும் சாதாரண மக்கள் குறைந்தபட்ச இருப்பு வைக்காததால் விதிக்கப்படும் அபராதத் தொகையை செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். அப்படிப்பட்ட மக்களுக்கு வரும் ரூ.1000, ரூ.2000 உதவித் தொகையில் இருந்து கூட வங்கிகள் அபராதத் தொகையை எடுத்துக் கொள்ளும் புகார்கள் வருகின்றன. எஸ்பிஐ மற்றும் கனரா வங்கிகள் ஏழை மக்களை மனதில் கொண்டு இந்த சலுகையை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

அதேசமயம், மற்ற வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதத்தை வசூலிக்கும் நடைமுறையை இன்னும் தொடர்கின்றன.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தாலும் அபராதம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் கையை விட்டு பணத்தை எடுக்கும் நடைமுறை குறைந்தபாடில்லை. எச்டிஎப்சி போன்ற வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக நகர்ப்புறங்களில் ரூ.10,000. இரண்டாம் கட்ட நகரங்களில் ரூ.5,000, கிராமப்புறங்களில் ரூ.2,500 என்ற நிர்ணயித்துள்ளன. வேறு சில கணக்குகளுக்கு இதைவிட அதிகம்.

இந்த இருப்புத் தொகையை பராமரிக்க முடியாத சாமானிய மக்களிடம் இருந்து அந்த வங்கிகள் கறாராக அபராதம் வசூலிக்கின்றன. இதுபோன்று அபராதமாக வசூலிக்கப்படும் தொகையே கோடிகளில் குவிந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, எஸ்பிஐ, கனரா வங்கியைப் பின்பற்றி மற்ற வங்கிகளும் மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகளை எடுத்து மக்களின் பாராட்டைப் பெற வேண்டும்.

சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை என எஸ்பிஐ வங்கி எந்த ஆண்டு அறிவித்தது?

2021

*2020

2023

2022

 

42.  சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கனரா வங்கி அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. ஜூன் மாதம் முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அந்த வங்கி அறிவித்திருப்பது சாதாரண மக்களுக்கு நிம்மதியை வரவழைத்துள்ளது.

தற்போது அந்த வங்கியில் நகர்ப்புறங்களில் உள்ள கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.2000, இரண்டாம் கட்ட நகரங்களில் ரூ.1000, கிராமப்புற கிளைகளில் உள்ள கணக்குகளுக்கு ரூ.500 பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. புதிய அறிவிப்பால் இந்த தொகை கணக்கில் எப்போதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்க முடியும் என்ற நடைமுறையால் பாதிக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் ஏராளம். அத்தகைய மக்களுக்கு கனராவங்கியின் உத்தரவு பெரும் விடுதலையாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே எஸ்பிஐ வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகையை சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் பராமரிக்கத் தேவையில்லை என்ற உத்தரவை 2020-ம் ஆண்டேஅறிவித்துவிட்டது. அந்த வரிசையில் கனரா வங்கியும் மக்கள்நலன்சார்ந்த முடிவை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. மத்திய அரசின் நேரடி நலத்திட்ட உதவிகளுக்காக துவக்கப்பட்ட பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா(PMJDY) வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.

 ஆனால், வேறு வங்கிக் கணக்குகளில் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறும் சாதாரண மக்கள் குறைந்தபட்ச இருப்பு வைக்காததால் விதிக்கப்படும் அபராதத் தொகையை செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். அப்படிப்பட்ட மக்களுக்கு வரும் ரூ.1000, ரூ.2000 உதவித் தொகையில் இருந்து கூட வங்கிகள் அபராதத் தொகையை எடுத்துக் கொள்ளும் புகார்கள் வருகின்றன. எஸ்பிஐ மற்றும் கனரா வங்கிகள் ஏழை மக்களை மனதில் கொண்டு இந்த சலுகையை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

அதேசமயம், மற்ற வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதத்தை வசூலிக்கும் நடைமுறையை இன்னும் தொடர்கின்றன.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தாலும் அபராதம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் கையை விட்டு பணத்தை எடுக்கும் நடைமுறை குறைந்தபாடில்லை. எச்டிஎப்சி போன்ற வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக நகர்ப்புறங்களில் ரூ.10,000. இரண்டாம் கட்ட நகரங்களில் ரூ.5,000, கிராமப்புறங்களில் ரூ.2,500 என்ற நிர்ணயித்துள்ளன. வேறு சில கணக்குகளுக்கு இதைவிட அதிகம்.

இந்த இருப்புத் தொகையை பராமரிக்க முடியாத சாமானிய மக்களிடம் இருந்து அந்த வங்கிகள் கறாராக அபராதம் வசூலிக்கின்றன. இதுபோன்று அபராதமாக வசூலிக்கப்படும் தொகையே கோடிகளில் குவிந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, எஸ்பிஐ, கனரா வங்கியைப் பின்பற்றி மற்ற வங்கிகளும் மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகளை எடுத்து மக்களின் பாராட்டைப் பெற வேண்டும்.

மத்திய அரசின் நேரடி உதவிகளுக்காகத் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கின் பெயரென்ன?

பிரதான் மந்திரி கிஷான் யோஜனா

பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா

பிரதான் மந்திரி சுரக்ஷா யோஜனா

*பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா

 

43.  சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கனரா வங்கி அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. ஜூன் மாதம் முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அந்த வங்கி அறிவித்திருப்பது சாதாரண மக்களுக்கு நிம்மதியை வரவழைத்துள்ளது.

தற்போது அந்த வங்கியில் நகர்ப்புறங்களில் உள்ள கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.2000, இரண்டாம் கட்ட நகரங்களில் ரூ.1000, கிராமப்புற கிளைகளில் உள்ள கணக்குகளுக்கு ரூ.500 பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. புதிய அறிவிப்பால் இந்த தொகை கணக்கில் எப்போதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்க முடியும் என்ற நடைமுறையால் பாதிக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் ஏராளம். அத்தகைய மக்களுக்கு கனராவங்கியின் உத்தரவு பெரும் விடுதலையாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே எஸ்பிஐ வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகையை சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் பராமரிக்கத் தேவையில்லை என்ற உத்தரவை 2020-ம் ஆண்டேஅறிவித்துவிட்டது. அந்த வரிசையில் கனரா வங்கியும் மக்கள்நலன்சார்ந்த முடிவை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. மத்திய அரசின் நேரடி நலத்திட்ட உதவிகளுக்காக துவக்கப்பட்ட பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா(PMJDY) வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.

 ஆனால், வேறு வங்கிக் கணக்குகளில் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறும் சாதாரண மக்கள் குறைந்தபட்ச இருப்பு வைக்காததால் விதிக்கப்படும் அபராதத் தொகையை செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். அப்படிப்பட்ட மக்களுக்கு வரும் ரூ.1000, ரூ.2000 உதவித் தொகையில் இருந்து கூட வங்கிகள் அபராதத் தொகையை எடுத்துக் கொள்ளும் புகார்கள் வருகின்றன. எஸ்பிஐ மற்றும் கனரா வங்கிகள் ஏழை மக்களை மனதில் கொண்டு இந்த சலுகையை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

அதேசமயம், மற்ற வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதத்தை வசூலிக்கும் நடைமுறையை இன்னும் தொடர்கின்றன.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தாலும் அபராதம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் கையை விட்டு பணத்தை எடுக்கும் நடைமுறை குறைந்தபாடில்லை. எச்டிஎப்சி போன்ற வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக நகர்ப்புறங்களில் ரூ.10,000. இரண்டாம் கட்ட நகரங்களில் ரூ.5,000, கிராமப்புறங்களில் ரூ.2,500 என்ற நிர்ணயித்துள்ளன. வேறு சில கணக்குகளுக்கு இதைவிட அதிகம்.

இந்த இருப்புத் தொகையை பராமரிக்க முடியாத சாமானிய மக்களிடம் இருந்து அந்த வங்கிகள் கறாராக அபராதம் வசூலிக்கின்றன. இதுபோன்று அபராதமாக வசூலிக்கப்படும் தொகையே கோடிகளில் குவிந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, எஸ்பிஐ, கனரா வங்கியைப் பின்பற்றி மற்ற வங்கிகளும் மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகளை எடுத்து மக்களின் பாராட்டைப் பெற வேண்டும்.

குறைந்தபட்ச இருப்புத்தொகை தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய வங்கி எது?

கனரா வங்கி

*இந்தியன்  ரிசர்வ் வங்கி

எஸ்பிஐ வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கி

 

44. பன்மை விகுதிகளின்படி கீழ்க்காணும் இணைகளில் தவறானவை எவை?

1. கல், சொல்

2. நாள், பூ

3. மரம், பழம்

4. பா, கை

*2 மற்றும் 4 தவறு

1 மற்றும் 3 தவறு

3 மற்றும் 4 தவறு

1 மற்றும் 4 தவறு

 

45. ‘Morpheme’ என்பதன் தமிழ்ச்சொல் தெரிக.

ஒலியன்

உவமை

*உருபன்

உருவகம்

 

46.  “தமிழ் மருத்துவ முறைகள் பலவும் வழக்கொழிந்துவிட்டனவே!”

செய்தித்தொடராக மாற்றினால் எவ்வாறு அமையும்?

தமிழ் மருத்துவ முறைகள் பலவும் வழக்கொழிந்துவிட்டனவோ

அந்தோ! தமிழ் மருத்துவ முறைகள் பலவும் வழக்கொழிந்துவிட்டன.

தமிழ் மருத்துவ முறைகள் பலவும் வழக்கொழிந்துவிட்டனவா

*தமிழ் மருத்துவ முறைகள் பலவும் வழக்கொழிந்துவிட்டன

 

47.  கீழ்க்கண்ட சொற்களுள் நிகழ்கால வினைமுற்றைத் தெரிக.

*ஆடுகிறாள்

ஓடினான்

பறக்கும்

முடிந்துவிட்டது

 

48. விழா மேடையில் அவன் – பேசினான். அதைக் கேட்க மக்கள் – வந்தனர்.

கோடிட்ட இடங்களைப் பொருத்தமான உவமைத் தொடர்களைக்கொண்டு நிரப்புக.

உள்ளங்கை நெல்லிக்கனி போல, மடைதிறந்த வெள்ளம்போல

குன்றின் மேலிட்ட விளக்குபோல, நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்ததுபோல

பசுமரத்து ஆணிபோல, உடலும் உயிரும் போல

*மடைதிறந்த வெள்ளமென, மடைதிறந்த வெள்ளமென

 

49. பொருத்துக.

அ. பழகிய நண்பன்  1. குறிப்பு வினையெச்சம்

ஆ. அழகிய புறா  2. தெரிநிலைப் பெயரெச்சம்

இ. இனிமையாகப் பேசினான்  3. தெரிநிலை வினையெச்சம்

ஈ. படித்து முடித்தான்  4.குறிப்புப்  பெயரெச்சம்

2 3 4 1

2 4 3 1

*2 4 1 3

2 1 4 3

 

50.  ‘revivalism’ என்பதைத் தமிழ்ப்படுத்துக.

புத்தாக்கம்

மறு உருவாக்கம்

*மீட்டுருவாக்கம்

மெய்மையாக்கம்

 

51. நிறுத்தற்குறிகளின் சரியான வரிசையைத் தெரிக.

அன்புள்ள அம்மா

நான் நலம்

உங்கள் நலம் அறிய விழைகிறேன்

தங்கை நன்றாகப் படிக்கிறாளா

முற்றுப்புள்ளி. காற்புள்ளி, அரைப்புள்ளி; வினாக்குறி?

காற்புள்ளி, முற்றுப்புள்ளி. அரைப்புள்ளி; வினாக்குறி?

அரைப்புள்ளி; காற்புள்ளி, வினாக்குறி? முற்றுப்புள்ளி.

*காற்புள்ளி, அரைப்புள்ளி; முற்றுப்புள்ளி. வினாக்குறி?

 

52. பொருத்தமான இணைப்புச் சொல்லைத் தெரிக.

என் வீட்டிற்குத் தலைமை ஆசிரியர் வகுப்பாசிரியர் வந்தார்.

கூட

*உடன்

மற்றும்

உம்

 

53. எத்தனைமுறை கூப்பிட்டும் அவள் – வந்தாள்.

தொடரை நிரப்புக.

*ஆடி அசைந்து

ஆடிப் பாடி

முன்னும் பின்னும்

விழுந்து எழுந்து

 

54. பொருத்தமான சொல்லைத் தெரிக.

சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள்

அன்று

அல்லர்

அல்ல

இல்லை

 

55. தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?

எடுத்துக்காட்டு உவமையணி

வேற்றுமை அணி

உவமையணி

பிறிது மொழிதல் அணி

 

56. பிழையான தொடர்களைத் தெரிக.

1. குழந்தைகள் முற்றத்தில் விளையாடின.

2. கிழக்கே சூரியன் தோன்றினான்.

3. அரசர் நகர்வலம் வந்தார்கள்.

3 மட்டும் தவறு

2 மற்றும் 3 தவறு

எதுவும் தவறில்லை

*மூன்றுமே தவறு

 

57.  பொருத்துக.

அ. தில்லை  1. வேதாரண்யம்

ஆ. முகவை  2. சிதம்பரம்

இ. தகடூர்  3. இராமநாதபுரம்

ஈ. திருமறைக்காடு  4. தர்மபுரி

1 4 3 2

*2 3 4 1

3 4 2 1

4 3 2 1

 

58.  ‘Photosynthesis’ தமிழாக்கம் தருக.

சவ்வூடுபரவல்

அயனியாக்கம்

மகரந்த சேர்க்கை

*ஒளிச்சேர்க்கை

 

59. வேறுபட்ட சொல்லைத் தெரிக.

சிரம்

பூதம்

*விடம்

தர்மம்

 

60.  “பூமியைத் தூய்மைப்படுத்த வானத்தில் மேகங்கள் திரண்டுவிட்டன.”

தொடருக்கேற்ற வரிசையைத் தெரிக.

மீ பே கூ தூ

கூ தூ பே மீ

*கூ தூ மீ பே

பே மீ தூ கூ

 

61. ‘கிராமப்புறம்’ பிரித்து எழுதுக.

கிராமத்து + புறம்

கிராம + புறம்

கிராமம் + புறம்

கிராமப் + புறம்

 

62. பாடு என்பதன் எதிர்கால வினைமுற்றைத் தெரிக.

*பாடும்

பாடினான்

பாடுகிறாள்

பாடிவிடுவாள்

 

63. ‘அகல்விளக்கு’ என்பதைக் குறிக்கும் சொல்லைத் தெரிக.

ஆழி

*தகளி

நேமி

சுடர்

 

64. “மிதமான மழை என்ற அறிவிப்புக்கு மாறாக மழை சடசடத்துப் பெய்தது.”

பொருத்தமான வினாச்சொல்லைத் தெரிக.

ஏன்

எவ்வளவு

யார்

*எப்படி

 

65.’ தன் + நாடு’ சேர்த்தெழுதுக.

>>தன்நாடு

*<தன்னாடு

தம்நாடு

தனாடு

 

66.  ‘PROSPECTUS’ கலைச்சொல் தெரிக.

அரிச்சுவடி

பேரகராதி

*விளக்கச் சுவடி

கலைக்களஞ்சியம்

 

67. பொருத்தமான இணைப்புச் சொல்லைத் தெரிக.

சேமிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.   -- எதிர்காலத்தில் இன்னலை அனுவபிக்க வேண்டிவரும்.

ஏனென்றால்

ஆகையால்

*இல்லையென்றால்

மேலும்

 

68.  பிறமொழிக் கலப்பில்லாத தூய தொடரைத் தெரிக.

எங்க ஆஃபிஸ்ல புதுசா மேனேஜர் ஜாயின் பண்ணிருக்காரு.

எங்க அலுவலகத்தில புதுசா மேனேஜர் சேர்ந்திருக்கார்.

எங்கள் அலுவலகத்தில் புதுசா மேனேஜர் சேர்ந்திருக்கிறார்.

*எங்கள் அலுவலகத்தில் புதிதாக மேலாளர் சேர்ந்திருக்கிறார்.

 

69. ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச்சொல் தெரிக.

ஃஃபிரிட்ஜில் அதிகமான காய்கறிகள் வைக்கப்பட்டுள்ளன.

குளிரூட்டிப் பெட்டி

*குளிர்சாதனப்பெட்டி

குளிரி

குளிரியகம்

 

70. ஆளுகை என்பதன் வேர்ச்சொல் தெரிக.

ஆளல்

ஆள்தல்

ஆள்வாய்

*ஆள்

 

71.  ‘Sailor, pilot, referee’ சரியான வரிசையைத் தெரிக.

வலவன், நடுவர், மாலுமி

*மாலுமி, வலவன், நடுவர்

நடுவர், வலவன், மாலுமி

நடுவர், மாலுமி, வலவன்

 

72.  செய் என்பதன் தொழிற்பெயரைத் தெரிக.

*செயல்

செய்க

செய்யா

செய்கை

 

73.  கீழ்க்காணும் சொற்களில் இனவெழுத்து அல்லாத சொல்லைத் தெரிக.

பம்பரம்

*சக்கரம்

தென்றல்

பண்டம்

 

74.  கோவூர்க்கிழார் போரைத் தடுத்த புலவர் என அழைக்கப்படுகிறார்.

விடைக்கேற்றவினாக்கள் எவை?

1.       கோவூர்க்கிழார் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

2.        போரைத்தடுத்த புலவர் என கோவூர்க்கிழார் அழைக்கப்பட காரணம் யாது?

3.        போரைத்தடுத்த புலவர் யார்?

மூன்றும் சரி

1 மற்றும் இரண்டு சரி

*1 மற்றும் மூன்று சரி

2 மற்றும் 3 சரி

 

75.  எதிர்ச்சொல் தெரிக. ‘எக்களிப்பு’

எள்ளல்

*பெருந்துயர்

நகைப்பு

அன்பளிப்பு

 

76.  பொருத்தமற்ற இணையைத் தெரிக.

அவன்-அவள்

அந்தப்பக்கம்-இந்தப் பக்கம்

*இம்மலை-இந்தநாள்

அவ்வானம்-இக்கடிதம்

 

77.   பிழையற்ற தொடர்களைத் தெரிக.

ஒரு ஊரில் ஒரு வேடன் இருந்தான்.

ஓர் இரவுக்குள் அது நடந்துவிட்டது.

அஃது ஏரியென்று நினைத்து ஓர் ஆளை அனுப்பிவைத்தேன்.

மூன்றும் தவறு

*1 மட்டும் தவறு

2 மற்றும் 3 தவறு

1 மற்றும் மூன்று தவறு

 

78.  சரியான அகர வரிசையைத் தெரிக.

பொறையுடைமை, நட்பு, கயமை, உழவு, அரண், துறவு, செங்கோன்மை, மக்கட்பேறு, வினைத்திட்பம், ஊழ்.

ஊழ், அரண், மக்கட்பேறு, பொறையுடைமை, நட்பு, கயமை, செங்கோன்மை, வினைத்திட்பம், உழவு, துறவு.

அரண், ஊழ், உழவு, செங்கோன்மை, கயமை, துறவு, பொறையுடைமை, மக்கட்பேறு, வினைத்திட்பம் நட்பு.

*அரண், உழவு, ஊழ், கயமை, செங்கோன்மை, துறவு, நட்பு, பொறையுடைமை, மக்கட்பேறு, வினைத்திட்பம்.

 

79.  கீழ்க்கண்டவற்றுள் பிழையற்ற இணைகளைத் தெரிக.

1. கா, தண்டலை, பொழில்

2. கயம், ஆறு, பொய்கை

3. மது, நறவு, தேறல்

மூன்றும் பிழையற்றது

1 மற்றும் 2 பிழையற்றது

*1 மற்றும் 3 பிழையற்றது

2 மற்றும் 3 பிழையற்றது

 

80. ‘மல்லல்’ என்பதன் பொருள் யாது?

மன்னன்

*வளமை

வலிமை

பெருமை

 

81. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.

சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்றார் ஒருவர். அந்தக் கல்லூரியின் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுச் சொல்லுங்கள் என்று கேட்டார் அவர் அஃது எனக்குத் தெரியாது. என்று பதிலளித்தார். நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள் என்றார் பரிதிமாற்கலைஞர் தெரியாது என்று சொன்னவரை எப்படித் தேர்வு செய்யலாம்? என்று பிறர் கேட்டபோது அஃது என்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரம் எனக்கு என்பது வன்தொடர்க் குற்றியலுகரம் தெரியாது என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்று விளக்கினார் பரிதிமாற்கலைஞர். இந்நிகழ்வில் பரிதிமாற்கலைஞரையே வியக்க வைத்தவர் மறைமலையடிகள்.

பரிதிமாற்கலைஞருடனான நட்பு தனித்தமிழ் மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது.

பிறமொழிக் கலப்பு இன்றி இனிய எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார். சுவாமி வேதாசலம் எனும் தன்பெயரை மாற்றினார். இளம் வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த அடிகளார், ஞானசாகரம் (1902) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.

வேதாச்சலம் மறைமலை அடிகள் என்றால், பரிதிமாற்கலைஞர் யார்?

சூரிய நாராயணன்

சூரிய நாராயண அடிகள்

சூரிய நாராயண சாஸ்திரி

சூரியனார்

 

82.  சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்றார் ஒருவர். அந்தக் கல்லூரியின் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுச் சொல்லுங்கள் என்று கேட்டார் அவர் அஃது எனக்குத் தெரியாது. என்று பதிலளித்தார். நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள் என்றார் பரிதிமாற்கலைஞர் தெரியாது என்று சொன்னவரை எப்படித் தேர்வு செய்யலாம்? என்று பிறர் கேட்டபோது அஃது என்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரம் எனக்கு என்பது வன்தொடர்க் குற்றியலுகரம் தெரியாது என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்று விளக்கினார் பரிதிமாற்கலைஞர். இந்நிகழ்வில் பரிதிமாற்கலைஞரையே வியக்க வைத்தவர் மறைமலையடிகள்.

பரிதிமாற்கலைஞருடனான நட்பு தனித்தமிழ் மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது.

பிறமொழிக் கலப்பு இன்றி இனிய எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார். சுவாமி வேதாசலம் எனும் தன்பெயரை மாற்றினார். இளம் வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த அடிகளார், ஞானசாகரம் (1902) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.

ஞானசாகரம் என்பதைத் தமிழ்ப்படுத்துக.

*அறிவுக்கடல்

ஞானக்கடல்

அறிவுச்சூரியன்

ஞானபானு

 

83.  சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்றார் ஒருவர். அந்தக் கல்லூரியின் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுச் சொல்லுங்கள் என்று கேட்டார் அவர் அஃது எனக்குத் தெரியாது. என்று பதிலளித்தார். நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள் என்றார் பரிதிமாற்கலைஞர் தெரியாது என்று சொன்னவரை எப்படித் தேர்வு செய்யலாம்? என்று பிறர் கேட்டபோது அஃது என்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரம் எனக்கு என்பது வன்தொடர்க் குற்றியலுகரம் தெரியாது என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்று விளக்கினார் பரிதிமாற்கலைஞர். இந்நிகழ்வில் பரிதிமாற்கலைஞரையே வியக்க வைத்தவர் மறைமலையடிகள்.

பரிதிமாற்கலைஞருடனான நட்பு தனித்தமிழ் மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது.

பிறமொழிக் கலப்பு இன்றி இனிய எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார். சுவாமி வேதாசலம் எனும் தன்பெயரை மாற்றினார். இளம் வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த அடிகளார், ஞானசாகரம் (1902) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.

மறைமலை அடிகள் எதன்மீது பற்று கொண்டிருந்தார்?

சங்கத்தமிழ்

தனித்தமிழ்

தமிழ்த்தொண்டு

தமிழ் இதழியல்

 

84.  சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்றார் ஒருவர். அந்தக் கல்லூரியின் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுச் சொல்லுங்கள் என்று கேட்டார் அவர் அஃது எனக்குத் தெரியாது. என்று பதிலளித்தார். நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள் என்றார் பரிதிமாற்கலைஞர் தெரியாது என்று சொன்னவரை எப்படித் தேர்வு செய்யலாம்? என்று பிறர் கேட்டபோது அஃது என்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரம் எனக்கு என்பது வன்தொடர்க் குற்றியலுகரம் தெரியாது என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்று விளக்கினார் பரிதிமாற்கலைஞர். இந்நிகழ்வில் பரிதிமாற்கலைஞரையே வியக்க வைத்தவர் மறைமலையடிகள்.

பரிதிமாற்கலைஞருடனான நட்பு தனித்தமிழ் மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது.

பிறமொழிக் கலப்பு இன்றி இனிய எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார். சுவாமி வேதாசலம் எனும் தன்பெயரை மாற்றினார். இளம் வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த அடிகளார், ஞானசாகரம் (1902) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.

அடிகலார் எழுதிய வரலாற்று நூல் எது?

சாகுந்தலம்

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

*மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

 

 

85.  சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்றார் ஒருவர். அந்தக் கல்லூரியின் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுச் சொல்லுங்கள் என்று கேட்டார் அவர் அஃது எனக்குத் தெரியாது. என்று பதிலளித்தார். நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள் என்றார் பரிதிமாற்கலைஞர் தெரியாது என்று சொன்னவரை எப்படித் தேர்வு செய்யலாம்? என்று பிறர் கேட்டபோது அஃது என்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரம் எனக்கு என்பது வன்தொடர்க் குற்றியலுகரம் தெரியாது என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்று விளக்கினார் பரிதிமாற்கலைஞர். இந்நிகழ்வில் பரிதிமாற்கலைஞரையே வியக்க வைத்தவர் மறைமலையடிகள்.

பரிதிமாற்கலைஞருடனான நட்பு தனித்தமிழ் மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது.

பிறமொழிக் கலப்பு இன்றி இனிய எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார். சுவாமி வேதாசலம் எனும் தன்பெயரை மாற்றினார். இளம் வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த அடிகளார், ஞானசாகரம் (1902) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.

பத்திக்குப் பொருத்தமான தலைப்பைத் தெரிக.

மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கமும்

*மறைமலை அடிகளின் தமிழ்த்தொண்டு

அடிகளும் பரிதிமாற்கலைஞரும்

வேதாச்சலம் மறைமலை ஆன கதை

 

86.    வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு -எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற நூல் எது

 சிறுபஞ்சமூலம்

நான் மணிக்கடிகை

புறநானூறு

*ஏலாதி

 

87. மதுரைக்காஞ்சி நூலின் சிறப்பு பெயர்களில் பொருந்தாததை தேர்வு செய்க

முக்கூடற்தமிழ்

*கடல் தமிழ்

கூடல் காஞ்சி

பெருகுவள மதுரைக்காஞ்சி

 

     88. பட்டினப்பாலை நூலை "  வஞ்சி நெடும்பாட்டு " என்று கூறும் நூல்

தென்றல் விடு தூது

*தமிழ்விடு தூது

கலிங்கத்து பரணி

கூத்தாற்றுப்படை

 

89. கபிலர் பாடிய பாடல்களின் பொருந்தாததை தேர்வு செய்க.

ஐங்குறுநூற்றில் குறிஞ்சித் திணை பாடல்களை பாடியுள்ளார்.

பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்து பாடல்களை பாடியுள்ளார்.

*முல்லைப்பாட்டு நூலின் பாடல்களை பாடியுள்ளார்.

கலித்தொகையில் உள்ள குறிஞ்சி கலியில் உள்ள 29 பாக்கள் பாடியுள்ளார்.

 

90. "காயா கொன்றை நெய்தல் முல்லை  போதவிழ் தளவமொடு பிடவலர்ந்து கவினி" - இவ்வடிகள் இடம் பெற்ற நூல்?

குறுந்தொகை

நற்றிணை

*ஐங்குறுநூறு

கலித்தொகை

 

 91. எட்டுத்தொகை நூல்களில் ‘நாடகப் பாங்கில்' அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக

குறுந்தொகை

அகநானூறு

*கலித்தொகை

ஐங்குறுநூறு

 

 92. கலித்தொகை நூலை தமிழ்ச் சான்றோர்கள் எவ்வாறு சிறப்பித்துக் கூறுவர்

நம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்

கற்றறியாதவர் ஏத்தும் கலி

*கற்றறிந்தார் ஏத்தும் கலி

நல்ல கலித்தொகை

 

 93. இசைப்பண்ணும், இசையமைத்தவர் பெயரும் குறிக்கப்பட்டுள்ள தமிழிலக்கியம்

நற்றிணை

புறநானூறு

ஐங்குறுநூறு

*பரிபாடல்

 

 94. "யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்' - இப்பாடலடிகள் இடம் பெற்ற சங்க நூல்

புறநானூறு

பட்டினப்பாலை

*அகநானூறு

மதுரைக் காஞ்சி

 

95. கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனைக் கூறும் நூல்?

பதிற்றுப்பத்து

*புறநானூறு

பரிபாடல்

நெடுநல்வாடை

 

96. பின்வரும் கூற்றுகளில் சரியானவை எது / எவை ?

1)    நெடுநெல்வாடை பாடலில் இருவகையில் பொருளை சிறப்பித்துக் கூறுகிறது.

2)    இந்நூலில் , தலைவனுக்கு நெடிய வாடையாக அமைகிறது

3)    இந்நூலில் ,தலைவிக்கு நல்வாடையாகவும் அமைகிறது

2,3 மட்டும் சரியானது

1,3 மட்டும் சரியானது

*1 மட்டும் சரியானது

2,3 தவறானது

 

 97. பத்துப்பாட்டில் " புனையா ஓவியம் " என்ற சிறப்பு பெயரை உடைய நூல்

கூத்தாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

*நெடுநல்வாடை

பட்டினப்பாலை

 

98. கூட்டுறை வயமாப் புலியோடு குழும" -  இவ்வடிகளை பாடியவர்?

 நப்பூதனார்

கபிலர்

*மாங்குடி மருதனார்

நக்கீரர்

 

 99. மதுரைக்காஞ்சி நூலின் சிறப்பு பெயர்களில் பொருந்தாததை தேர்வு செய்க

முக்கூடற்தமிழ்

*கடல் தமிழ்

கூடல் காஞ்சி

பெருகுவள மதுரைக்காஞ்சி

 

100. கூற்றுகளை ஆராய்க.

       கூற்று 1 : முல்லைப்பாட்டு நூல் 261 அடிகளை உடையது

14. கூற்று 2 : குறிஞ்சிப்பாட்டு நூல் 103 அடிகளை உடையது.

கூற்று ஒன்று மட்டும் சரி

கூற்று இரண்டு மட்டும் சரி

கூற்று இரண்டும் சரி

*கூற்று இரண்டும் தவறு

1 கீழ்க்கண்டவற்றுள் எந்த வரியானது நேரடி வரியாக கருதப்படுகிறது?

A) சொத்து வரி

B) வருமான வரி

C) தான வரி

*D) மேற்சொன்ன அனைத்தும்

 

2 தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

A 1955

B 1959

*C 1961

D 1965

 

3 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வது____?

A) குடியரசுத் தலைவர்

*B) பாராளுமன்றம்

C) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

D) உச்சநீதிமன்ற கொலிஜியம்

4. ராக்கெட் ஏவுதலில் -------- விதிகள் பயன் படுத்தப் படுகின்றன?

A. நியூட்டன் 3 ஆம் விதி

B. நியூட்டனின் போது ஈர்ப்பியல் விதி

C. நேர்கோட்டு உந்த மாறா விதி

D. A மற்றும் C

 

5 பொருத்துக :

சிந்து சமவெளி நகரங்கள் - அகழ்வாராய்ச்சியாளர்

(a) சன்ஹூ-தாரோ - 1. குர்ஜ் பான்

(b) லோத்தல் - 2. என்.ஜி. மஜும்தார்

(c) பனாவளி - 3. எஸ்.ஆர். ராவ்

(d) மிட்டாடல் - 4. பிஷ்ட்

(A) (a) - 2, (b) - 1, (c) - 4, (d) - 3

*(B) (a) - 2, (b) - 3, (c) - 4, (d) - 1

(C) (a) - 1, (b) - 3, (c) - 2, (d) - 4

(D) (a) - 1, (b) - 4, (c) - 3, (d) – 2

6 கீழ்கண்ட இடங்களில் பொருந்தாதது எது?

A அழகன்குளம்

B கொற்கை

C வசவ சமுத்திரம்

*d கொந்தகை

 

7. பின்வருவனவற்றுள் பொருந்தாத இணை எது ?

2. A. பசுமை தீர்ப்பாய சட்டம் 2010

B. நீர் பாதுகாப்பு சட்டமா 1974

C. வன பாதுகாப்பு சட்டம் 1980

*d. பல்லுயிர் பன்மை பாதுகாப்பு சட்டம் 2004

8 73 வது திருத்த சட்டம் குறித்த கூற்றுக்களை ஆராய்க.

கூற்று 1; பெண்களுக்கு நான்கில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது

கூற்று 2; இரண்டு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையை உடைய சிறு மாநிலங்களில் பஞ்சாயத்துக்கள் இரண்டடுக்கு முறையில் இயங்குகின்றன

கூற்று 3; உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்

A) கூற்று 1 மற்றும் 2 மட்டும் சரி

B) கூற்று 1 மற்றும் 3 மட்டும் சரி

*C) கூற்று 2 மற்றும் 3 மட்டும் சரி

D) கூற்று 3 மட்டும் சரி

9 ஒரு பொருளை வெப்பப் படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் இடையில் ஏற்படும் மாற்றம் --------.

 

A.  +

B.  -

*C.  0

D. இவற்றில் எதுவுமில்லை

10 வாயுறைவாழ்த்து என்று அழைக்கப்படும் நூல் எது?.

A குற்றாலக் குறவஞ்சி

B தேவாரம்

C திருவாசகம்

*D திருக்குறள்

 

11 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் எப்போது  நடைமுறைப்படுத்தப்பட்டது?

*A) 2 பிப்ரவரி 2006

B) 2 பிப்ரவரி 2007

C) 2 பிப்ரவரி 2008

D) 2 பிப்ரவரி 2009

12.  கீழ்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக.)

(A) சிவாஜியின் பாதுகாவலர் தாதாஜி கொண்டதேவ்

(B) சிவாஜி ராஜ்கோஷ் கோட்டையில் முடிசூட்டிக் கொண்டார்

*(C) சிவாஜியின் படை வீரர்கள் சூரத்தை 1665ல் சூறையாடினார்

(D) 1674-இல் சத்ரபதி எனும் பெயரில் முடிசூடினார்

13. நெய்தல் மீட்சி இயக்கம் எதனோடு தொடர்புடையது ?

A. கடற்கரை பாதுகாப்பு

*b. கடலோர வளங்கள் மீட்பு

C. வன பாதுகாப்பு

D. மேற்கூறிய அனைத்தும்

 

14) நிர்வாகத்தைப் பரவலாக்க வேண்டும் என்பதற்காகவே உள்ளாட்சி அமைப்புகளை _____ முறைப்படுத்தினார்.

*A) ரிப்பன் பிரபு

B) மார்லி பிரபு

C) வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு

D) ஹேஸ்டிங்ஸ் பிரபு

15. செயற்கை கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர் யார்?

A. பெக்கோரல்

*B. ஐரின் கியூரி

C. ரான்ட்ஜன்

D. நீல்ஸ்போர்

16 முகத்திரண்டு புண்ணுடையோர் என்று வள்ளுவர் யாரைக்- குறிப்பிடுகிறார்?

A கற்றோர்

B அறிவுடையோர்

*C கல்லாதவர்

D அறிவில்லாதவர்

 

17. சிம்ப்ளிபால் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது ?

A. மகாராஷ்டிரா

B. தமிழ்நாடு

*c.  ஓடிஸா

D. தெலுங்கானா

Saturday

 

 

18பொதுச்செலவின் புனித விதிகளை வழங்கியவர் யார்?

A) பேராசிரியர் ஆடம் ஸ்மித்

B) பேராசிரியர் சிராஸ்

*C) பேராசிரியர் மஸ்கிரேவ்

D) பேராசிரியர் பிகு

 19. இஸ்லாம், இந்து சமயம் உள்ளிட்ட பல்வேறு சமயங்களைச் சார்ந கூறுகள் தன் கல்லறையில் இடம்பெற வேண்டுமென வலியுறுத்தியவர் யார்?

அசோகர்

*(B) அக்பர்

(C) ஷாஜஹான்

(D) ஔரங்கசீப்

20) மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்_____பட்டியலை சார்ந்து அமைந்துள்ளது?

A) பட்டியல் 1 மற்றும் 2

*B) பட்டியல் 2 மற்றும் 3

C) பட்டியல் 2

D) பட்டியல் 3

21.  பாலில்லா இனப்பெருக்க முறையில் முத்து விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம்

 

A. அமீபா

*B. ஈஸ்ட்

C. பிளாஸ்மோடியம்

D. பாக்டீரியா

22) 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மனிதவலமேம்பாட்டுக் குறியிட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

*A) நார்வே

B) டென்மார்க்

C) இந்தியா

D) ஸ்பெய்ன்

 

23 இந்தியாவில் யாரால் தேசிய வருமானம் கணக்கிடும் முறை தயாரிக்கப்படுகிறது?

A) திட்டக்குழு

B) இந்திய ரிசர்வ் வங்கி

C) மத்திய நிதி அமைச்சகம்

*D) மத்திய புள்ளியியல் அமைப்பு

24. ) தவறான பொருத்தங்களைத் தேர்வு செய்க .

1. குத்புதீன் ஆய்பக் - லாக் பக்ஷா

2. இல்துமிஷ் - மாலிக் காபூர்

3. முகமது பின் துக்ளக் - அடையாள நாணயங்கள்

4. ஃபிரோஸ் துக்ளக் - நாற்பதின்மர் குழு

*(A) (2) மற்றும் (4)

(B) (2) மற்றும் (3)

(C) (1) மற்றும் (2)

(D) (1) மற்றும் (3)

25 இடும்பைக்கு இடும்பை படுப்ப –இதில் இடும்பை என்பதன் பொருள்?.

*A துன்பம்

B இன்பம்

C மகிழ்ச்சி

D அச்சம்

 

26. இந்திரா காந்தி கால்வாய் திட்டத்தில் பயன்பெறாத மாநிலம் எது ?

 A. பஞ்சாப்

 B. ஹரியானா

 C. ராஜஸ்தான்

 *d. தமிழ்நாடு

 

27) இந்திய நீதித்துறை அமைப்புகள் செயல்பாடுகளில் தமிழ்நாடு____இடம் வகிக்கிறது?

*A) 5 ஆவது இடம்

B) 2 ஆவது இடம்

C) 3 ஆவது இடம்

D) 1 ஆவது இடம்

 

28 எந்த வருடம் இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது?

A) 1934

B) 1933

*C) 1935

D) 1937

29 குப்தர் கால நிலவகைகளை கீழ்க்கண்டவற்றுடன் சரியாகப் பொருத்திடுக. (a) சேத்ரா - 1. தரிசு நிலம்

(b) கிளா - 2. வேளாண்மைக்கு உகந்த நிலம்

(c) அப்ரதகா - 3. குடியிருப்பதற்கு உகந்த நிலம்

(d) வஸ்தி - 4. வன நிலம்

(A) (a) - 1, (b) - 2, (c) - 3, (d) - 4

(B) (a) - 4, (b) - 2, (c) - 1, (d) - 3

*(C) (a) - 2, (b) - 1, (c) - 4, (d) - 3

(D) (a) - 3, (b) - 4, (c) - 1, (d) – 2

30. பாலிபேஜியா என்ற நிலை ------- ல் காணப்படுகிறது.

 

A. உடல்பருமன்

*B. டயாபடீஸ் மெலிடஸ்

C. டயாபடீஸ் இன்சிபிடஸ்

D. எயிட் ஸ்

    

31) கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க.

கூற்று 1; இந்திய நாடாளுமன்ற அமைப்பு அமெரிக்க நாடாளுமன்ற முறையை பின்பற்றி அமைந்துள்ளது.

கூற்று 2; அரசியலமைப்பின் பிரிவு 75 இல் குடியரசு தலைவருக்கு உதவ பிரதமர் தலைமையில் ஓர் அமைச்சரவை குழு இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது.

கூற்று 3; அரசியலமைப்பின் சரத்து 62 ல் குடியரசு தலைவரின் பதவி நீக்கம் குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

கூற்று 4; மக்களவை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 15 சதவீத உறுப்பினர்கள் மட்டுமே அமைச்சராக இருக்க வேண்டும்.

A) கூற்று 1 மற்றும் 4 மட்டும் சரி

கூற்று 1 மற்றும் 3 மட்டும் சரி

C) கூற்று 1, 2 மற்றும் 3 மட்டும் தவறு

*D) மேற்கண்டவற்றில் எதுவுமில்லை

32 பாளையக்காரர்களுக்கு மக்கள் செலுத்திய வரியின் பெயர் எண்ன?.

*A காவல் பிச்சை

B அரசு காவல் வரி

C மக்கள் குடியிருப்பு வரி

D சேவை வரி

 

33 பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையை காண்க .

A. என்னை வித்துக்கள் குஜராத்

*b. கரும்பு மத்திய பிரதேஷ்

C.  கம்பு ராஜஸ்தான்

D. சோளம் மகாராஷ்டிரா

 

34 மக்கள் தொகை மாற்றத்தின் இரண்டாவது நிலை கீழ்க்கண்ட எந்த இயல்பு உடையது?

A. அதிக பிறப்பு வீதமும் அதிக இறப்பு வீதமும்

*B. அதிக பிறப்பு வீதமும் குறையும் இறப்பு வீதமும்

C. குறைந்த பிறப்பு வீதமும் குறைந்த இறப்பு வீதமும்

D. குறைந்த பிறப்பு வீதமும் அதிக இறப்பு வீதமும்

35. . பொருத்துக

A. தமிழ்நாட்டின் ரூசோ 1. பெரியார்

B.ஆங்கிலப் பித்தர் 2. ராஜாஜி

C.தக்ஷிண  காந்தி 3. டி எம் நாயர்

D. மதுரைக் காந்தி 4.M N R  சுப்பராமன்

*A. 1 3 2 4.

b. 2 1 3 4.

c. 1 2 3 4.

d. 3 2 1 4.

36 1937ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் தலமைவகித்த சுயமரியாதை மாநாடு நடைபெற்ற பகுதி எது?.

A உறையூர்.

B செங்கல்பட்டு.

*C துறையூர்.

D காஞ்சிபுரம்.

 

37) ஆளுநரின் மறுத்தலிப்பு அதிகாரத்தில் தவறானதை தேர்வு செய்க.

A) மசோதாவைக் குடியரசுத் தலைவர் பார்வைக்கு அனுப்புதல்

*B) மசோதாவை நிறுத்தி வைத்தல்

C) மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தல்

D) மசோதாவை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புதல்

 

38 வேலுர் சிப்பாய்க் கலகத்திற்கு உடனடி காரணம் எது ?

A கொழுப்பு தடவிய துப்பாக்கி தோட்டாக்கள்

*B தலைப்பாகை

C உடை சீர்திருத்தம்

D மதம் சார்ந்த நடவடிக்கைகள்

 

39 இந்தியாவில் காடு வளர்க்கும் திட்டத்திற்காக கொடுக்கப்படும் இந்திரா பிரியதர்ஷினி விருட்ஷ மித்ரா விருது எந்த ஆண்டு முதல் கொடுக்கபட்டு வருகிறது?

A. 1984

B. 1985

*C. 1986

D. 1987

 40. .வட்டார மொழியில் கல்வி என்னும் கருத்தைக் கொண்டு விடிவெள்ளிக் கழகத்தை உருவாக்கியவர் யார் ?

A. சுரேந்திரநாத் பானர்ஜி

B. தாதாபாய் நவரோஜி

C. கோபால கிருஷ்ண கோகலே

*d. சதீஷ் சந்திர முகர்ஜி

41 ஒருபைசா தமிழன் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் யார்?

A தமோதரம் பிள்ளை.

*B அயோத்திதாச பண்டிதர்.

C ரெட்டைமலை சீனிவாசன்.

D மயிலை சின்னத்தம்பி ராஜா.

 

42) கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்வு செய்க.

கூற்று 1; 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று ஜெனிவாவில்  நடைபெற்ற ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட (பொது சபை தீர்மானம் 217A) இந்தப் பேரறிக்கை, அனைத்துலக நாடுகள் மற்றும் அனைத்துலக மக்களின் பொதுத்தர சாதனை ஆகும்.

கூற்று 2; மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் 30 உறுப்புகள் உள்ளன.

கூற்று 3; இவ்வுரிமைகள் இனம், பால், தேசியம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து மக்களுக்கும் பொருந்தும்

A) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

B) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

*C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

D) மேற்கண்ட அனைத்தும்

43) நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை அலிக்கும் மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்தவர் யார்?

*A) திவான் பகதூர் கிருஷ்ண நாயர்

B) சுப்புராயளு ரெட்டியார்

C) தியாகராய செட்டியார்

D) பனகல் ராஜா

44 சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு நடைபெற்ற ஆண்டு?.

A 1925

*B 1929

C 1930

D 1935

 

45 பதினான்காவது நிதிக்குழுவின் தலைவர் யார்?

A. ஏ.எம். குஷ்ரோ

*B. டாக்டர் ஒய்.வி. ரெட்டி

C. என்.கே.சால்வே

D. விஜய் கெல்கர்

46. ஒன்று பட்ட இந்தியாவானது சிறியதாக இருந்தாலும் ஒழுங்கற்ற குழப்பமான மற்றும்பலவீனமான பெரிய இந்தியாவை விட சிறந்தது எனக் கூறியவர் யார்

A. மகாத்மா காந்தி

B. ஜவகர்லால் நேரு

C. அன்னிபெசன்ட்

*d. சர்தார் வல்லபாய் பட்டேல்

47 1940ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்குகொண்ட பெண் யார்?.

A ராதாபாய்

*B சரஸ்வதி பாண்டுரங்

C அஞ்சலையம்மாள்

D பட்டம்மாள்

 

48) குடிமகன் என்ற சொல் ‘சிவிஸ் என்னும் ’_____   வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.

*A) இலத்தீன்

B) வடமொழி

C) பாரசீகம்

D) பிரெஞ்சு

49) கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு.

1) இந்துமத கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை முறைப்படுத்த இந்துசமைய அறநிலையச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

2) அரசு பணியாலர் தேர்வு செய்யப்படுவதை முறைப்படுத்த பணியாலர் தேர்வு வாரியம் கொண்டுவரப்பட்டது.

A) ஒன்று மட்டும் சரி

B) இரண்டு மட்டும் சரி

*C) இரண்டுமே சரி

D) இரண்டுமே தவறு

 

50 மக்கள் திட்டம் என்பதை உருவாக்கியவர் யார்?

A. மொகலானாபிஸ்

B. ஜவஹர்லால் நேரு

*C. எம்.என். ராய்

D. பி.எஸ். மின்ஹாஸ்

51 1944ஆம் ஆண்டுதிராவிடர் கழகம் என்ற பெயர் எந்த கட்சியின் பழைய பெயரில் இருந்து மாற்றம் செய்யப்பட்டது?>

a சுதேச கட்சி.

*B நீதிக்கட்சி.

C சுயராஜ்ய கட்சி.

D சுயமாரியாதைக் கட்சி.

 

52. பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையைக் காண்க .

A.a. விடுதலை 1935

*B. ரிவோல்ட் 1929

C.பகுத்தறிவு 1934

d. புரட்சி 1933

53) குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கு பெறாதவர்களைத் தேர்வு செய்க.

A) மாநிலங்களின் சட்டசபைகளுக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

B) டெல்லி மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

*C) மாநில சட்டமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

D) நாடாளுமன்றத்தின் ஈரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

 

54 அத்தியாவசிய பொருட்கள் சட்டம்" இந்தியாவில் சட்டமாக்கப்பட்ட ஆண்டு எது?

A. 1950

B. 1951

C. 1953

*D. 1955

55 வகுப்புவாத பிரதிநித்துவத்தின் தந்தை யார்?.

*A முத்தையா முதலியார்.

B சினிவாசனார்.

C பெரியார்.

d முனுசாமி நாயுடு.

 

56. உலக வரலாறு ஒரு பார்வை என்னும் நூலின் ஆசிரியர் யார்?

A. மோதிலால் நேரு

*b. ஜவஹர்லால் நேரு

C. சர்தார் வல்லபாய் பட்டேல்

D. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

57) தமிழகத்தில் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் முதன்முதலில் எந்த மாவட்டத்தில் துவங்கப்பட்டது?

A) சென்னை

*B) மதுரை

C) தேனி

D) திருவாரூர்

58 பனையோலையில் எழுதப்பட்ட பிரதிகளை புத்தகமாக பதிப்பித்து வெளியிட்டவர் யார்?

a வையாபுரி பிள்ளை.

B தமிழ்த் தாத்தா.

*C சீ.வை.தாமோதரம் பிள்ளை.

D தணிநாயகம் அடிகள்.

 

59) பின்வரும் கூற்றுகளில் சரியான கூற்றைத் தேர்வு செய்க.

கூற்று 1; இந்தியாவில் ஒழுங்குமுறைச் சட்டம் 1773 கூட்டாட்சி முறையின் தோற்றத்தை உருவாக்கியது.

கூற்று 2; உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் மட்டுமே கூட்டாட்சி வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தைப பெற்றுள்ளன.

கூற்று 3; அமெரிக்காவில் உள்ள பாரம்பரிய கூட்டாட்சி முறையிலிருந்து இந்தியக் கூட்டாட்சி முற்றிலும் வேறுபட்டுள்ளது.

A) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

*B) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

D) மேற்கண்ட அனைத்தும்

 

60 இந்தியாவில் விவசாய கடன் அட்டை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

A. 1996-97

B. 1997-98

*C. 1998-99

D. 1999-2000

61 ஜஸ்டிஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் யார்?.

*A டி.எம்.நாயர்.

B நடேசன்.

C சுப்ரமணியன்.

D தியாகராஜர்.

 

62) கீழ்க்கண்ட சரியான கூற்றுக்களை ஆராய்க.

கூற்று 1; அரசியலமைப்பு சரத்து 32 இன் கீழ் அடிப்படை உரிமைகளைக் காக்க உச்ச நீதிமன்றம் கட்டாயமாக நீதிப்பேராணைகளை வெளியிட வேண்டும்.

கூற்று 2; உயர் நீதிமன்றம் நீதிப்பேராணைகளை அடிப்படை உரிமைகள் மற்றும் சட்ட உரிமைகளுக்கும் என இரண்டிற்கும் வழங்குகிறது.

கூற்று 3; நீதிப்பேராணைகள் வழங்கும் அதிகாரமானது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு மட்டுமே உரித்தானது மற்ற நீதிமன்றங்களுக்கு விரிவுபடுத்த இயலாது.

*A) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

B) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

D) மேற்கண்ட அனைத்தும்

63 அகில இந்திய முதல் இசை மாநாடு நடைபெற்ற இடம் எது?.

A சென்னை.

B செங்கல்பட்டு.

C மதுரை.

*D தஞ்சாவூர்.

 

64 எந்த வரிவிதிப்பு முறையில் வரி விகிதமும் வரி ஆதாரமும் நேரடி தொடர்பு கொண்டவை?

 

A. விகிதச்சார வரி

*B. வளர்வீத வரி

C. பின்னோக்கிச் செல்லும் வரி

D. படிப்படியாகச் செல்லும் வரி

65) அரசியலமைப்பின் சரத்து 356 ஐ மிகக் குறைவாகவும் கடைசி ஆயுதமாகவும் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும் என_____குழு பரிந்துரை செய்துள்ளது?

*A) சர்க்காரியா குழு

B) ராஜமன்னார் குழு

C) வெங்கடாசலய்யா குழு

D) அனந்தையா குழு

 

66 எம்டன் என்ற கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்த்து?.

A ஜப்பான்.

B மலேசியா.

C சிங்கப்பூர்.

*D ஜெர்மன்.

 

67 வரி தாங்கும் திறன் என்பது நாட்டில் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்கின்ற வரிச் சுமையாகும் என்பதை விளக்கியவர் யார்?

A. பேராடிரியர் மஸ்கிரேவ்

*B. பேராசிரியர் ஜோசையா ஸ்டாம்ப்

C. பேராசிரியர் ஷிராஸ்

D. பேராசிரியர் ஆடம் ஸ்மித்

68) வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் கீழ்க்கண்ட எந்த முறையில் அடிப்படையில் இந்திய குடியுரிமை பெற முடியும்?

A) மரபு அல்லது வம்சாவளி

B) பதிவு செய்தல்

*C) இயல்பு முறை

D) பிரதேச இணைவு

69 தமிழ் அகராதியைத் தொகுத்தவர் யார்?.

A வீரமாமுனிவர்.

B மீனாம்பிகை.

C ஆறுமுக நாவலர்.

*D நீலாம்பிகை.

 

70 நேரு-மகலனோபிஸ் வளர்ச்சி மாதிரியான எந்த ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?

A. முதலாம் ஐந்தாண்டுத் திட்டம்

*B. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம்

C. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்

D. நான்காம் ஐந்தாண்டுத் திட்டம்

71) கண்ணியமாக வாழ்வதற்கும் வசிப்பதற்கும் இந்திய அரசியலமைப்பின்______பிரிவு வழிவகை செய்கிறது.

A) பிரிவு 14                

B) பிரிவு 17

C) பிரிவு 19

*D) பிரிவு 21

72 சேலம் விஜயராகவாச்சாரி தலமைவகித்த காங்கிரஸ் மாநாடு எது?.

A சென்னை.

*B நாக்பூர்.

C லக்ணோ.

D மும்பை.

 

73 கீழ்க்கண்டவற்றுள் எது பொதுத்துறை நிறுவனமாக் கருதப்படுகிறது?

A. FCI - இந்திய உணவுக் கழகம்

B. FCI - இந்திய உரக் கழகம்

C. JCI - இந்திய சணல் கழகம்

*D. மேற்சொன்ன அனைத்தும்

74) சேலம் ஜவ்வருசிக்கு புவிசார் குறியிடு வழங்கப்பட்ட ஆண்டு எது?

A) 2021

B) 2022

*C) 2023

D) 2024

75 முடிசூடும் பெருமாள் என்ற இயர்பெயர் கொண்டவர் யார்?.

*A வைகுண்ட சுவாமிகள்.

B அயோத்திதாச பண்டிதர்.

C ராமலிங்க அடிகள்.

D நாரயண குரு.

 

1.பின்வரும் தொடர் வரிசையில் ?-ன் மதிப்பு காண்க. 123, 98, 88, 73, 69, ?.

 

                (A)          49

*              (B)          68

                (C)          52

                (D)          57

 

2.பின்வரும் தொடரில் விடுபட்ட எண்ணைக் காண்க. 1, 2, 6, 15, ---------, 56, 92.

 

                (A)          30

                (B)          32

                (C)          34

*              (D)          31

3.A@34%ENM$86&LDS#986QYZ17%ROG@21B2V&

கொடுக்கப்பட்டுள்ள தொடரில் எத்தனை எழுத்துகளுக்கு உடனடி முன்னால் ஒரு எண்ணும் உடனடி அடுத்ததாக ஒரு குறியீடும் உள்ளன?

மூன்றுக்கு மேல்

*ஒன்று

இரண்டு

மூன்று

4.2x+3=0 என்ற பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டின் மூலம் காண்க.

1/3

-1/3

*-3/2

-2/3

5.ஓர் ஈரிலக்க எண்ணில், ஒன்றாம் இட இலக்க எண், பத்தாம் இட இலக்க எண்ணைப்போல் இருமடங்காக உள்ளது. இலக்கங்கள் இடம் மாறினால் கிடைக்கம் புதிய எண் கொடுக்கப்பட்டஎண்ணைவிட 27 அதிகம் எனில், கொடுக்கப்பட்ட ஈரிலக்க எண்ணைக் கண்டுபிடிக்க.

63

*36

93

39

6.x=ya,y=zb, மேலும் z=xc எனில் abc யின் மதிப்பு என்ன?

*1

0

2

-1

7.6 மீ 24 செ.மீ நீளம் மற்றும் 4 மீ 80 செ.மீ அகலம் கொண்ட ஓர் அறையின் தரைக்கு சலவைக் கற்கள் போட வேண்டுமானால் தேவைப்படும் மிகக் குறைந்த எண்ணிக்கை ஒத்த சலவைக் கற்கள் எத்தனை?

 

            (A)       122

*          (B)       130

            (C)       148

            (D)       165

     (E)    விடை தெரியவில்லை

8.ஒரு லிட்டர் என்பது எதற்கு சமம்?

 

            (A)       1 Cu.cm

            (B)       10 Cu.cm

            (C)       100 Cu.cm

*          (D)       1000 Cu.cm

     (E)    விடை தெரியவில்லை

9.அளக்கப்பட்ட ஆரத்தின் மதிப்பு 1.5% நீளமானது எனில் கோளத்தின் கன அளவைக் கணக்கிடும் பொழுது ஏற்படும் பிழையின் சதவிகிதம் என்ன?

 

            (A)       2.1%

            (B)       3.2%

*          (C)       4.6%

            (D)       5.4%

     (E)    விடை தெரியவில்லை

10 ஆண்கள் அல்லது 8 பெண்கள் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார்கள் எனில் 9

ஆண்களும் 12 பெண்களும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?

*(A) 4 நாட்கள்

(B) 3 நாட்கள்

(C) 6 நாட்கள்

(D) 5 நாட்கள்

(E) விடை தெரியவில்லை

11X, Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4, 6 மற்றும் 10 நாட்களில் முடிப்பர். X, Y

மற்றும் Z ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அதற்காக அவர்களுக்கு

ரூ.3,100/- வழங்கப்படும் எனில் அவர்கள் தனித்தனியே பெறும் பங்குகளைக் காண்க.

(A) 1000:1500:600

(B) 1500:600:1000

*(C) 1500:1000:600

(D) 600:1000:1500

(E) விடை தெரியவில்லை

12A ஒரு வேலையை 9 மணி நேரம் கொண்ட 7 வேலை நாட்களிலும் B அதே வேலையை 7

மணி நேரம் கொண்ட 6 வேலை நாட்களிலும் முடிக்கக் கூடும். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு

நாளைக்கு 8 2/5 மணி நேரம் வேலை செய்தால் அவ்வேலையை முடிக்க எவ்வளவு காலம்

எடுப்பார்கள்?

(A) 4 நாட்கள்

(B) 5 நாட்கள்

*(C) 3 நாட்கள்

(D) 4 ½ நாட்கள்

13 ஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு 2100 சதுர மீட்டர்கள். அந்த நிலத்தின் நீளம் 60

மீட்டர்கள் எனில் அதன் சுற்றளவு என்ன?

(A) 180 மீட்டர்

(B) 210 மீட்டர்

(C) 240 மீட்டர்

* (D) 190 மீட்டர்

14 38 மீ நீளம் மற்றும் 32 மீ அகலம் கொண்ட ஒரு செவ்வக மனையின் உட்புறம் சீரான அகலம்

உள்ள பாதை தெரிகிறது. அதன் பாதை 600 .மீ இடத்தை அடைத்துக்கொள்ளும் எனில் அந்த

பாதையின் அகலம் என்ன?

* (A) 5 மீ

(B) 10 மீ

(C) 18.75 மீ

(D) 30 மீ

15 ஒரு நேர்வட்ட கூம்பின் உயரம் 200% அதிகரிக்கப்பட்டு அதன் அடிப்பக்க ஆரம் 50%

குறைக்கப்பட்டால் அந்த கூம்பின் கன அளவு

(A) மாற்றம் இருக்காது

* (B) 25% குறையும்

(C) 25% அதிகரிக்கும்

(D) 50% குறையும்

16 ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 8% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி

மற்றும் தனி வட்டி ஆகியவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் ரூ.768/-. அந்த தொகை என்ன?

(A) ரூ.1,00,000/-

(B) ரூ.1,10,000/-

*(C) ரூ.1,20,000/-

(D) ரூ.1,70,000/-

17 ரூ.P தொகையில் R% வட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டி மற்றும் கூட்டு

வட்டி ஆகியவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் எவ்வளவு?

(A) ரூ.PR/100

(B) ரூ.2PR/100

(C) ரூ.PR2/100

* (D) ரூ. PR2/(100)2

18 முதல் வருடத்திற்கு வட்டி விகிதம் 4%, இரண்டாவது வருடத்திற்கு வட்டி விகிதம் 5% மற்றும்

மூன்றாவது வருடத்திற்கு 6% வட்டி விகிதம் எனில் ரூ.10,000/-க்கு 3 வருடங்களில் கிடைக்கும்

கூட்டு வட்டி எவ்வளவு?

*(A) ரூ.1,575.20/-

(B) ரூ.1,600/-

(C) ரூ.1,625.80/-

(D) ரூ.2,000/-

19ஒரு பொருளின் விலை 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்ந்தது எனில் உயர்வு சதவீதம்

(A) 5/4 %

(B) 4/5 %

(C) 20 %

 

*(D) 25 %

20 75% ன் பின்னம்

*(A) 3/4

(B) 4/3

(C) 75/10

(D) 0.75

21 ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில் 420 பேர் மாணவிகள், பள்ளியில் உள்ள

மாணவர்களின் சதவீதம் காண்க.

(A) 30 %

*(B) 70 %

(C) 50 %

(D) 80 %

223, 4, 5, 6 மற்றும் 8 ஆல் வகுபடும் மிகச்சிறிய வர்க்க எண்
(A) 900

(B) 1200

(C) 2500

(D)* 3600

23 15, 24, 32 மற்றும் 45-ஆல் வகுக்கும் பொது முறையே 8, 17, 25, 38 மீதிகள் கிடைக்கும்படியான மிகச்சிறிய எண்
(A) 1447

 (B) 1440

(C)* 1443

 (D) 1433

24 இரு முழு எண்களின் வித்தியாசம் 72. அந்த இரு எண்களின்

விகிதம் 3:5 எனில் அந்த இரு எண்களை காண்க.

*(A) 108, 180

(B) 110, 182

(C) 114, 186

(D) 106, 178

25 ஒரு குடும்பத்தின் வரவுக்கும் செலவுக்கும் இடையே உள்ள

விகிதம் 7:6 மற்றும் வரவு ரூ.21,000/- எனில் சேமிப்பு

(A) ரூ.6,000

(B) ரூ.5,000/-

*(C) ரூ.3,000/-

(D) ரூ.4,000/-